Ifan Anaas
நகர சபை வழக்கு நீ சாட்சி இல்லை...!!
நகர சபையே நீயே சாட்சி..!!
சாய்ந்தமருதுக்கு ஏதோ ஒரு உள்ளூராட்சி சபை என்ற கோஷம் தான் இருந்தது.
அது பிரதேச சபை அல்ல, நகர சபை என்று கூறியவர் அதாஉல்லா...
கல்முனை பரிபோகாமல் அனைவரும் சமமாக வாழ நான்காக பிரிக்கும் யோசனையை முன்வைத்தவர் அதாஉல்லா...
2015இல் பள்ளிவாசலோ ஊரோ கேட்காமல், சிராஸின் காலத்தில் வர்த்தமானி வெளியிட்டவர் அதாஉல்லா.
அதனைத் தடுத்தவர்கள் ரிஷாத் மற்றும் ஹக்கீம் குழுவினர் (கல்முனைப் பள்ளியின் வேண்டுகோள்)
2020இல் மஹிந்த தலமையில் இடம்பெற்ற கூட்டத்தில் சாய்ந்தமருது சார்பாக யாருமே இல்லாத சந்தர்ப்பத்தில், அதாஉல்லா நின்றார், இது தான் பிரச்சினை இது தான் தேவை என்று கூறினார்.
வர்த்தமானி வெளிவந்தது...
மரிக்கார் ஹிருனிக்கா போன்றோர் தடுக்க ரிஷாத் ஹக்கீம் போன்றோர் ஒரே அணியில் இருந்து வாய் மூடி வேடிக்கை பார்த்தனர்.
அந்த நேரம் உண்மையை உடைத்திருந்தால் இவ்வளவு இழுபறி வந்திருக்காது...
கோத்தா அதாஉல்லாவுடம் நெருக்கமில்லை,
மஹிந்த தான் நெருக்கம்.
சரியான நேரம் பார்த்து அதாஉல்லா கிடப்பில் போட்டார்.. கோத்தா அரசு கவுன்றது.
ரணில் அரசில் வழக்குத் தாக்கல் செய்திருந்த நிலையில், பொதுத் தேர்தலின் போது சலீம் டிஸ் வியூகம் ரீவி நேர்காணலில் கூறினார் 'செல்லுபடியற்ற கெஸட் ' என்று.
பின்னர் அவரே வெற்றி கொண்டாடுகிறார்.
எது எப்படியோ...
சபை தறுவோறுக்கு சந்ததி வரை வாக்களிப்போம் என்பது சாய்ந்தமருது பள்ளிவாசலின் சத்தியம்..
ஆனால் நான் ரிஷாத்தோட நிக்கனே தம்பி எப்படி அதாஉல்லாக்கு போட சொல்ற??
அப்பா அதாஉல்லாஹ்ட பிழை ஒன்றை கண்டுபிடிக்கனும் என்பதே 'நகர சபை வழக்கே நீயே சாட்சி ' என்னும் முனாபிக் தனம்.
இதே வர்த்தமானியை ஹக்கீம் ரிஷாத் கொண்டுவந்திருந்தால்....
பார்க்க தேவல்ல வாப்போ..
இந்நேரம் பெரிய ஊர்வலமே நடந்திருக்கும்.
அதாஉல்லா சாய்ந்தமருதுக்கு ஏலவே கண்க்க செய்துட்டார் வாப்பா... நீங்க நன்றி செய்து கடுமையா கிழிச்ச...
உங்கட வாக்க நீங்க ரிஷாத்துக்கு போடுங்கோ...
உங்கட சத்தியம் எனும் சபத்தை NPPக்கு காட்டுங்கோ..
நன்றி மறந்த மருதூரானாய் நானும் இல்லை எனபதற்கான வரலாற்றுப் பதிவு இது..
சலீம் காக்கா நீங்க அரசியல்ல நல்லா வருவிங்க மாஷா அல்லாஹ் 👏
குறிப்பு:
✅ அதாஉல்லா வர்த்தமானி கொண்டுவந்த..
✅ அதாஉல்லா வர்த்தமானி பொய் என்டு சொன்ன... 😂
✅ அதாஉல்லா தடுத்த, ரிஷாத் ஹகீம் கடுமையா பாடுபட்ட... 😂
✅ அவன் கொண்டுவந்த சபைல நாங்க ரோஷமில்லாம எலக்கிஷன் கேப்பம்.
✅ வழக்குப் போட ரணில் 05 லட்சம் தந்த ஆனால் அதாஉல்லாக்கும் இதுக்கும் சம்பந்தமில்ல 😂
✅ அதாஉல்லா தான் தந்த ஆனா அவர் வழக்க தடுத்த so அவரு துரோகி.. 😂
✅ Last but not least,,,NPP தான் சபைய கட்டித் தந்த 😆so அவங்களுக்கு தான் வோட்டு..
Open ஆ சொல்லுங்க
எங்களுக்கு அதாஉல்லாக்கு வோட்டு போட ஏலா..
வெளக்கம் முடிஞ்சி..
சுத்தி வளைக்க தேவல்ல சலீம் காக்கா..
ALM Athaullah Alm Saleem
Mhm Ibrahim
"எலி கொழுத்து பூனையை கல்யாணம் முடிக்க கூப்பிடுதாம்"
அரசியல் காற்றுப் பட்டவர்கள் தொட்டு அரசியல் புயலில் புழுதி தழுவியர்கள் வரை இவ்வார பேசு பொருளாகியுள்ளது அதா+ஹகீம் இணைந்த அனர்த்த மறுசீரமைப்பு முயற்சி.
இதற்கு முன்னர் முஸ்லிம் சமூகம் சந்தித்த அவல நிலைகளின் போது சேராத இவர்கள் ஏன் சேரந்தார்கள்??
ஹக்கீமின் பின்னால் சென்று அதா ஏன் வேலை செய்ய வேண்டும்??
இதனை அரசியல் இணைவாக பலர் விமர்சிப்பது ஆச்சரியமானவை அல்ல..
தர்கா நகர் கலவரம் தொட்டு ஜனாஸா எரிப்பு வரையுள்ள அவல நிலைகளுடன் அதா+ஹக்கீமின் இணைவை தொடர்புபடுத்துவது என்பது புரிதலில் பிரிதல் உள்ளது என்பதே உண்மை.
மேற்கூறிய சம்பவங்கள் அவர்கள் இணைந்து ஒன்றாக பயணிக்க வேண்டும் என்ற அவசியத்தை உணர்த்தி நின்றாலும், ஒவ்வொருவரும் அவரவர் கொள்கைகள், அனுபவம், மற்றும் இயலுமைகளின் அடிப்படையில் அவர்களாலான முயற்சிகளை செய்தார்கள், அரசியலும் செய்தார்கள்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் இணையாதது போல் இப்போதும் இடம்பெற்றிருந்து, இன்னுமொறு இன்னலில் இணைந்திருந்தால் அதனையும் கேள்விக்குற்படுத்தியிருப்பீர்கள்.
மேற்கூறிய விடயங்கள் அரசியல் சதுரங்கம் மற்றும் அரசாங்க அசைவுகளோடு சம்பந்தப்பட்டவைகள் மாறாக ஒரு இயற்கை பேரழிவின் நிர்க்கதி நிலமை இல்லை என்பதை விமர்சகர்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
இரண்டாவது விடயம், அதாஉல்லா ஹக்கீமின் பின்னால் சென்று வேலை செய்ய வேண்டிய அவசியமில்லை போன்ற விடயங்களை அதாஉல்லா ரசிகர்களின் விமர்சனப் பார்வையாக கண்டேன்.
விமர்சகர்கள் முதலில் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்.
இது அரசியல் இணைவோ கூட்டணியோ அல்ல. இது ஒரு இயற்கை பேரனர்த்தமும் பேரழிவும். இதில் இனம் மதம் சார்ந்த பாகுபாடுகளைத் தவிர்த்து ஓர் உண்மையான உணர்வுமிக்க இலங்கையனாக செயற்படுதல் என்பதே நோக்கம். (எண்ணமே வாழ்வு)
இது அதாஉல்லாஹ் ஹக்கீமின் கள வேலையாக இருந்தாலும், அரசாங்கத்திற்கு ஏதோவொரு வகையில் ஏதோ ஒரு பாரமும் குறைகிறது.
அதாஉல்லா மற்றும் அவரது அணியினர் மூதூரிற்கும் சென்று இயலுமான உதவிகளைச் செய்கின்ற நிலையில்; (இந்த அணியை எனது மண்ணிற்காக மக்களுக்காக ஏன் நான் பாவிக்கக் கூடாது) என்று ஹக்கீம் அவர்கள் உதவி கேட்டார், அதாஉல்லா கரம் நீட்டினார் (உங்கள் ஈன விமர்சனம் போன்ற ஈன அரசியல்வாதி அல்லாத) அதாஉல்லா இப்போது ஒரு மாநகர மேயர் என்ற அடிப்படையில் தனது மாநகராட்சி பொறுப்பினை ஓர் இலங்கையனாக முன்னெடுக்கறார்.
பாதிப்புகளுக்குள்ளான கொழும்பு கம்பஹா திருகோணமலை பதுளை கண்டி குருணாகலை போன்ற மாவட்டங்களில் உதவி கேட்க முடியாத நிலையில்; சுனாமியை மிஞ்சிய பேரழிவின் காரணமாக மேயராக இருக்கும் அதாஉல்லாஹ்வின் அனுபவ உதவியையும் அவரது மாநகர உதவியையும் ஹக்கீம் நாடியிருப்பது அரசியல் பார்வைகளுக்கு அப்பாற்பட்ட மனித நேயத்தோடு சம்பந்தப்பட்டது.
ஹக்கீமோடு சேர்ந்து வேலை செய்ய வேண்டிய அவசியமில்லை என்பதற்கு இது ஒன்றும் அரசியல் சார்ந்த விடயம் அல்ல. இது ஒரு நிர்க்கதி நிலை. (பெறும் துயர்)
விமர்சனம் செய்யும் நீங்கள் யார் என்றால்,,,??
அதாஉல்லா சேர்ந்து வேலை செய்கிறாரா அல்லது ஹக்கீம் அதாஉல்லாஹ்வின் உதவியை நாடி காரியங்கள் நடக்கின்றனவா என்ற நிதர்சன யதார்த்ததை கணிக்க முடியாத மலடுகள் நீங்கள்.
ஒரு அரசியல் இணைவு என்ன அது எந்த முறையில் எச்சந்தர்ப்பத்தில் இடம்பெறும் என்பதை தெரிந்தும் தெரியாமல் இருக்கும் குண்டுச் சட்டிகள் நீங்கள்.
தேர்தல் கூட்டனி என்றாலென்ன அது எந்த அடிப்படையில் என்ன நோக்கத்திற்காக இடம்பெறும்,அது காலத்தின் தேவையா இல்லையா என்பதை தெரிந்தும் தெரியாமல் இருக்கும் மந்தைகள் நீங்கள்.
மனித நேய ஒத்தாசைகளுக்கு ஒத்துப் போகாத இசைந்து போகாத பூனை எலி என கல்யாணக் கதையாடும் மடந்தைகள் நீங்கள்.
இயற்கை அழிவுகளில் இன்னல் படும் மக்களுக்கு கள விஜயம் சென்று கரம் நீட்டாமல் சொத்த புத்தகத்தில் செய்தி சொல்லும் பிச்சைக்காரர்கள் நீங்கள்.
அரசியல் Vs உதவி என்றால் என்ன என்பதை பாகிஸ்தானுக்கு வான் கரம் நீட்டிய இந்தியாவிடம் கேளுங்கள். நிர்க்கதியில் வேறுபாடு பாகுபாடு மற்றும் உயிரைக் கூட பார்க்கக் கூடாது என்பதை உணர்த்திய செல்லப் பிராணி பிரியர்களிடம் கேளுங்கள். இவற்றை பிரித்தரியத் தெரியாக குருடர்கள் நீங்கள்.
கலந்து இணைதல் கறைந்து இணைதல் என்ற பகுத்தறிவை வகுக்கத் தெரியாத ஜாஹிலிய்யா நீங்கள்.
நிற்க;
ஏதோ ஒரு நோக்கத்தின் அடிப்படையில் முஸ்லிம் தலைமைகள் இணைந்த கூட்டனி எதிர்காலத்தில் அமையெப்பெற்றால்,ஆளும் தரப்பிற்கான ஆதரவுகள் இன்னும் அதிகரிக்கும் என்பதை அதாஉல்லா போன்ற கொள்கைவாதிகள் புரிந்திருப்பார்கள் என நினைத்து முற்றுப் பெறுகிறேன்.
ALM Athaullah
Rauff Hakeem
AL Thavam
30/05/2025
Welcome to a fashioned outlet specialized for kids wear....
Shuraif Ahamed
🔴Live: கல்முனை மாநகரில் புதியதோர் உதயம் Coco Bell திறப்பு விழா சிறப்பு நிகழ்ச்சி...
📅30.05.2025 🕰️4.30 PM
அதிகம் பகிருங்கள்
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Riyadh