KuralMax.lk
11/10/2022
இலங்கையின் எரிபொருள் கையிருப்பு தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்
ஒன்றரை மாதத்திற்கு தேவையான எரிபொருள் கையிருப்பு காணப்படுவதாக பெற்றோலிய வளக்கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக டீசல் மற்றும் பெற்றோல் ஆகியன இவ்வாறு கையிருப்பில் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சுமார் 40000 மெற்றிக் தொன் எடையுடைய டீசல் நேற்றைய தினம் இறக்கப்பட்டதாகவும் இதற்கு பணம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.கியூஆர் குறியீடு அடிப்படையில் எரிபொருள் விநியோகம்
மேலும் இரண்டு டீசல் மற்றும் பெற்றோல் கப்பல்கள் நாட்டை வந்தடைந்துள்ளதாக பெற்றோலிய வளக்கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
கியூஆர் குறியீடு அடிப்படையில் எரிபொருள் விநியோகம் செய்யப்படுவதனால் கையிருப்பில் உள்ள எரிபொருளை முகாமைத்துவம் செய்துகொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.நாட்டில் எரிபொருள் தட்டுப்பாட்டு ஏற்படக்கூடிய சாத்தியங்கள் கிடையாது எனவும், இந்தியன் ஒயில் நிறுவனமும் எரிபொருள் இறக்குமதி செய்து விநியோகம் செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
11/10/2022
மக்களின் குரல்களை செவிமடுக்க வேண்டும்: அரசுக்கு மைத்திரி உபதேசம்
அரசு மக்களின் குரல்களுக்கு செவிமடுத்து செயற்படுவது மிகவும் அவசியமாகும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,"பல பிரச்சினைகளுக்கு மத்தியில், நாட்டை ஜனநாயக ரீதியாக கொண்டு செல்வதே தற்போதைய தேவையாக உள்ளது.
நாட்டில் நிலவும் பிரச்சினைகள்
மக்களின் குரல்களை செவிமடுக்க வேண்டும்: அரசுக்கு மைத்திரி உபதேசம்
பசி, உணவின்மை, விவசாயப் பிரச்சினை, மருந்துத் தட்டுப்பாடு உள்ளிட்ட பல பிரச்சினைகள் நாட்டில் காணப்படுகின்றன.
வைத்தியர்கள் பலர் தற்போது நாட்டை விட்டு வெளியேறுகின்றனர். சுகாதாரத்துறை பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளது. பணம் இன்மையால், மேலதிக வகுப்புக்களுக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
இவ்வாறான பல பிரச்சினைகள் காணப்படுகின்ற நிலையில், நாடு என்ற ரீதியில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.
ஒற்றுமையாக செயற்படுவதன் அவசியம்
மக்களின் குரல்களை செவிமடுக்க வேண்டும்: அரசுக்கு மைத்திரி உபதேசம்
இவ்வாறான சந்தர்ப்பத்தில் எம்மிடையே பேதங்கள் காணப்படுவது பொருத்தமற்றது. இதேவேளை மக்களின் பக்கம் நின்று அவர்களின் குரல்களுக்குச் செவிமடுத்துச் செயற்படுவது மிகவும் அவசியமாகும்.
நாட்டைக் கட்டி எழுப்புவதற்காக மேற்கொள்ளப்படும் தீர்மானங்களுக்கும் மக்களின் நலன்களுக்காக மேற்கொள்ளப்படும் தீர்மானங்களுக்கும் எம்மால் ஒத்துழைப்பு வழங்கப்படும்" என கூறியுள்ளார்.
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Hatton