Muhammad Hamza
07/04/2026
வரலாறு என்பது வெறும் கடந்த கால நிகழ்வுகளின் தொகுப்பு மட்டுமல்ல மாறாக அது எதிர்காலத்தைக் கணிப்பதற்கான ஒரு பாடமாகவும் பயன்படுகிறது.
இன்று நாம் மத்திய கிழக்கில் காண்கின்ற போர், ஏதோ தற்செயலாக நிகழ்ந்த ஒன்றல்ல. இது பல தசாப்தங்களாக நிலவி வந்த கட்டமைப்பு ரீதியான அழுத்தங்களின் வெடிப்பால் உருவானது.
இந்தப் போர் எவ்வாறு முடிவுக்கு வரும் என்பதைப் புரிந்துகொள்ள, உணர்ச்சிகளைத் தள்ளிவைத்துவிட்டு, அதிகார அரசியலின் தர்க்கத்தை (Logic of Power Politics) நாம் உற்றுநோக்க வேண்டும்.
எந்தவொரு போரும் அதன் புவியியல் மற்றும் தொழில்நுட்பக் கூறுகளால் தீர்மானிக்கப்படுகிறது.
தற்போதைய சூழலில் மூன்று முக்கிய உண்மைகள் ஈரான்- அமெரிக்க போரின் போக்கை தீர்மானிக்கின்றன.
1-வான்வழி ஆதிக்கத்தின் எல்லை
2-பொருளாதார சமச்சீரற்ற தன்மை (Asymmetric Warfare)
3-எரிசக்தி நெருக்கடி
அமெரிக்கா வான்வழியில் அசைக்க முடியாத வலிமையைக் கொண்டுள்ளது. ஆனால், வரலாற்று ரீதியாக எந்தவொரு நாடும் வெறும் வான்வழித் தாக்குதலால் மட்டும் பணியவைக்கப்பட்டதில்லை.
வியட்நாம் முதல் ஆப்கானிஸ்தான் வரை சிறப்பாக பாடம் கற்றுக கொண்டது அமெரிக்கா.
ஈரானின் நிலப்பரப்பு மற்றும் அதன் நிலத்தடி இராணுவக் கட்டமைப்பு, அமெரிக்காவின் இலக்கை ஒருபோதும் அடைய விடாது.
ஈரான் பயன்படுத்தும் ஒரு சில ஆயிரம் டாலர் மதிப்புள்ள ட்ரோன்களை வீழ்த்த, அமெரிக்கா பல மில்லியன் டாலர் மதிப்புள்ள ஏவுகணைகளை ஏவ வேண்டியுள்ளது. இந்தச் செலவு நீண்ட காலத்திற்குத் அமெரிக்காவால் தாக்குப் பிடிக்க முடியாதது.
ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) வழியாக உலகின் 20% எண்ணெய் செல்கிறது. இந்தப் போர் நீடிக்கும் ஒவ்வொரு நாளும் உலகப் பொருளாதாரம் ஒரு மாபெரும் மந்தநிலையை நோக்கித் தள்ளப்படுகிறது.
இந்தப் போரின் இறுதி முடிவு, அமெரிக்கா தனது தரைப்படையை ஈரானுக்குள் இறக்குகிறதா இல்லையா என்பதைப் பொறுத்தே அமையும்.
அமெரிக்கா தரைப்படையை அனுப்பாமல், வான்வழித் தாக்குதல்களோடு போரைத் தொடர்ந்தால், ஒரு கட்டத்தில் பொருளாதார அழுத்தம் மற்றும் உள்நாட்டு அரசியல் நெருக்கடி காரணமாகப் போரை நிறுத்த வேண்டிய சூழல் ஏற்படும்.
"நாங்கள் எங்கள் இலக்குகளை அடைந்துவிட்டோம்" என்ற ஒரு அரசியல் பிரகடனத்துடன் அமெரிக்கா தனது படைகளைத் திரும்பப் பெறலாம்.
இது அமெரிக்காவிற்கு ஒரு தற்காலிகத் தீர்வாக இருந்தாலும், மத்திய கிழக்கில் அதன் ஆதிக்கம் முடிவுக்கு வருவதையே குறிக்கும்.
ஒருவேளை அமெரிக்கா ஈரானுக்குள் தரைப்படையை அனுப்பினால், அது ஒரு மாபெரும் 'சவக்குழி'யாக மாறும்.
90 மில்லியன் மக்கள் தொகை கொண்ட, மலைப்பாங்கான ஒரு நாட்டில் தரைப்போர் என்பது பல தசாப்தங்களுக்கு நீடிக்கக்கூடியது.
இது அமெரிக்காவின் பொருளாதாரத்தை நிலைகுலையச் செய்வதுடன், அந்த நாட்டில் ஒரு கட்டாய இராணுவச் சேவையை (Draft) அமல்படுத்த வேண்டிய சூழலை உருவாக்கும்.
இது அமெரிக்காவிற்குள் ஒரு உள்நாட்டுப் போர் போன்ற சூழலையே ஏற்படுத்தும்.
இந்தப் போர் முடிவுக்கு வரும்போது, நாம் பழகிப்போன பழைய உலக ஒழுங்கு மறைந்துவிடும்.
எண்ணெய் வணிகத்தில் டாலரின் ஆதிக்கம் குறைந்து, உலக நாணயங்களின் பன்முகத்தன்மை அதிகரிக்கும். இது அமெரிக்காவின் நிதி வலிமையை காணாமல் ஆக்கிவிடும்.
போர் முடிவில் ஈரான் சிதைக்கப்படாத ஒரு நாடாக எஞ்சியிருந்தால், அது மத்திய கிழக்கின் தவிர்க்க முடியாத ஒரு அதிகார மையமாக உருவெடுக்கும்.
அமெரிக்கா வெளியேறிய பிறகு ஏற்படும் பிராந்திய வல்லரசுவெற்றிடத்தை ஈரான் நிரப்பும்.
சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகள் தங்கள் பாதுகாப்பிற்காக ஈரானை சார்ந்து இருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படும்.
இந்தப் போர் ஒரு பிரம்மாண்டமான இராணுவ வெற்றியுடன் முடிவடையப் போவதில்லை மாறாக, Economic crisis மற்றும் அரசியல் மாற்றங்களால் ஒரு தேக்க நிலையை எட்டி, பின்வாங்குதலில் முடியும்.
ரோமானியப் பேரரசு முதல் பிரிட்டிஷ் பேரரசு வரை அனைத்தும் தங்களின் எல்லைக்கு மீறிய இராணுவ விரிவாக்கத்தாலேயே வீழ்ந்தன.
இன்றைய அமெரிக்காவும் அதே வரலாற்றுச் சுழற்சியில் சிக்கி அழியும் தருவாயில் உள்ளது.
இந்தப் போரின் முடிவு, வாஷிங்டனில் தீர்மானிக்கப்பட்டதல்ல, அது ஈரானின் திட்டமிடல்களாலும் , உலகப் பங்குச் சந்தைகளாலும் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுவிட்டது.
Click here to claim your Sponsored Listing.
Category
Telephone
Website
Address
BJM Street
Kattankudi
0004