Todayceylon PLUS
08/07/2026
தாய்லாந்தில் ‘தமிழி’ எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட தங்க முத்திரை மோதிரம் மீட்பு!
தாய்லாந்தின் பெட்சாபுரி மாகாணத்தில் உள்ள ‘டான் யாய் தாங்’ (Don Yai Thong) என்ற கிராமத்தில் நடைபெற்ற அகழாய்வில், சுமார் 2,000 ஆண்டுகள் பழமையான பிராமி (தமிழி) எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட அரிய தங்க முத்திரை மோதிரம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
ராஜேந்திர சோழனின் கடற்படைப் படையெடுப்புகளுக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் தமிழர்கள் மிக நெருங்கிய வணிக மற்றும் கலாச்சாரத் தொடர்பைக் கொண்டிருந்தனர் என்பதற்கு இது மிக முக்கிய வரலாற்றுச் சான்றாக அமைந்துள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு நெல் வயல் ஒன்றில் வெண்கல முரசுத் துண்டுகள் கிடைத்ததைத் தொடர்ந்து, தாய்லாந்து தொல்லியல் துறை கடந்த பிப்ரவரி முதல் அங்கு தீவிர அகழாய்வை மேற்கொண்டு வருகிறது.
இத்தளம் சுமார் 1,500 முதல் 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட இரும்புக்காலத்தைச் சேர்ந்ததாகும். இங்கு இதுவரை 8 மனித எலும்புக்கூடுகள் மற்றும் பழங்கால ஆபரணங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
அங்குள்ள 4-ஆம் எண் எலும்புக்கூட்டின் அருகில் இரண்டு தங்க மோதிரங்கள் கிடைத்தன. அதில் ஒன்றில் பழங்கால இந்திய எழுத்து வடிவமான பிராமி (தமிழி) எழுத்துக்கள் தலைகீழாகச் செதுக்கப்பட்டுள்ளன.
தாய்லாந்து மற்றும் சிங்கப்பூர் கல்வெட்டு ஆய்வாளர்களின் முதற்கட்ட ஆய்வில், இந்த மோதிரத்தில் ‘புசரகிதாஸ’ (பூச நட்சத்திரத்தால் பாதுகாக்கப்பட்டவர்) எனப் பொறிக்கப்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
தமிழறிஞர்களின் கூற்றுப்படி, மெழுகிலோ அல்லது களிமண்ணிலோ அச்சடிப்பதற்காகத் தலைகீழாகப் பொறிக்கப்பட்டுள்ள அந்தத் தமிழ்ப் பெயர் ‘அளரி வைரதன்’ என்பதைக் குறிக்கிறது. இதில் ‘அளரி’ என்பது வளமான மருத நிலத்தைக் குறிக்கும் தூய தமிழ்ச் சொல்லாகும்.
இந்த மோதிரம் பண்டைய இந்தியாவின் வணிகர் குலத்தைச் சேர்ந்த ஒரு பெரும் வணிகருடையதாக இருக்கலாம் எனத் தாய்லாந்து தொல்லியல் துறை கருதுகிறது. ஏற்கனவே தாய்லாந்தின் கிராபி மற்றும் சூம்போன் ஆகிய கடலோரப் பகுதிகளில் தமிழ் பிராமி எழுத்துக்கள் கொண்ட பானை ஓடுகள் கிடைத்துள்ள நிலையில், இந்த புதிய கண்டுபிடிப்பு பண்டைய கடல்வழி வணிகப் பாதையில் தமிழர்களின் ஆதிக்கத்தை மீண்டும் உலகிற்கு நிரூபித்துள்ளது
08/07/2026
இறக்காமம் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் முதலுதவி பயிற்சி_முகாம்.
அவசரகால சூழ்நிலைகளில் சரியான முதலுதவியை வழங்கும் திறனை மேம்படுத்தும் நோக்கில் பாடசாலை மாணவர்களுக்கான முதலுதவி பயிற்சி முகாம் 2026.07.07ம் திகதி செவ்வாய்க்கிழமை வரிப்பத்தான்சேனை அல் - அமீன் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
பிரதேச செயலாளர் அஷ்-ஷெய்க் எம். எஸ். எம். றஸ்ஸான் (நளீமி) அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் உதவிப் பிரதேச செயலாளர் அய்மா நிஃமத்துல்லா அவர்களின் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.
இந் நிகழ்வில் பயிற்சிநெறியின் வளவாளராக கல்முனை பிராந்திய சுகாதார பணிமனையின் தொற்றா நோய் தடுப்பு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர். ஏ. எஸ். எம். பௌஷாட் அவர்கள் கலந்து கொண்டு விபத்துகள் மற்றும் திடீர் உடல்நலக் குறைபாடுகள் ஏற்படும் சந்தர்ப்பங்களில் உடனடியாக மேற்கொள்ள வேண்டிய முதலுதவி நடவடிக்கைகள் குறித்து விரிவாக விளக்கமளித்தார்.
மேலும் காயங்களுக்குக் கட்டுப் போடுதல் இரத்தப் போக்கைக் கட்டுப்படுத்துதல் தீக்காயங்கள் எலும்பு முறிவுகள் மயக்கம் மூச்சுத்திணறல் போன்ற அவசரநிலைகளில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் CpR, செயன்முறை விளக்கங்களுடன் கற்பிக்கப்பட்டன.
பயிற்சியின் போது மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பல்வேறு கேள்விகளை எழுப்பித்தெளிவுகளைப் பெற்றுக் கொண்டனர்.
செயன்முறைப் பயிற்சிகளில் நேரடியாக பங்கேற்று முதலுதவித் திறன்களை நடைமுறையிலும் கற்றுக்கொண்டனர்.
இத்தகைய பயிற்சிகள் மாணவர்களிடையே பொறுப்புணர்வு தன்னம்பிக்கை மற்றும் சமூக சேவை மனப்பான்மையை வளர்க்கும் என்பதுடன் எதிர்காலங்களிலும் இதுபோன்ற பயிற்சி முகாம்களை தொடர்ந்தும் நடத்துவதன் அவசியம் குறித்தும் வலியுறுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் இறக்காமம் கல்விக் கோட்டத்திற்குட்பட்ட அல் - அமீன் மகா வித்தியாலயம்
அல் - மதீனா வித்தியாலயம் அஸ்-ஸபா வித்தியாலயம் ஆகியவற்றின் மாணவர்களும் பாடசாலை ஆசிரியர்களும் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர்.
இந்நிகழ்வானது நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் நிதிப் பங்களிப்புடன் சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் பி. யசோதா அவர்களின் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது.
மேலும் இந்நிகழ்வில் அல் - அமீன் மகா வித்தியாலய பாடசாலை அதிபர் எஸ். எல். கலந்தர் லெப்பை பிரதேச செயலக மகளிர் மற்றும் சிறுவர் பிரிவு உத்தியோகத்தர்களான உளவளத்துணை உத்தியோகத்தர் ஏ. எச். றகீப் பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் எம். எம். கே. சாஜிதா முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆர். எம். இம்டாட் பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் எம். ஐ. பஸீனா உட்பட குறித்த பாடசாலைகளின் பொறுப்பு ஆசிரியர்களும் கலந்து சிறப்பித்தனர்
08/07/2026
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
Kandy
32450