Beerok Media
04/12/2025
டிட்வா பேரிடருக்கு ஒரு மடல்:
அன்பின் டிட்வாவுக்கு...!
நீ நம்மிடம் சில நாட்கள் விருந்தாளியாக வந்தாய். உன்னை வரவேற்க நாம் தாயார் நிலையில் இருக்க வில்லை என்பதை நாம் ஏற்றுக்கொள்கிறோம். அதனால் உன் கோற முகத்தை எம்மிடம் நீ காட்டிச் சென்றாய். ஆறாத வடுக்களை நம்மிடம் விட்டுச் சென்றாய்.
நீ மலைநாடுகளுக்கு வந்தாய். மரண பயம் தரும் மண்சரிவுகளைத் தந்தாய்.
நீ தரைப் பிரதேசங்களுக்கு வந்தாய். அள்ளி, அடித்துச் செல்லும் வெள்ளநீர் பயத்தைத் தந்தாய்.
நீ கரைப் பிரதேசங்களுக்கு வந்தாய். சீறிப் பாயும் ஆழிப் (சுனாமி) பேரலைகளின் பயத்தைத் தந்தாய்.
உன்னை நாம் திட்டித் தீர்க்க மாட்டோம்.
உன்னோடு எமக்கு கோப தாபங்கள் ஏதும் இல்லை. ஆனால் நீ ஏதோ நம்மிடம் சொல்ல வருகிறாய் போல் தெரிகிறது.
அருள் மழையாக வரும் நீ, அடங்காத அடை மழையாக வந்தாய். பயன் தரும் நதியாக ஓடிய நீ, சீறிப் பாயும் நதியாக மாறினாய்.
இதம் தரும் காற்றாக வரும் நீ, பயம் தரும் சூறாவளியாக மாறினாய். வதிவிடம் தரும் மண்ணாக இருந்த நீ, சரிந்து வந்து நம்மை விழுங்கிக் கொண்டாய்.
அப்படி இருந்த நீ, இப்படி மாற உன்னிடம் ஏதாவது முகாந்திரம் இருக்க வேண்டு்ம்.
உன் பக்கம் என்ன நியாயங்கள் உள்ளன என்பதை நீ சொல்வாயா! எம் பக்கம் என்ன பிழைகள் உள்ளன என்பதை நாம் தெரிந்து கொள்ள ஆவளாக உள்ளோம்.
சரிந்து விழ வாய்ப்புள்ள மலை அடிவாரங்களில், அச்சமின்றி எப்படி நீங்கள் கட்டிடங்கள் கட்டி வாழ்கிறீர்கள் என்று நம்மிடம் கேட்க வந்தாயா?
சொல்லச் சொல், நதிக் கரைகளிலும் ஆற்றுப் படுக்கைகளிலும் வீடுகள், கடைகள் கட்டி ஏன் என்னை கட்டுப்படுத்துகிறீர்கள் என்று கேட்க வந்தாயா?
விழுந்து விட வாய்ப்புள்ள மரங்களையும்
சரிந்துவிழ வாய்ப்புள்ள மேடுகளையும்
நீங்களாகப் பார்த்து சரிசெய்யாவிட்டால் நான் வந்து, சரிசெய்யது விடுவேன் என்று சொல்ல வந்தாயா?
பாதைகள் போடும் போதும், பாலங்கள் கட்டும் போதும் ஊழல்கள் நடந்துள்ளன என்பதை சூசகமாக சொல்ல வந்தாயா?
பதில் சொல்...!
ஏற்கனவே இனவாதத்தால் சின்னாபின்னமாகிய இந்த அழகான தீவை, நான் வந்து இன்னும் கொஞ்சம் சின்னாபின்னமாக ஆக்கினால் என்ன குறைந்து விடப் போகிறது, என்று கேட்க வந்தாயா?
ஏற்கனவே ஊழால் சரிந்து போன நாட்டை நான் வந்து இன்னும் கொஞ்சம் சரித்தால் என்ன நடக்கப் போகிறது, என்று கேட்க வந்தாயா?
ஐஸ் போதைப் பொருளால் ஊறிப் போன நாட்டை நான் வந்து இன்னும் கொஞ்சம் ஊற வைத்தால் என்ன என்று கேட்க வந்தாயா?
பதில் சொல்...!
எனக்குத் தெரியும் நீ வாய் பேச மாட்டாய்.
சொல் புத்தி இல்லாதவர்களுக்கு கல்லால் அடித்து சொல்ல வேண்டும் என்று சொல்ல வருகிறாயா?
நீ பேசும் பாசை, புரிந்துகொள்ள இலகுவான பாசைதான். ஆனால் அதை செவிசாய்த்துக் கேட்கும் அளவுக்கு நம்மிடம் அகச்செவி மிகவும் குறைவுதான் என்பதை நாம் ஏற்றுக்கொள்கிறோம்.
டிட்வா... நீ சென்று வா..
எதிர்காலங்களில், மானிடர்கள் என்ற வகையில் நாம் நம்மை தார்மீக ரீதியாக திருத்திக்கொள்ளாவிட்டால், பெளதீக ரீதியாக மாற்றங்கள் செய்ய முற்படாமல் இருந்தால் நீ இன்னும் பல அவதாரங்களில்
வந்து எம்மை துவம்சம் செய்வாய் என்பது மட்டும் திண்ணம்.
BEEROK MEDIA TAMIL
WhatsApp Group
https://chat.whatsapp.com/J29u9pohOtWGYLt70CXrUH
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
Kandy