Sitharkal Ulagam

Sitharkal Ulagam

Share

11/03/2025

🙏🏽குருவே சரணம் நற்பவி🙏🏽
🙏🏽தனஞ்செயனே போற்றி🙏🏽

இறைவன் எல்லோருக்கும் எல்லாம் கொடுப்பதில்லை என்பது தவறான சிந்தனை..இறைவன் யாரிடமும் பாரபட்சம் காட்டுவதில்லை.. எல்லோருக்கும் சமமாகவே கொடுக்கிறான்..ஆனால் அதை பெறுவதில் தான் நாம் வித்தியாசப்படுகிறோம்..

நம் சிந்தனைகளாலும் செயல்களாலும் இறைவன் கொடுப்பதை பெறுவதில் நாம் வித்தியாசப்படுகிறோம்..அவ்வளவுதான்..

எல்லாம் பெறுவதற்கு உண்டான எல்லா தகுதிகளும் இருப்பவர்க்கே மனிதப்பிறவி அமைகிறது..நமக்கு எல்லாம் பெறுவதற்கு தகுதி இருக்கிறது என்பது மட்டும் நம்மால் புரிந்துகொள்ள முடிவதில்லை..

உங்கள் எண்ணங்களால் மட்டுமே உங்கள் வாழ்க்கை கட்டமைக்கப்படுகிறது..உங்களுக்கு தேவையானதை நீங்களே விதித்துக்கொள்கிறீர்கள்..

இறைவன் மங்களகரமானவன் என்றால் அன்பின் வடிவம் என்றால் அவனுக்கு நன்மையை மட்டுமே கொடுக்க தெரியும் என்பது தான் உண்மை..நமக்கான தீமைகளை நாம் தான் உருவாக்குகிறோம்..

ஆகச்சிறந்த படைப்பாளியான இறைவன் தான் படைத்த அனைத்திற்கும் தேவையான அனைத்தையும் சேர்த்தே படைத்துவிட்டான் என்பது தான் சாத்தியமான உண்மை..

உங்களுக்கு என்ன தேவை என்பதை புத்திசாலித்தனமாக தீர்மானியுங்கள்..அதை நீங்கள் தேடவேண்டாம் அதுவே உங்களை நோக்கி வரும்..ஆம் ஒத்தவை ஒத்தவற்றையே ஈர்க்கும்..

நன்றிகள் நற்பவி
தனஞ்செயனே போற்றி
அன்புடன்
முனைவர் போகர் வசீகரன்
போகர் சித்தாந்த சபை
அமரபூண்டி
பழனி

27/10/2024

🙏🏼குருவே சரணம் நற்பவி🙏🏼
🙏🏼தனஞ்செயனே போற்றி 🙏🏼

🌷அமுதமொழி 🌷

உலகில் நீங்கள் முக்கியமான மனிதனாக இருப்பது பெரிய விஷயமல்ல. ஆனால் முக்கியமான பெரிய விஷயம் நீங்கள் மனிதனாக இருப்பது தான்..மனிதம் இருப்பவர் மட்டுமே மனிதனாக இருக்க முடியும்..

பிறர்க்கு கொடுக்க பணம் இல்லை என்று வருந்தாதீர்கள். பணத்தை கொடுப்பவர் மட்டுமே வள்ளல் என்றில்லை..கொடுக்கும் குணத்தில் தான் ஒருவர் வள்ளலாக முடியும்.. பிறரைக் கெடுக்கும் குணம் உங்களிடம் இல்லை என்றால் குணத்தில் நீங்கள் தான் கோடீஸ்வரர்

பணத்தை விட அதிக மதிப்புடையது மகிழ்ச்சி அதை யாரும் உங்களுக்கு கடனாகக் கூட தரமாட்டார்கள்.ஆனால் நீங்கள் அதை நிறைய கொடுங்கள்..ஏனெனில் கொடுப்பவை பன்மடங்காக திரும்ப கிடைக்கும்.

உங்களுக்கு தெரிந்தது மிகவும் குறைவு என்பதை புரிந்து கொள்ள நீங்கள் பலரை கடந்து செல்லுங்கள். பாடங்கள் தராத அறிவினை பயணங்கள் தந்துவிடும்.

ஆற்றில் வெள்ளம் வந்து செல்லும்போது தான் தான் நதிகள் சுத்தமாகும். வாழ்க்கையில் துன்பங்களை வந்து சென்ற பிறகு தான் மனது தெளிவடைகிறது...இன்பத்தில் குதூகலிக்கும்..ஆனால் துன்பத்தில் மட்டும் தான் மனம் ஞானம் அடையும்..

சலனம் இல்லாத நீரில்தான் பிம்பம் தெளிவாக தெரியும். மனம் அமைதியாக இருந்தால் தான் புத்தி தெளிவாக இருக்கும்.புலன்கள் ஆரோக்கியமாக இருப்பவருக்கு மனமும் ஆரோக்கியமாக இருக்கும்.

என்ன வருமோ என ஒவ்வொரு நிமிடமும் சந்தேகத்துடனும் பயத்துடனும் இருப்பவர்கள் தான் வாழும் வாழ்க்கையின் நிம்மதியை தொலைக்கிறார்கள்.. வருவது வரட்டும் வாழ்ந்து காட்டுவோம் என்ற மன உறுதி இருப்பவர்கள் ஒவ்வொரு நிமிடத்திலும் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்.

நன்றிகள் நற்பவி
தனஞ்செயனே போற்றி
அன்புடன்
போகர் சித்தாந்த சபை
பழனி
9488008816

17/10/2024

🙏🏼குருவே சரணம் நற்பவி 🙏🏼
🙏🏼தனஞ்செயனே போற்றி 🙏🏼

தடைகளை உற்று உற்றுப் பார்க்காதீர்கள்.. அதனால் உங்கள் குறிக்கோளை அடைய முடியாமல் போகலாம். குறிக்கோளை உற்றுப் பாருங்கள் தடைகள் மறைந்துவிடும் உத்வேகம் தானாக வரும்.

முயற்சிகளை விதைத்தவுடன் வெற்றிகள் முளைப்பதில்லை முயற்சியை விடாமல் பயணம் செய்து கொண்டேயிருந்தால் வெற்றிகள் வெகுதூரமில்லை.

உங்களால் முடியாது என முடிவு செய்யப்பட்டு முடங்கிவிட்டால் அது வேதனையில் முடியும். என்னால் எதுவும் முடியும் என்று எழுந்துவிட்டால் அதுவே சாதனையாக மாறும்.

தளராத இதயம் கொண்டவனுக்கு இவ்வுலகில் முடியாதது என்று எதுவுமே இல்லை.

படைத்தவன் நம்மை உலகிற்கு அனுப்பும் போதே அழுகையோடுதான் அனுப்பி வைக்கிறான். வழி நெடுகும் விழ வைத்து தான் நடை பழக்கினான்..அதனால் அழுகையும் விழுவதும் நமக்கு புதிதல்ல.. எழுந்திருங்கள் வெற்றிக்காக ஒருமுறை முயற்சிப்போம்..

கஷ்ட காலங்களின் வலிகளை கடந்தால் தான் நம்மால் எதையும் துணிந்து எதிர் கொள்ளக் கூடிய வலிமையை பெற முடியும்.வாழ்வில் ஒவ்வொருவருக்கும் கடினமான காலங்கள் உண்டு. அதை கடந்து வந்தால் தான் நல்ல பாதைகளை காண முடியும்.

கடினம் என நினைத்தால் கரைசேரமுடியாது. கடந்து பார்ப்போம் என நினைத்து முன்னேறுங்கள். உங்களால் எதையும் அடைய முடியும்.

பணத்தை வைத்து எந்தவொறு உறவையும், நட்பையும் தாழ்வாக கருதாதீர்கள். ஏனெனில் வாழ்க்கை யாருக்கும் நிரந்தரம் இல்லாதது நொடியில் எதுவும் மாறிவிடும்.

நீங்கள் எவ்வளவு உயர்ந்தவர் என்பது உங்கள் பிறப்பிலோ, படிப்பிலோ அல்லது உங்கள் பணத்திலோ, அறிவிலோ அல்லது உங்கள் புகழ்ச்சியிலோ இல்லை. மற்றவர்களை நீங்கள் எப்படி மதிக்கிறீர்கள் என்பதில் தான் உள்ளது.

எவ்வளவு பேர் மதிக்கும் படி வாழ்ந்தோம் என்பதை விட, எவ்வளவு பேரின் மனதில் வாழ்ந்தோம் என்பதே முக்கியம்.

நமது திறமைகளையும், ஆற்றல்களையும் மனநிறைவிற்காகவும் பலரது அமைதிக்காகவும் செலவழித்தால் அதுதான் உண்மையில் ஆனந்தமான வாழ்வாகும்.

நன்றிகள் நற்பவி
தனஞ்செயனே போற்றி
அன்புடன்
போகர் சித்தாந்த சபை
பழனி
9488008816

Want your business to be the top-listed Gym/sports Facility in George Town?
Click here to claim your Sponsored Listing.

Category

Address


Pengkalan Weld, Pulau Pinang
George Town
10300

Opening Hours

Monday 10:00 - 17:00
Tuesday 10:00 - 17:00
Wednesday 10:00 - 17:00
Thursday 10:00 - 17:00
Friday 10:00 - 17:00
Saturday 10:00 - 17:00