Hot News
12/05/2023
மட்டக்களப்பு மாவட்டத்திலே ‘நியாயமான பயணம்’.....!!
🟥 இன்று ஒருவருடப் பூர்த்தி
▪️ மட்டக்களப்பு மாவட்டத்திலே ‘நியாயமான பயணம்’ என்னும் நடைபவனியின் 365 ஆவது நாள் இன்றைய தினம் கடந்து செல்கிறது.
நாட்டில் நடைபெறுகின்ற வன்முறை சம்பவங்கள், சிறுவர்கள் பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள், அநீதிகள், அதிகாரிகளின் பாரபட்சமான பொறுப்பற்ற செயல் என்பவற்றிற்கு எதிராகவும் நியாயமான நீதி வேண்டியும் மட்டக்களப்பு கல்லடியிலிருந்து காந்திபூங்கா வரை சமூக ஆர்வலர்கள் சிலர் தினமும் நடைபவனியாக செல்வர். இந்த நடைபவனியின் 365 நாள் இன்றோடு கடந்து செல்கிறது.
12/05/2023
மஹிந்த ராஜபக்ஷவுக்கு பிரதமராக சத்தியப்பிரமாணம்?......!!
🟥 கொழும்புக்கு மேலதிக படையினர் தருவிப்பு
▪️ இன்று மாலை வௌிமாவட்டங்களில் இருந்து பெருந்தொகையான ராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் கொழும்புக்கு திடீரென தருவிக்கப்பட்டுள்ளனர்
பெரும்பாலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிரதமர் பதவிப் பிரமாண நிகழ்வின் பாதுகாப்புக்காகவே அவர்கள் அவ்வாறு அழைக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது
மஹிந்த ராஜபக்ஷ விரைவில் மீண்டும் பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
12/05/2023
The “Environment Pioneer President’s Medal Awarding Ceremony 2020-2021” organized by the Central Environmental Authority was held today 11th May 2023 at 2.00 pm under the chairmanship of H.E. the President, Mr. Ranil Wickramasinghe. Arrangements have been made to hold the event at the Jasmine Hall in Bandaranaike Memorial International Conference Hall. Environment Minister Engineer Naseer Ahmed, Secretary of the Environment Ministry Dr. Anil Jasinghe, Secretary of the Ministry of Education Mr. M. N. Ranasinghe, Chairman of the Central Environmental Authority Mr. Supun S. Pathirage, Acting Director General of Central Environmental Authority Dr. Mr. R. M. S. K. Rathnayake
மத்திய சுற்றாடல் அதிகாரசபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட 'சுற்றாடல் முன்னோடி ஜனாதிபதி பதக்கம் வழங்கும் விழா 2020–2021' நிகழ்வு கௌரவ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று 2023 மே 11ஆம் திகதி நடைபெற்றது. பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் உள்ள ஜெஸ்மின் மண்டபத்தில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சுற்றாடல் அமைச்சர் பொறியியலாளர் நசீர் அஹமட், சுற்றாடல் அமைச்சின் செயலாளர் விசேட மருத்துவர் அனில் ஜயசிங்க, கல்வி அமைச்சின் செயலாளர் திரு எம்.என். ரணசிங்க, மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் தலைவர் திரு சுபுன் எஸ். பத்திரகே, மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் பதில் பணிப்பாளர் நாயகம் டொக்டர் திரு ஆர்.எம்.எஸ்.கே. ரத்னாயக்க ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
"පරිසර නියමු ජනාධිපති පදක්කම් ප්රදානෝත්සවය 2020-2021”
මධ්යම පරිසර අධිකාරිය විසින් සංවිධාන කරන ලද "පරිසර නියමු ජනාධිපති පදක්කම් ප්රදානෝත්සවය 2020-2021” අද දින ප.ව 2.00 ට බණ්ඩාරනායක අනුස්මරණ සම්මන්ත්රණ ශාලා පරිශ්රයේ ජස්මින් ශාලාවේදී අතිගරු ජනාධිපති රනිල් වික්රමසිංහ මහතාගේ ප්රධානත්වයෙන් පැවැත්වුණි.
මේ අවස්ථාවට පරිසර අමාත්ය ඉංජිනේරු නසීර් අහමඩ් මහතා, පරිසර අමාත්යාංශයේ ලේකම් ආචාර්ය අනිල් ජාසිංහ මහතා, අධ්යාපන අමාත්යාංශයේ ලේකම් එම්.එන්.රණසිංහ මහතා, මධ්යම පරිසර අධිකාරියේ සභාපති සුපුන් එස්.පතිරගේ මහතා, මධ්යම පරිසර අධිකාරියේ වැඩ බලන අධ්යක්ෂ ජනරාල් ආචාර්ය නීතීඥ ආර්.එම්.එස්.කේ.රත්නායක මහතා ඇතුළු සම්භාවනීය පිරිසක් සහභාගී වූහ.
07/05/2023
முஸ்லிம் பிரதேச செயலாளர் பிரிவில் திட்டமிடப்பட்ட தமிழ் பிரதேச செயலாளர்களின் வருகை மேலும் எமது சமூகத்தின் இருப்பிற்கு ஆபத்தை உண்டாக்கும் -ஜனநாயக ஐக்கிய முன்னணி தெரிவிப்பு
ஜனநாயக ஐக்கிய முன்னணியின் கல்குடா தொகுதியின் கட்சி முக்கியஸ்தர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு இடையிலான சந்திப்பு கடந்த 05.05.2023 இடம்பெற்றது இதன் போது கருத்து தெரிவித்த இக்கட்சியின் கல்குடா தொகுதி அமைப்பாளர் M.ஜவாத் அவர்கள் அண்மையில் பொது உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் வெளியிடப்பட்ட பிரதேச செயலாளர்களின் இடமாற்றம் தொடர்பான விபரங்களில் கல்குடா தொகுதி உள்ள முஸ்லிம்கள் செறிந்து வாழும் கோறளைப்பற்று மத்தி, கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுகளில் புதிதாக வெளியிடப்பட்ட இடமாற்ற விபரத்தில் தமிழ் பிரதேச செயலாளர்களின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது இங்கு வாழும் மக்களின் இருப்பிற்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தும் செயற்பாடாகும். தகுதிவாய்ந்த எத்தனையோ முஸ்லிம் பிரதேச செயலாளர்கள் இருந்த போதிலும் திட்டமிடப்பட்டு தமிழ் பிரதேச செயலாளர் இப்பகுதிகளில் காலா காலம் நியமிக்கப்பட்டு வருகின்றதை ஏற்றுக் கொள்ளமுடியாது. இது போன்று தமிழ் மக்கள் செறிந்து வாழ்கின்ற பிரதேசங்களில் முஸ்லிம் பிரதேச செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்களா? அதனை அம்மக்கள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ளவில்லை மாறாக அதற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் இன்னொரன்ன விடயங்களை மேற்கொள்வதை அவதானிக்க முடிகின்றது. கடந்த காலங்களில் முஸ்லிம் பிரதேச செயலாளர் பிரிவுகளில் கடமை புரிந்த தமிழ் பிரதேச செயலாளர் எமது காணிகளை தாரை வார்க்கும் செயற்பாடுகளிலும் நிர்வாக அடக்குமுறைகளிலும் ஈடுபட்டதை அவதானிக்க முடிகின்றது. இதற்கான விசேட வேலை திட்டம் ஒன்றை ஜனநாயக ஐக்கிய முன்னணி எமது பிரதேசத்தில் உள்ள சமூக மட்ட அமைப்புக்கள்,பள்ளிவாயல்கள், புத்திஜீவிகளை இணைத்து முன்னெடுத்துச் செல்வதற்கும் ஏற்பாடு செய்துள்ளது.
மேலும் இவ் இடமாற்றத்திற்கு எதிராக எமது பிரதேச அபிவிருத்தி குழு தலைவரும் சுற்றாடல் அமைச்சருமான நஸீர் அஹமட் அவர்களின் ஊடாக எமக்கு தொடர்ச்சியாக இடம்பெறும் அநீதிகளுக்கு தீர்வு காண திட்டமிட்டுள்ளோம். மேலும் தற்போது நாட்டின் அபிவிருத்தியிலும் இன ஐக்கியத்திற்காகவும் செயற்பட்டு வரும் அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் முஸ்லிம்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பார் என்று நம்புகின்றோம் என்றும் குறிப்பிட்டார்.
Click here to claim your Sponsored Listing.
Category
Telephone
Website
Address
Colombo