Asian News

Asian News

Share

Photos from Asian News's post 08/06/2026

சுரேஷ் சாலேவின் கைதைக் கண்டித்து கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக போராட்டம்....!!

by editor

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக பதற்றம்: சுரேஷ் சாலேவின் கைதைக் கண்டித்து விமல், உதயகம்மன்பில ஆகியோர் தலைமையில் சாத்வீக போராட்டம் இன்று (08) முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது முன்னாள் அரச புலனாய்வுத் துறை (SIS) பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே கைது செய்யப்பட்டமைக்கு எதிராகவும், தற்போதைய அரசாங்கத்தின் அரசியல் பழிவாங்கல்களைக் கண்டித்தும் பதாகைகளை ஏந்திய வண்ணம் போராட்டக்காரர்கள் காணப்பட்டனர்.

Photos from Asian News's post 08/06/2026

.

சீனாவில் அரச நிர்வாகம் குறித்த நாடாளுமன்றப் பணிப்பட்டறையில் பிரதி அமைச்சர் கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன தலைமையிலான இலங்கைத் தூதுக்குழு பங்கேற்பு

எஸ் ஜே புஹாது

சீனாவில் நடைபெற்ற அரச நிர்வாகம் குறித்த விசேட நாடாளுமன்றப் பணிப்பட்டறையில் பங்கேற்பதற்காக இலங்கை நாடாளுமன்றத் தூதுக்குழுவொன்று சீனாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளதுடன், இத்தூதுக்குழுவின் உத்தியோகபூர்வ தலைமைத்துவத்தை (Head of the Delegation) ஊடகத்துறை பிரதி அமைச்சர் கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன வகித்துள்ளார்.

இந்தத் தூதுக்குழுவில் பிரதி அமைச்சர் டி.பி. சரத் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்றும் உள்வாங்கப்பட்டிருந்தனர்.

சீன அரச நிர்வாகக் கட்டமைப்பு குறித்தக் கற்றல்
சீன வர்த்தகத் திணைக்களம் மற்றும் ஐசிசி (ICC) நிறுவனம் என்பன இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த பயனுள்ள பணிப்பட்டறையின் போது, சீனப் பண்புகளுடனான ஜனநாயகம் குறித்த ஜனாதிபதி ஷி ஜின்பிங்கின் சிந்தனை, "முழுச் செயல்முறை மக்கள் ஜனநாயகம்" (Whole-Process People’s Democracy) மற்றும் சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாடு (CPPCC) மற்றும் "இரு அமர்வுகள்" (Two Sessions) ஆகியவற்றின் செயல்பாட்டு வழிமுறைகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

மேலும், இலங்கைத் தூதுக்குழுவினருக்கு சீனாவின் தேசிய மக்கள் காங்கிரஸ் (NPC) உள்ளிட்ட அந்நாட்டின் முக்கிய அரச நிறுவனங்களுக்கு நேரில் சென்று, அவற்றின் கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகளை நேரடியாக அவதானிப்பதற்கான விசேட வாய்ப்பும் கிடைத்தது.

சர்வதேச தேயிலை தினக் கொண்டாட்டத்திலும் பங்கேற்பு
இந்த உத்தியோகபூர்வ விஜயத்திற்கு இணைவாக, சீனாவின் பீஜிங்கில் உள்ள இலங்கைத் தூதரகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சர்வதேச தேயிலை தின (International Tea Day) உத்தியோகபூர்வ கொண்டாட்ட நிகழ்வும் நடைபெற்றதுடன், இதில் முதன்மை விருந்தினராகப் (Chief Guest) பிரதி அமைச்சர் கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன கலந்து கொண்டார்.

இந்த மிக வெற்றிகரமான மற்றும் பயனுள்ள நிகழ்ச்சித் திட்டத்தை ஏற்பாடு செய்த ஐசிசி (ICC) நிறுவனம், சீன வர்த்தகத் திணைக்களம் மற்றும் இதற்கான தூதரக மட்டத்திலான ஒருங்கிணைப்புப் பணிகளை வழங்கிய இலங்கையிலுள்ள சீனத் தூதரகம் ஆகியவற்றுக்கு பிரதி அமைச்சர் உள்ளிட்ட தூதுக்குழுவினர் தமது விசேட நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.

Photos from Asian News's post 08/06/2026

அனீஸின் 20 வருடகால அரச சேவைப் பாராட்டி கெளரவித்த மாகாண ஆணையாளர்!

அபு அலா

அரச சேவையில் 20 வருடங்கள் கடமையாற்றி ஓய்வு பெற்றுச் செல்லும் எம்.ஏ.எம்.அனீஸின் சேவைகளை வாழ்த்திப் பாராட்டி, வழியனுப்பி வைக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் (06) அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையில் இடம்பெற்றது.

அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள மாகாண ஆணையாளர் வைத்தியர் எம்.ஏ.நபில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

நிகழ்வின்போது, ஓய்வுபெற்றுச் செல்லும் எம்.ஏ.எம்.அனீஸின் 20 வருடகால முன்மாதிரியான அரச சேவைகளைப் பாராட்டிப் பேசிய மாகாண ஆணையாளர் வைத்தியர் எம்.ஏ.நபில்,

ஒரு நிறுவனத்தின் வளர்ச்சிக்கு அதிகாரிகளின் பங்களிப்பு எவ்வளவு முக்கியமோ, அதைவிட அனீஸ் போன்ற ஊழியர்களின் அர்ப்பணிப்புமிக்க சேவை மிக முக்கியமானது. கடந்த 9 வருடங்களாக சுதேச மருத்துவ திணைக்களத்தின் கீழ் இயங்கி வருகின்ற அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையில் தனது பணியினை முன்னெடுத்திருந்தார். இவர் போன்ற ஊழியர்களின் சேவைகளை பாராட்டி வாழ்த்தி வழியனுப்புவதை கெளரவமாக நான் கருதுகிறேன் எனக் குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து, மாகாண ஆணையாளரால் அவருக்குப் பொன்னாடை போர்த்தி, வைத்தியசாலை சமூகத்தின் சார்பில் நினைவுச் சின்னம் மற்றும் பணப்பொதி என்பவற்றை வழங்கி கௌரவித்தார்.

ஓய்வு பெற்றுச் சென்ற அனீஸ், அக்கரைப்பற்று வலயக்கல்வி அலுவலகத்தில் 11 வருடங்களும், அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையில் 9 வருடங்களும் தனது சிறந்த அரச பணியினை முன்னெடுத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் வைத்தியர்கள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் மற்றும் அனீஸின் குடும்பத்தினர் எனப் பலரும் கலந்துகொண்டு தமது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.

08/06/2026

சம்மந்துறையில் சுகாதாரப் பராமரிப்பில் ஒரு புதிய மைல்கல்...!

எஸ் ஜே புஹாது

சம்மந்துறை ஆதார வைத்தியசாலையின் குழந்தைகள் நலப் பிரிவு மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கான சிறப்புப் பராமரிப்புப் பிரிவு கட்டிட திறப்பு விழா 2026.06.08 ந் திகதி நடைபெற உள்ளது

"சிறு இதயங்களைக் குணப்படுத்தும் ஒரு புதிய இல்லம்" என்ற கருப்பொருளின் கீழ், இந்த புதிய வசதியானது மிக இளைய உறுப்பினர்களுக்கு சிறப்புப் பராமரிப்பை வழங்குவதில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கிறது.

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக (பாராளுமன்ற உறுப்பினரும் , அம்பாறை மாவட்ட கடற்கரைப் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான இலங்கை அரசியலமைப்புச் சபையின் உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்.

சிறப்பு விருந்தினராக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் திருமதி. சஹீலா இஸ்ஸதீன் கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை மக்கள் பாவனைக்கு கையளிக்க உள்ளனர்.

Want your business to be the top-listed Media Company in Colombo?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address


Colombo
32340