Lakshmi Tamil Learning Center

Lakshmi Tamil Learning Center

Share

மனத்தை ஆண்ட லட்சுமி தமிழ்ப் பள்ளி ஆண்டு விழா | Dinasudar 04/20/2024

மனத்தை ஆண்ட லட்சுமி தமிழ்ப் பள்ளி ஆண்டு விழா | Dinasudar செய்திகள்உலக செய்திகள்மனத்தை ஆண்ட லட்சுமி தமிழ்ப் பள்ளி ஆண்டு விழா By Newsroom_Dinasudar - April 16, 2024 FacebookTwitterWhatsAppEmail அட்லாண்டா ஏப்ரல் ...

03/27/2024

லட்சுமி தமிழ் பயிலும் மையம் - 37ஆம் ஆண்டு விழா!

"லட்சுமி தமிழ் பயிலும் மையம்" திருமதி. லஷ்மி ஷங்கர் அவர்களால் அட்லாண்டாவில் 1987ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. அவரது தலைமையில் இப்பள்ளி இன்று 23 தன்னார்வல ஆசிரியர்கள், அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, டென்மார்க், லக்சம்பர்க், ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலிருந்து பயிலும் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆதரவளிக்கும் பெற்றோர்கள் எனத் தழைத்தோங்கி நிற்கிறது.

37ஆம் ஆண்டு விழாவில்:
பன்னாட்டு மாணவமணிகளின் பல்சுவை நிகழ்ச்சி

நிகழ்ச்சித் தொகுப்பு: திருமதி. ஜெயலட்சுமி வெங்கடேசன்

விழாத் தலைமை: நல்லாசிரியர் அனுசுயாதேவி (கவிஞர் அனுமா)
- பன்முகத் திறமையாளர்
- தமிழ்நாடு 3, 4, 5ஆம் வகுப்புத் தமிழ்ப் பாட நூல் ஆசிரியர் குழு உறுப்பினர்
- பல விருதுகள் பெற்றவர்
- வளவனூர் சாலையம்பாளையம் தொடக்கப்பள்ளி ஆசிரியர்
- மாணவர்களுக்கு அடிப்படைக் கல்வி அளிப்பது, வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்துவது, நல்வழக்கங்களைக் கற்றுக் கொடுப்பது, கலைகளைப் பயிற்றுவிப்பது போன்ற சிறப்பான பணி
- 30 ஆண்டுகளாகச் சமூகப்பணி

சிறப்புரை: "குழந்தைகளைக் கொண்டாடுவோம்"

"உயிரனைய குழந்தைகளும் உள்ளம் நெகிழும் புத்தகங்களும்" என்பதைத் தம் விருப்பமாகக் கொண்டுள்ள நல்லாசிரியர் எங்கள் தமிழ்ப்பள்ளி ஆண்டு விழாவிற்குத் தலைமை ஏற்பதில் நாங்கள் மிகவும் பெருமையும் உவகையும் கொள்கிறோம்.

நாள்: சனிக்கிழமை, மார்ச் 30, 2024
அமெரிக்கா: காலை 10 - பிற்பகல் 12:30 மணி (கிழக்கு நேரம்)
இந்தியா: இரவு 7:30 - 10 மணி

விழாவைக் காண:
https://tinyurl.com/Youtube-LTS-AnnualDayProg2024

- ஆசிரியர்களும் மாணவர்களும்
லட்சுமி தமிழ் பயிலும் மையம்

10/18/2023

*அட்லாண்டா லட்சுமி தமிழ்ப் பள்ளி மாணவன் செல்வன். ஹரிசரணின் ஆத்திசூடிக் காணொளி*

இவ்வாண்டு எங்கள் அட்லாண்டா லட்சுமி தமிழ்ப்பள்ளி ஆண்டு விழாவுக்குத் தலைமை தாங்கிய கவிஞர் நெல்லை அன்புடன் ஆனந்தி, வாசிப்பின் தேவையை மாணவர்களுக்கு எளிய முறையில் எடுத்துரைத்தார். அத்தோடு மாணவர்களுக்கென, தமிழால் இணைவோம் உலகத் தமிழ்ப் பேரியக்கம் [ Tamilal Inaivom - UTP] நிறுவனர்/இயக்குனர் கவின் கலைவேந்தர் சத்யநாராயண ராஜ் பாலகுரு அவர்களின் ஆத்திசூடி நூல் படிகளை (130) அன்பளிப்பாக அனுப்பி வைத்தார். இந்நூல் எழுத்தாக்கத்தில் ஆனந்தி உதவியுள்ளார். இந்நூலில் ஆத்திசூடிக்கான உரையும் விளக்கமும் குழந்தைகளுக்கு எளிதில் புரியும் வகையில் எழுதப்பட்டுள்ளன.

இந்நூலைப் பயன்படுத்தி, எங்கள் பள்ளியின் தன்னார்வ ஆசிரியர் திருமதி. ஜெயலட்சுமி, தம் மகன் செல்வன். ஹரிசரணுக்கு ஆத்திசூடி கற்பித்துள்ளார். செல்வன். ஹரிசரண் ஆத்திசூடியை மனனம் செய்து ஒப்பிக்கும் காணொளியில் லட்சுமி தமிழ்ப்பள்ளி பெருமை கொள்கிறது! மகனுக்கும் தாயாருக்கும் மனமகிழ் வாழ்த்துகள்!

ஆத்திசூடி நூலைப் பரிசளித்த சகோதரி ஆனந்திக்கும், நூலாசிரியர் கலைவேந்தர் சத்யநாராயண ராஜ் பாலகுரு அவர்களுக்கும் மீண்டும் எங்கள் நன்றி!

Want your school to be the top-listed School/college in Norcross?
Click here to claim your Sponsored Listing.

Category

Address


4798 Buford Highway
Norcross, GA
30071

Opening Hours

11am - 2pm