Yarl Rider
சிங்கப்பூரில் நாள் ஒன்றுக்கு 7,000 டன் குப்பை சேர்கிறது. இந்த குப்பைகள் அனைத்தையும் டிரக்குகள் ஏற்றிக்கொண்டு சிங்கபூரில் இருக்கும் நாலு அனல்மின் நிலையங்களை வந்தடைகின்றன
இங்கே இந்த குப்பைகளில் மறுசுழற்சி செய்யகூடிய வகை குப்பைகள் பிரித்து மறுசுழற்சிக்கு அனுப்பபடுகின்றன. நாள் ஒன்றுக்கு 3,400 டன் கழிவு மறுசுழற்சி செய்யப்படுகிறது
மீதமுள்ள 4300 டன் கழிவு 1800 டிகிரி பாரந்கீட் வெப்பத்தில் எரிக்கபடுகிறது. இது பாய்லரில் நீரை கொதிக்கவைத்து அனல் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. சிங்கபூரின் 5% மின் தேவையை அதன் குப்பைகளே பூர்த்தி செய்கின்றன
குப்பைகளை எரிக்கையில் வெளியாகும் புகையின் நச்சு அளவுகள் தொடர்கண்காணிப்பில் உள்ளன. பாதுகாப்பான அளவுகளில் தான் நச்சுக்கள் வெளியாகின்றன
அதன்பின் ஏராளமான சாம்பல் மிச்சமாகிறது. இந்த சாம்பல் எல்லாம் மிகப்பெரும் பார்ஜ்கள் எனப்படும் சரக்கு கப்பல்களில் ஏற்றப்பட்டு, செமக்காவ் தீவு (Pulau Semakau) எனும் தீவை சென்றடைகின்றன.
செமக்காவ் தீவு உண்மையில் இயற்கையான தீவு அல்ல. அதாவது, கடல் பகுதியைச் சுற்றி பாறைகளால் ஆன சுற்றுச்சுவர் கட்டி, அதற்குள் கப்பல்களில் கொண்டு வரப்படும் எரிப்பு சாம்பலை (ash) கொட்டி நிலத்தை உயர்த்துவதன் மூலம் உருவாக்கப்பட்டது.
செமக்காவ் குப்பைக் கிடங்கில் சுவருக்குள் இருக்கும் லகூன் மாதிரியான பகுதியில் ஏரி போல கடல்நீர் தேங்கியிருக்கும். அதனுள் சாம்பல் கொட்டப்படும். தொடர்ந்து தினமும் பலநூறு டன் சாம்பல் கொட்டபடுவதால் தரைமட்டம் உயரும். அப்படி கடல்மட்டம் உயர்ந்து மேடான பகுதியில் புல்லும், செடிகளும் மரங்களும் நடப்பட்டு, பெஞ்சுகள் போடபட்டு, மக்கள் உலாவ நடைபாதைகள் அமைக்கபட்டு பார்க் போல தீவு காட்சியளிக்கும்
நீரில் நச்சுதன்மை தொடர்ந்து கண்காணிக்கபடும் அவ்வபோது மழை பெய்கையில் நீர் பம்ப் செய்து கடலினுள் வெளியேற்றபடுவதால் நீர் பிரஷ் ஆக உள்ளது
அருகே உள்ள பவளப்பாறைகள், கடல்வாழ் உயிரினங்களுக்கு எந்த பாதிப்பும் வராமல் கண்கானிக்கபடுகிறது
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the public figure
Telephone
Website
Address
Jaffna
40000