Anosh
07/11/2025
📖 *சத்தியவசனம்*
*நவம்பர் 07 2025 வெள்ளிக்கிழமை*
🗓️ *இன்றைய வாக்கு*
*உன் செய்கைக்குத்தக்க பலனைக் கர்த்தர் உனக்குக் கட்டளையிடுவாராக (ரூத் 2:12).*
🔰 *இன்றைய வேதவாசிப்பு*
*காலை:* எசேக்கியேல் 8-10
*மாலை:* எபிரெயர் 4
📕 *அனுதினமும் கிறிஸ்துவுடன்*
*முப்பத்தாறாம் வருஷம்*
*இந்த விஷயத்தில் மதியில்லாதவராயிருந்தீர் (2நாளாகமம் 16:9).*
_இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: 2நாளாகமம் 16:1-13_
'இந்த விஷயத்தில்' என்னும்போது, மற்ற விஷயங்களில் மதியுடன் நடந்திருக்கலாம் என்று நாம் அர்த்தம்கொள்ளலாம்! ஆம், நாமும் இப்படித் தான்; எல்லா விஷயங்களையும் பார்த்துப் பார்த்துச் செய்துவிட்டு, முக்கிய விஷயத்தில் யாவையும் தொலைத்து விட்டிருப்போம். அந்த ஒன்றினால், அத்தனை காலங்களும் நாம் கட்டிக்காத்துக்கொண்ட நற்பெயரும், நல்ல விஷயங்களும் கேள்விக்குறியாகி விடுகிறது.
ஆசா யூதாவை 41 ஆண்டுகள் ராஜ்யபாரம் பண்ணின ஒருவன். இவனது ஆட்சியில்முதல் 10ஆண்டுகள் அமைதியாக இருந்தது. கர்த்தரின் பார்வைக்குச் செம்மையான யாவற்றையும் செய்தான். பிரச்சனைகள் நெருக்கங்கள் வந்த போது கர்த்தரையே தேடினான். தேவனையே தேடும்படி தனது ராஜ்யத்தின் மக்களையும் தீர்க்கமாக வழிநடத்திய ஒருவன்தான் இந்த ஆசா. எத்தியோப்பியனாகிய சேரா பத்துலட்சம் பேருடனும் முந்நூறு இரதங்களோடும் யூதாவுக்கு எதிராகவந்தபோதுகூட ஆசா கர்த்தரையே நாடினான். கர்த்தர் எத்தியோப்பியரை முறியடித்தார். இப்படியே 35 ஆண்டுகள் நன்றாகவே ஓடியது. முப்பத்தாறாம் வருஷத்தில் இவனுக்கு என்னவாயிற்று? இப்போது இஸ்ரவேலின் ராஜா பாஷா யூதாவுக்கு எதிராக வந்து தடைகளை கட்டினான். இதுவரை கர்த்தரையே நாடிய ஆசா, இப்போது கர்த்தரை நாட மறந்தது என்ன? இவன் இப்போ, சீரியா நாட்டுராஜாவின் உதவியை நாடுகிறான். அவனும் உதவி செய்கிறான். கர்த்தரோ, அனானி என்பவனை எழுப்பி, இத்தனை வருடங்களாக உம்மை நடத்திய தேவனை நீர் மறந்ததென்ன என்று கேட்கிறார். *'தம்மைப்பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையை விளங்கப் பண்ணும்படி, கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிறது'* இதை நீர் மறந்ததென்ன என்று கண்டிக்கிறார். ஆசாவோ இதைக் கேட்டு மனந்திரும்பாமல், அனானியை சிறையில் அடைக்கிறான். அவன் கால்களில் வியாதி கண்டது, அப்போதும் அவன் கர்த்தரைத் தேடவில்லை. பின்னர் அவன் மரித்துப்போனான்; மனந்திரும்பியதாக எழுதப்படவில்லை.
35ஆண்டுகள் கர்த்தரையே தேடினவன், இறுதிக் காலத்தில் *கர்த்தரை விட்டு விட்டது நமக்குச் சிறந்த எச்சரிக்கையாயிருக்கிறது. நாம் கர்த்தரோடிருந்தால், நம்மோடு அவர் இருப்பார். நாம் அவரைத் தேடினால் அவர் நம்மோடு இருப்பதை அவர் வெளிப்படுத்துவார்.* நமது பாரங்களை அவர் சுமப்பார். நமது போராட்டங்களில் அவர் ஜெயம் தருவார். நாம் அவரை விட்டுவிட்டால்? *'முடிவு பரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான் '(மத்.24:13).* நாம் தடுமாற வேண்டிய அவசியமில்லை. முடிவுபரியந்தம் நம்மை நிலைநிறுத்துகிற ஆண்டவர் இயேசு இன்று நம்முடன் இருக்கிறார். நாம் அவருடன் நிற்கிறோமா? அவரோடு நடக்கிறோமா?
🙇♀️ *ஜெபம்:* கர்த்தாவே நான் விழுந்துபோகக்கூடிய சந்தர்ப்பங்கள் நேரிட்டாலும் மீண்டு எழுந்து. மனந்திரும்பி முன்நோக்கிச்செல்ல உமது கிருபையைத் தாரும். *ஆமென்.*
*Click on youTube link*
https://youtu.be/WCKvTYsk2ww
🤲 *இன்றைய விண்ணப்பம்*
*1.* பங்காளர் குடும்பங்களில் உள்ள வாலிப பிள்ளைகள் உலக மாயையிலிருந்து விடுவிக்கப்பட்டு கர்த்தருக்குப் பிரியமாய் வாழவும், அவர்களது குடும்ப சூழ்நிலைகள் அவர்களது ஆவிக்குரிய வாழ்வின் வளர்ச்சிக்கு ஏதுவாய் இருப்பதற்கும் வேண்டுதல்செய்வோம்.
*2.* பிரான்ஸ் நாட்டின் ஆளுமைப் பொறுப்பில் உள்ள தலைவர்களுக்காகவும், சுவிசேஷ ஊழியங்களும் சபை ஊழியங்களும் வல்லமையோடே செய்யப்படுவதற்கும், சமூக ஒற்றுமை வளர்ந்திட, மக்களின் கருத்துகளை மதிக்கும் நிர்வாகம் சீரமைக்கப்பட ஜெபிப்போம்.
Our Address: Sathiyavasanam, 21 Venkatraman Street, Chinnachokkikulam, Madurai -625002
Tel.No.: 0452-2532316,
Mobile No.: 9442532316,
Whatsapp: 6380692034
Email: [email protected]; [email protected] website: www.sathiyavasanam.in
இன்றைய தியானம் 07/11/2025 | முப்பத்தாறாம் வருஷம் #tamilchristiandailydevotion About Sathiyavasanam MinistrySathiyavasanam Tamil Ministry is a unit of The Good News Broadcasting Society, Secunderabad which represents the world wide mini...
*"ஒரு இரகசிய பாவத்தை மேற்கொள்ள முடியவில்லை. என்ன செய்வது? ஆலோசனை கூறுங்கள்..."*
ஒரு இரகசிய பாவத்தை மட்டுமல்ல, *எந்த பாவத்தையும், நம்மால் மேற்கொள்ள முடியும்.* பரிசுத்த வேதாகமத்தின் அடிப்படையில் சில ஆலோசனைகள்:
*1.தேவனிடம் அறிக்கை செய்யுங்கள்* (Confess to God):
உங்கள் பாவத்தை தேவனிடம் மறைக்காமல், முழு மனதுடன் அறிக்கை செய்யுங்கள். 1 யோவான் 1:9-இல், "நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்." என்று கூறப்பட்டுள்ளது.
சங்கீதம் 32:5-இல், "நான் என் பாவத்தை உமக்கு அறிவித்தேன், என் அக்கிரமத்தை மறைக்கவில்லை; என் மீறுதல்களை கர்த்தருக்கு அறிக்கையிடுவேன் என்றேன்; நீ என் பாவத்தின் தோஷத்தை மன்னித்தீர்." என்று தாவீது கூறுகிறார்.
*2.ஜெபம் செய்யுங்கள்* (Pray):
தேவனிடம் தொடர்ந்து ஜெபம் செய்யுங்கள். பாவத்தை மேற்கொள்ளவும், பரிசுத்தமாக வாழவும் உதவி கேளுங்கள்.
மத்தேயு 26:41-இல், "சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள்; ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது." என்று இயேசு கூறினார்.
*3.வேதாகமத்தை வாசியுங்கள்* (Read the Bible):
வேதாகமத்தை தினமும் படியுங்கள். தேவனுடைய வார்த்தை உங்கள் மனதை புதிதாக்கி, பாவத்தை மேற்கொள்ள உதவும். சங்கீதம் 119:11-இல், "நான் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாதபடிக்கு, உமது வாக்கை என்னிருதயத்தில் வைத்து வைத்தேன்." என்று கூறப்பட்டுள்ளது.
*4.பரிசுத்த ஆவியானவரின் உதவியை நாடுங்கள்* (Seek the Help of the Holy Spirit):
பரிசுத்த ஆவியானவர் பாவத்தை மேற்கொள்ளவும், தேவனுடைய வழியில் நடக்கவும் உங்களுக்கு பலம் கொடுப்பார். கலாத்தியர் 5:16-இல், "நான் சொல்லுகிறதாவது: ஆவியின்படி நடவுங்கள், அப்பொழுது மாம்ச இச்சையை நிறைவேற்றாதிருப்பீர்கள்." என்று கூறப்பட்டுள்ளது.
*5.உங்களை சோதிக்கும் சூழ்நிலைகளை தவிருங்கள்!* (Avoid Tempting Situations):
உங்களை பாவம் செய்யத் தூண்டும் சூழ்நிலைகள், இடங்கள், நபர்கள் ஆகியவற்றை தவிருங்கள். 1 கொரிந்தியர் 15:33-இல், "மோசம்போகாதிருங்கள்; ஆகாதசம்பாஷணைகள் நல்லொழுக்கங்களைக் கெடுக்கும்." என்று கூறப்பட்டுள்ளது.
*6.விசுவாசமுள்ள நண்பர்களிடம் உதவி கேளுங்கள்* (Seek Accountability):
உங்களை நேசிக்கும், விசுவாசமுள்ள நண்பர்களிடம் உங்கள் பாவத்தை அறிக்கை செய்யுங்கள். அவர்கள் உங்களுக்கு ஜெபம் செய்து, பாவத்தை மேற்கொள்ள உதவி செய்வார்கள்.
யாக்கோபு 5:16-இல், "நீங்கள் குணமடையும்படிக்கு, உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ணுங்கள்." என்று கூறப்பட்டுள்ளது.
*7.சபையின் உதவியை நாடுங்கள்* (Seek Church Support):
சபையில் உள்ள போதகர்கள், மூப்பர்கள் மற்றும் விசுவாசமுள்ளவர்களிடம் உதவி கேளுங்கள். அவர்கள் உங்களுக்கு ஆலோசனைகள் கூறி, ஜெபம் செய்து, பாவத்தை மேற்கொள்ள உதவி செய்வார்கள்.
*8.உங்களுடைய எண்ணங்களை கட்டுப்படுத்துங்கள்* (Control Your Thoughts):
உங்களுடைய எண்ணங்களை கட்டுப்படுத்த முயற்சி செய்யுங்கள். பாவமான எண்ணங்கள் வரும்போது, தேவனுடைய வார்த்தையை தியானியுங்கள். பிலிப்பியர் 4:8-இல், "கடைசியாக, சகோதரரே, உண்மையுள்ளவைகளெவைகளோ, ஒழுக்கமுள்ளவைகளெவைகளோ, நீதியுள்ளவைகளெவைகளோ, கற்புள்ளவைகளெவைகளோ, அன்புள்ளவைகளெவைகளோ, நற்கீர்த்தியுள்ளவைகளெவைகளோ, புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ அவைகளையே சிந்தித்துக்கொண்டிருங்கள்." என்று கூறப்பட்டுள்ளது.
*9.உங்களுடைய நேரத்தை பயனுள்ள காரியங்களில் செலவிடுங்கள்* (Spend Time in Godly Activities):
உங்களுடைய நேரத்தை ஜெபம், வேதாகமத்தை தியானித்தல், சபை கூட்டங்களில் கலந்து கொள்ளுதல், மற்றவர்களுக்கு உதவி செய்தல் போன்ற பயனுள்ள காரியங்களில் செலவிடுங்கள்.
*10.தேவனுடைய கிருபையை நம்புங்கள்* (Trust in God's Grace):
தேவனுடைய கிருபை உங்களை பாவத்திலிருந்து விடுவிக்கும் என்று நம்புங்கள். அவருடைய கிருபை உங்களை பலப்படுத்தும், பரிசுத்தமாக வாழ உதவி செய்யும்.
*இந்த ஆவிக்குரிய ஆலோசனைகளை சரிவர பின்பற்றுவதன் மூலம், நீங்கள் இரகசிய பாவங்களை / இதர பாவங்களை மேற்கொண்டு, தேவனுக்கு பிரியமான வாழ்க்கை வாழ முடியும். வாழ்த்துக்கள்! God bless you!*
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Website
Address
Jaffna