Lanka News Today
04/07/2026
டெங்கு அதிகரிப்புக்கு இதுவா காரணம்? – வெளியான முக்கிய தகவல்
நாட்டில் தற்போது டெங்கு நோய்த் தொற்று கணிசமாக அதிகரித்துள்ளதற்கு, டெங்கு வைரஸின் வீரியத்தில் ஏற்பட்டுள்ள மாற்றமே முக்கிய காரணமாக இருக்கலாம் என பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும், இவ்வாறான டெங்கு பரவல் அதிகரிப்பு சுமார் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் ஏற்படுவது இயற்கையான நிகழ்வாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் தங்களது வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்திருப்பதுடன், நீர் தேங்கும் இடங்களை முற்றிலும் அகற்றுவதும் அவசியம் என அவர் வலியுறுத்தினார்.
குறிப்பாக, திறந்த வடிகால்கள் அல்லது கால்வாய்களை விட, வீடுகள் மற்றும் கட்டிடங்களுக்குள் தேங்கி நிற்கும் சுத்தமான நீரிலேயே டெங்கு நுளம்புகள் அதிகளவில் இனப்பெருக்கம் செய்கின்றன என்பது ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதனிடையே, டெங்கு ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக கடந்த சில நாட்களாக ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை பகுதியை மையமாகக் கொண்டு விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இதன்போது, அதிக ஆபத்தான வலயங்களாக அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் சுமார் 3,500 வீடுகள் பரிசோதனை செய்யப்பட்டன.
இந்த தொடர் நடவடிக்கைகளின் விளைவாக, குறித்த பகுதிகளில் டெங்கு பரவலை ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடிந்துள்ளதாக பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
Sivanandarajah Narayanapillai Ilango Periyannen Newswire BBC News தமிழ் MasterSasi Kumar
#டெங்கு #சுகாதாரம்
04/07/2026
இறுதி சடங்கில் மனதை உருக்கும் சின்னப்பெட்டி...!
ஈரானின் உச்ச தலைவர் AliKhamenei அவர்களின் இறுதி அஞ்சலி நிகழ்வில், அவரது சவப்பெட்டிக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த சிறிய சவப்பெட்டி பலரின் கவனத்தையும் உணர்வுகளையும் ஈர்த்தது.
அந்தச் சிறிய சவப்பெட்டி, தாக்குதலில் உயிரிழந்ததாகக் கூறப்படும் அவரது 14 மாத பேத்திக்குரியது என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த காட்சி, அரசியல் நிகழ்வைத் தாண்டி ஒரு குடும்பத்தின் ஆழ்ந்த துயரத்தையும் உலகிற்கு வெளிப்படுத்தியது.
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
Colombo