Jaffnagate

Jaffnagate

Share

01/31/2026

எலுமிச்சை – மிளகாய் தொங்கவிடும் அறிவியல் காரணம்

நம் வீடுகளில் எலுமிச்சை, பச்சை மிளகாய் கட்டி தொங்கவிடுவது ஒரு பழக்கம். இது மூடநம்பிக்கை மட்டும் அல்ல; அறிவியல் காரணமும் உள்ளது.

• பச்சை மிளகாயில் உள்ள வாசனை ஈக்கள், கொசுக்கள் அருகே வராமல் தடுக்க உதவும்.

• எலுமிச்சையில் இருக்கும் அமிலத்தன்மை கிருமிகள் வளர்வதை குறைக்கும்.

• இந்த இரண்டின் சேர்க்கை வீட்டின் வாயிலில் இயற்கை பாதுகாப்பாக செயல்படும்.

• காற்றில் உள்ள ஈரப்பதத்தை குறைக்கவும் இது சிறிதளவு உதவுகிறது.

அதனால் தான் பழங்காலத்திலிருந்தே இந்த பழக்கம் தொடர்கிறது.
இது ஒரு எளிய, குறைந்த செலவு கொண்ட இயற்கை பாதுகாப்பு முறையாகும்.





#இயற்கைமுறை
#ஆரோக்கியவீடு
#பாரம்பரியஅறிவு
#வீட்டுஉதவிக்குறிப்புகள்

Photos from Jaffnagate's post 01/31/2026

அண்மையில் நடந்த பாரிய விபத்திலிருந்து மயிரிழையில் உயிர்தப்பிய சித்திரா Chithira Kandasamy அவர்களின் உருக்கமான பகிர்வு!

28.01.2026 ஆம் திகதி யாழ்ப்பாணம் இருந்து வவுனியா நோக்கி சென்ற இ. போ. ச.பேருந்து கண்டி வீதி கரடிப்போக்கு சந்திக்கு அருகாமையில் டிப்பர் வாகனத்துடன் பாரிய விபத்துக்குள்ளா கியது. இதில் நானும் பேருந்தில் சாரதியின் ஆசனத்திற்கு பின்புறமுள்ள முதலாவது இருக்கையில் பயணம் செய்தேன். பேருந்து சாரதியின் திறமையினாலும் கடவுளின் அனுக்கிரக்கத்தினாலும் உயிர்ச்சேதம் ஒன்றும் இல்லை.
இரு வாகனங்களின் சாரதியும், இன்னொரு பயணியும் காயங்களுக்கு உள்ளாகினர். மேலும் எனக்கு சிறு காயம் மற்றும் உடலில் உட்காயம் ஏற்பட்டது. நான் பேருந்தில் இருந்து இறங்குவதற்கு சிரமப்பட்டேன். பலமாக அடிபட்டதால் மூச்செடுக்க சிரமப்பட்டேன். அதில் வேடிக்கை பார்த்தவர்கள் சிலரிடம் எனக்கு இயலாமை இருக்கு தலைசுற்றுகிறது சொல்லியும் அந்த நேரம் யாரும் உதவிசெய்யவில்லை. நான் மெதுவாக வீதியின் ஓரத்தில் இருந்த ஆசனத்தில் உட்கார்ந்தேன். தண்ணீர் அருந்தி சில நிமிடத்தில் யாரும் என்னை வைத்தியசாலைக்கு கூட்டிச்செல்லவில்லை. எல்லோரும் புகைப்படம், வீடியோ எடுப்பதில் அக்கறையாக நின்றார்கள்.
எனது அலுவலகத்திற்கு தொலைபேசி எடுத்து அவர்களின் உதவியுடன் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது. அங்கு காயமடைந்த மூவரும் அனுமதிக்கப்படிருந்தனர். எமது உத்தியோகாத்தர்கள் மற்றும் அங்கிருந்த வைத்தியர்கள் தொடக்கம் சுகாதார சேவை சிற்றூழியர்கள் வரை எனக்கு பல வழிகளில் உதவி செய்தார்கள். அவர்களிற்கு மிகவும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். மிக்க நன்றி 🙏🙏🙏
மேலும் கூறுகின்றேன் வேடிக்கை பார்ப்பது, சமூக வலைத்தளத்தில் யார் முதலில் போடுவதை தவிர்த்து பாதிக்க பட்டவர்களுக்கு முதலில் உதவி செய்யுங்கள்.🙏
யார் மனதையும் நான் புண்படுத்துவதற்காக
இதனை பதிவிடவில்லை. அந்த நேரம் நான் பட்ட துயரம் சொல்லமுடியவில்லை. 🙏
மீண்டும் பேருந்து சாரதிக்கும் கடவுளுக்கும் நன்றி 🙏🙏🙏🙏🙏

01/26/2026

வியாபாரத்தில் ஈடுபடும் சகலருக்குமான முக்கிய அறிவித்தல்

*காசோலை தொடர்பான புதிய சட்டம்*

மக்களுக்கான சட்ட விழிப்புணர்வு
- சட்டத்தரணி சுல்தான் ஜென்சீர் BA, LLB, MSc psychology, Attorney-at-Law

இலங்கையின் நிதி மற்றும் வணிக பரிவர்த்தனைகளில் காசோலைகள் (Cheques) முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஆனால், போதிய பணமின்றி காசோலை வழங்குதல், தெரிந்தே திரும்பும் காசோலைகளை வழங்குதல் போன்ற செயல்கள் வணிக நம்பிக்கையை பாதித்து வந்தன.

இவ்வகை மோசடிகளைத் தடுக்கவும், நிதி ஒழுக்கத்தை உறுதிப்படுத்தவும், 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சான்றளிக்கப்பட்ட 2025 இன் 13 ஆம் இலக்க மாற்றுண்டியல் (திருத்தச்) சட்டம் (Bills of Exchange (Amendment) Act, No. 13 of 2025) மூலம் இலங்கையின் காசோலைச் சட்டங்கள் குறிப்பிடத்தக்க அளவில் கடுமையாக்கப்பட்டுள்ளன.

இந்த புதிய சட்டத்தின் முக்கிய சிறப்பம்சம் என்னவெனில், வங்கியால் பணம் வழங்கப்படாமல் திருப்பி அனுப்பப்படும் காசோலைகள் (Cheque Bounce) இனி ஒரு சாதாரண சிவில் பிரச்சினையாக அல்லாமல், குற்றவியல் குற்றமாக (Criminal Offence) கருதப்படுகின்றன. இதன் மூலம், காசோலை வழங்கும் நபரின் சட்டப் பொறுப்பு மிகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

*குற்றமாக கருதப்படும் சந்தர்ப்பங்கள்:*

2025 சட்டத் திருத்தத்தின் படி, கீழ்க்கண்ட காரணங்களுக்காக ஒரு காசோலை வங்கியால் நிராகரிக்கப்பட்டால், அது குற்றவியல் குற்றமாகும்.

1. வங்கிக் கணக்கில் போதிய பணம் இல்லாமை,
2. அனுமதிக்கப்பட்ட overdraft எல்லையை மீறுதல்,
3. கணக்கு மூடப்பட்ட நிலையில் காசோலை வழங்குதல்,

4. முறையான சட்டப்பூர்வ காரணமின்றி “Stop Payment” உத்தரவு வழங்குதல்

ஆகியவை அனைத்தும் இப்போது குற்றங்களாகக் கருதப்படுகின்றன.



*தண்டனைகள்:*

இந்த சட்டத்தின் கீழ் ஒருவர் குற்றவாளியாகக் காணப்பட்டால், அவருக்கு கடுமையான தண்டனைகள் விதிக்கப்படலாம்.

1. காசோலையில் குறிப்பிடப்பட்ட முழுத் தொகைக்கு சமமான அபராதம் விதிக்கப்படலாம்.
2. அதிகபட்சம் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்படலாம்.

அபராதமும் சிறைத்தண்டனையும் இரண்டும் சேர்த்தும் விதிக்க நீதிமன்றத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இது காசோலை வழங்கும் நபர் மிகுந்த பொறுப்புடன் செயல்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறது.

*சட்ட நடவடிக்கை எடுக்கும் முறை மற்றும் காலக்கெடு*:

பாதிக்கப்பட்ட நபர் (பணம் பெற வேண்டியவர்) இந்த சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க குறிப்பிட்ட காலக்கெடுகளை பின்பற்ற வேண்டும்.

அறிவித்தல்:
காசோலை திரும்பி வந்த நாளிலிருந்து 90 நாட்களுக்குள் காசோலை வழங்கியவருக்கு எழுத்துப்பூர்வமான கோரிக்கை அறிவித்தல் (Notice) அனுப்பப்பட வேண்டும்.

அவகாசம்:
அந்த அறிவித்தல் கிடைத்த நாளிலிருந்து மேலும் 90 நாட்கள் பணம் செலுத்த அவகாசம் வழங்கப்பட வேண்டும்.

இந்த காலக்கெடு முடிந்தும் பணம் செலுத்தப்படாவிட்டால், அதன் பின்னர் 30 நாட்களுக்குள் நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர வேண்டும்.

*இலகுவான சாட்சிய முறை:*

இச்சட்டத்தின் (Section 82D) கீழ், நீதிமன்றத்தில் ஒரு காசோலை வழக்கை நிரூபிப்பதற்கான சாட்சியங்கள் மிகவும் எளிமையாக்கப்பட்டுள்ளன.
நீதிமன்றத்தில் நீங்கள் சமர்ப்பிக்க வேண்டிய முக்கிய சான்றுகள்:

1. வங்கித் தகவல் குறிப்பு (Bank Return Memo): காசோலை ஏன் திருப்பி அனுப்பப்பட்டது (பணம் போதாமை, கணக்கு மூடப்பட்டமை போன்றவை) என்பதைக் காட்டும் வங்கியின் உத்தியோகபூர்வ குறிப்பு.

2. வைப்புச் சீட்டு (Deposit Slip): நீங்கள் காசோலையை வங்கியில் வைப்புச் செய்ததற்கான அத்தாட்சி.

3. காசோலை (Original Cheque): வங்கியினால் நிராகரிக்கப்பட்ட அசல் காசோலை.

*சட்டப்பூர்வ ஊகம் (Presumption of Liability)*:

புதிய சட்டத்தின் மிக முக்கியமான அம்சம் இதுவாகும்.
காசோலையை வழங்கியவர், ஒரு சட்டப்பூர்வமான கடனை அடைப்பதற்காகவே அதை வழங்கினார் என நீதிமன்றம் தானாகவே முன்முடிவு (Presumption) செய்யும்.
அதாவது, "நான் இவருக்கு பணம் தர வேண்டியதில்லை" என்பதை காசோலை வழங்கியவரே நிரூபிக்க வேண்டும். பணம் பெற வேண்டியவர் கடனைப் பற்றி நீண்ட விளக்கம் அளிக்கத் தேவையில்லை.

*அறிவித்தல் அனுப்பியதற்கான சான்று (Proof of Notice)*
வழக்குத் தாக்கல் செய்யப்படுவதற்கு முன், நீங்கள் 90 நாட்களுக்குள் காசோலை வழங்கியவருக்கு அறிவித்தல் அனுப்பியதை நிரூபிக்க வேண்டும்.
பதிவுத் தபால் பற்றுச்சீட்டை (Registered Post Receipt) அனுப்பப்பட்டதற்கான அத்தாட்சியாக காட்டலாம்.

மின்முறை சான்றுகள் (Digital Evidence): புதிய நடைமுறைகளின்படி, வாட்ஸ்அப் (WhatsApp) அல்லது மின்னஞ்சல் (Email) மூலம் அனுப்பப்பட்ட அறிவித்தல்கள் "வாசிக்கப்பட்டது" (Blue Tick/Read Receipt) என உறுதிப்படுத்தப்பட்டால், அதையும் சில நிபந்தனைகளின் கீழ் சான்றாகப் பயன்படுத்த முயற்சிக்கலாம்.

*நீங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கத்தக்க 'ஆவணத் தொகுப்பு'*:

உங்கள் வழக்கின் வெற்றியை உறுதிப்படுத்த பின்வருவனவற்றைத் தயாராக வைத்திருப்பது அவசியம்:

1. அசல் காசோலை.
2. வங்கியின் காசோலை திரும்புதல் குறிப்பு (Return Memo).
3. 90 நாட்களுக்குள் அனுப்பப்பட்ட கோரிக்கை கடிதத்தின் பிரதி (Letter of Demand).
4. அக்கடிதம் சென்றடைந்ததற்கான அத்தாட்சி (Registered Post Acknowledgement).

முக்கிய குறிப்பு: புதிய சட்டத்தின் கீழ், இந்த ஆவணங்கள் இருந்தாலே குற்றம் நடந்ததற்கான முதற்கட்ட ஆதாரம் (Prima facie case) உறுதியாகிவிடும். இதனால் காசோலை வழங்கியவர் வழக்கை இழுத்தடிக்க முடியாது.

*இந்த சட்டத் திருத்தத்தின் முக்கிய நோக்கம்*:
வணிக உலகில் நம்பிக்கையை ஏற்படுத்துவதும், நிதி ஒழுக்கத்தை வளர்ப்பதும் ஆகும். காசோலை வழங்குவது ஒரு சாதாரண கையெழுத்து அல்ல; அது ஒரு சட்டபூர்வ வாக்குறுதி என்பதை மக்களுக்கு உணர்த்துவதே இந்தச் சட்டத்தின் அடிப்படை நோக்கமாகும். இதன் மூலம், மோசடி நடவடிக்கைகள் குறையும் என்றும், நேர்மையான வணிக நடைமுறைகள் ஊக்குவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

*முடிவாக, 2025 காசோலை சட்டம் இலங்கையின் நிதி மற்றும் சட்ட அமைப்பில் ஒரு முக்கிய திருப்புமுனையாகும்.* காசோலை பயன்படுத்தும் ஒவ்வொருவரும் இந்த சட்டத்தை நன்கு அறிந்து, பொறுப்புடன் செயல்பட வேண்டும். இல்லையெனில், ஒரு சிறிய அலட்சியம் கூட பெரிய பிரச்சினையாக மாறும் அபாயம் உள்ளது. எனவே, “பணம் இருக்கும்போது மட்டுமே காசோலை” என்பதே இன்றைய காலத்தின் சட்டப் பாடமாகும்.

சட்டத்தரணி சுல்தான் ஜென்சீர்.
Kindly share this to your network.

Want your business to be the top-listed Media Company in West?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Address


West