MSM News Collection

MSM News Collection

Share

20/04/2026
Photos from Galagedara News's post 15/09/2023
14/11/2022

பெண் பொலிஸாரின் பிடரியைப் பிடித்துத் தள்ளிய பொலிஸ் பொறுப்பதிகாரி தொடர்பில் விசாரணை

எம்.ஐ.அப்துல் நஸார்

பெண் பொலிஸாரின் பிடரியைப் பிடித்துத் தள்ளிய பொலிஸ் பொறுப்பதிகாரி தொடர்பில் விசாரணைரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கு மாணவர் சங்க ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே மற்றும் சிறிதம்ம தேரர் ஆகியோரை விடுவிக்கக் கோரி இரண்டு பெண்கள் ஆரம்பித்த அமைதிப் போராட்டத்திற்கு இடையூறு விளைவித்தமை, அவ்விரு பெண்கள் மற்றும் பெண் பொலிஸ் அதிகாரிகளுக்கு தொந்தரவு ஏற்படுத்தியமை தொடர்பில் பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் அடிப்படையில் விசேட புலனாய்வுப் பணியகத்தினால் கடந்த ஞாயிற்றுக்கிழமை (13) விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. பொலிஸ் விசேட புலனாய்வுப் பணியகத்தின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டீ.எஸ்.விக்ரமசிங்கவின் கண்காணிப்பின் கீழ் இவ் விசாரணையை மேற்கொள்வதற்கு உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் தலைமையில் பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதோடு, அக் குழு நியமிக்கப்பட்ட தினத்திலேயே விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இரண்டு பெண்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்ற இந்த அமைதியான எதிர்ப்பு ஊர்வலத்தை நிறுத்துவதற்கு களுத்துறை பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கை தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதேபோன்று, அங்கு பெண் ஒருவரை பொலிஸ் அதிகாரியொருவர் தாக்கியதாகவும், அது தொடர்பிலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

களுத்துறைப் பொலிஸார் குறித்த ஊர்வலத்தைத் தடுத்து நிறுத்திய பின்னர் இரு பெண்களும் பேரூந்தொன்றில் ஏறி பயணித்ததாகவும், குறித்த பேரூந்தை பொலிஸார் பாணந்துறையில் நிறுத்தி இரு பெண்களையும் அப் பேரூந்திலிருந்து இறக்கி விசாரணைகளை மேற்கொண்டதாகவும் பொலிஸார் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. பேரூந்திலிருந்து இறக்கப்பட்ட இரு பெண்களையும் பொலிஸ் வாகனத்தில் ஏற்றுவதற்கு பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் முன்வராதிருந்த போது பெண் உத்தியோகத்தர்களின் கழுத்தைப் பிடித்துத் தள்ளிய பாணந்துறை தெற்கு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தொடர்பிலும் விசேட விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸ் தலைமையகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரண்டு பெண்கள் அமைதியான முறையில் நடத்திய ஊர்வலத்தை தடுத்து நிறுத்தியிருக்க வேண்டிய அவசியம் பொலிஸாருக்கு இல்லை என பொலிஸ் தலைமையகத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். நூற்றுக்கணக்கான பொலிஸாரை குவித்து இரண்டு பெண்களினதும் ஊர்வலத்தைத் தடுத்து நிறுத்தி பொலிஸார் தேவையற்ற விளம்பரத்தையும் தேவையற்ற செயற்பாட்டிலும் ஈடுபட்டுள்ளதாக அவ்வதிகாரி மேலும் தெரிவித்தார். பொலிஸ் தலைமைக் கண்காணிப்பாளர் பொதுமக்களின் பேச்சுரிமை மற்றும் கருத்துச் சுதந்திரத்தில் தலையிடும் வகையில் செயற்பட்டுள்ளாரா என்பதும் பெண் பொலிஸ் உத்தியோகத்தருக்கு ஏதேனும் தொந்தரவு ஏற்படுத்தப்பட்டதா அல்லது அவர்கள் அகௌரவப்படுத்தப்பட்டனரா என்பவையும் உரிய விசாரணையில் தெரியவரும் என இது தொடர்பில் பொலிஸாரினால் விடுக்கப்பட்ட விசேட அறிக்கையினை வெளியிட்ட ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

அந்த விசாரணைகளின் பின்னரான அத்தியட்சகரின் சிபார்சினைத் தொடர்ந்து பொலிஸ் மாஅதிபரினால் மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Want your business to be the top-listed Media Company in Kattankudi?
Click here to claim your Sponsored Listing.

Website

Address


Kattankudi