SP/ MR/ Assafa M.V
12/01/2026
வருடாந்த பரிசளிப்பு விழாவும் பிரியாவிடை நிகழ்வும் - 2025
மாறை / அஸ்ஸபா மஹா வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழாவும், இடமாற்றம் பெற்றுச் சென்ற கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கான பிரியாவிடை நிகழ்வும் 31.12.2025 அன்று பாடசாலையின் பிரதான மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இதில் பிரதம அதிதியாக திரு. U. M. நலின் ஜயமினி (வலயக் கல்வி பணிப்பாளர், அகுரெஸ்ஸ), கௌரவ அதிதியாக திரு. கயந்த வன்னிகே (கோட்ட கல்விப் பணிப்பாளர், வெலிப்பிட்டிய) மற்றும் சிறப்பு அதிதிகளாக திரு. M. A. M. மஷாஹிர்(நலீமி) (பிரதி கல்வி பணிப்பாளர்– தமிழ் மொழி மூலம், தென் மாகாணம்), திரு. அஜ்மல் சத்தார்
(உள்ளூராட்சி சபை உறுப்பினர் – வெலிகாமம்) ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில், உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகிய மாணவர்களுக்கு பணப்பரிசில்கள் வழங்கப்பட்டன. மேலும், 5ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிகளுக்கு மேலான புள்ளிகளைப் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
அத்தோடு, 5ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் ஊக்குவிப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. இவ்வருடம் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
மேலும், இடமாற்றம் பெற்றுச் சென்ற ஆசிரியர்களுக்கும் கல்விசாரா ஊழியர்களுக்கும் அவர்கள் பாடசாலைக்கு ஆற்றிய அர்ப்பணிப்பான சேவைகளை பாராட்டி நினைவுப் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். அதேபோல், தமிழ் மொழித் தினப் போட்டியில் முஸ்லீம் நிகழ்ச்சியை பயிற்றுவித்த கலாபூஷணம் திரு. ஸப்வான் ஆசிரியர் அவர்களுக்கும் சிறப்பு கௌரவம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வு பல்வேறு கலை நிகழ்ச்சிகளால் மெருகூட்டப்பட்டு, இனிதே நிறைவுற்றது.
05/01/2026
புதிய கல்விச் சீர்திருத்தம் - 2026
தரம் 6ல் இஸ்லாம் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான பயிற்சி செயலமர்வு தென்மாகாண கல்வித் திணைக்களத்தினால் 2025.11.25-27, 2025.12.01வரை மாறை /அஸ்ஸபா மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது. இதில் தென் மாகாணத்தைச் சேர்ந்த அனைத்து இஸ்லாம் பாட ஆசிரியர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
20/11/2025
உளவளக் கருத்தரங்கு - 2025
மாறை/அஸ்ஸபா மகா வித்தியாலயத்தின் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட “உளவளக் கருத்தரங்கு” 06.11.2025 அன்று எமது பாடசாலையின் பிரதான மண்டபத்தில் திட்டமிட்டபடி மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் தலைமை பேச்சாளராக கலந்துகொண்ட உளவள நிபுணர் Dr. Manoos Aboobakkar அவர்கள் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்காக ஆழ்ந்த கருத்துடனான, அறிவார்ந்த மற்றும் வழிகாட்டும் உரைகளை வழங்கினார்.
மாணவர்களின் மனநலம், கல்வி செயல்திறன், சமூகப் பொறுப்புணர்வு மற்றும் வாழ்வுத் திறன் மேம்பாடு ஆகிய துறைகளில் விழிப்புணர்வை உருவாக்கும் வகையில் இக்கருத்தரங்கு பயனுள்ளதாக அமைந்தது. ஆசிரியர்களும் பெற்றோர்களும் பெரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வை சிறப்பாகத் திட்டமிட்டு ஒருங்கிணைத்து, வெற்றிகரமாக முன்னெடுத்த எமது பாடசாலை நிர்வாகத்தினருக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
04/11/2025
அரச சுற்றறிக்கைக்கு இணங்க, நூலக வாரத்தை முன்னிட்டு தேசிய வாசிப்பு மாதம் – ஒக்டோபர் 2025 “புத்தகம் வாசிப்போம், உலகை வெல்வோம்” என்ற தொனிப்பொருளின் கீழ், கடந்த வாரம் எமது பாடசாலையில் தேசிய வாசிப்பு வார நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன.
வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கில் இடம்பெற்ற வகுப்பு மட்டப் போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டதுடன், மாணவர்கள் தங்கள் பங்களிப்பாக பாடசாலை நூலகத்திற்கு நூல்கள் வழங்கி வைத்தனர்.
22/10/2025
சுதக்ஷினாபிஷேக 2025 விருதுகள் 💐
தென்மாகாண கல்வித் திணைக்களத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருது வழங்கும் நிகழ்வில் க.பொ. த. சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் அடிப்படையில் கடந்த 5 வருட காலமாக தேசிய மட்டத்தினை தாண்டிய பெறுபேறுகளைப் பெற்றுக்கொண்டமைக்காக இன்றைய தினம் 22.10.2025 எமது பாடசாலை மாறை/அஸ்ஸபா மகா வித்தியாலயம் சுதக்ஷினாபிஷேக-2025 விருதினை பெற்றுக்கொண்டது.
Sudhakshinabhisheka 2025 Awards 💐
At the awards ceremony organized by the Southern Provincial Department of Education, MR/Assafa Maha Vidyalaya was honored with the Sudhakshinabhisheka 2025 Award on 22.10.2025, in recognition of its remarkable achievement of maintaining results that exceeded the national level in the G.C.E. Ordinary Level examination over the past five years.
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the school
Website
Address
Weligama