Shirdi Sai baba
24/10/2019
31/03/2018
#அனைத்தும்_அறிவேன்
🕉 ஒருமுறை தாமோதர் சந்தானே குடும்பத்தினர் பாபாவை தரிசனம் செய்ய ஷீரடிக்கு சென்றனர். அந்த பயணத்தின் போது அவரது மனைவியின் மூக்குத்தி வழி தவறி துளைந்து போனது. அவரது மனைவி அதை எல்லாம் பெருட்படுத்தவில்லை ,ஆனாலும் மூக்குத்தி கிடைத்தால் பரவாயில்லை என்று மனதிற்க்குள் நினைத்தபடியே பயணம் செய்தாள்.
📌அவர்கள் குழந்தை வரம் வேண்டி பாபாவை தரிசனம் செய்ய ஷீரடிக்கு வந்தனர். பின்னர் துவாரகமாய்க்கு சென்று பாபாவை தரிசனம் செய்துவிட்டு ,பாபாவின் முன்பு நீண்ட நேரம் அமைதியாக அமர்ந்து இருந்தனர். பாபாவும் அவர்களை எதற்காக வந்தார்கள் என்று கேட்கவில்லை.
📍பிறகு பாபா அவர்களுக்கு ஒரு தேங்காயை அளித்து அதை சாப்பிட சொன்னார். அதை பெற்று கொண்டு அவர்களது அறைக்கு சென்று அந்த தேங்காயை சாப்பிடவதற்க்காக உடைத்தனர் . அந்த தேங்காயின் உள்ளே அவரது மனைவியின் துளைந்து போன மூக்குத்தி இருந்தது , அதை கண்டு ஆச்சரியம் அடைந்தனர் . உடனே உற்சாகமாக அந்த தேங்காயை அறைக்குள் வைத்துவிட்டு ,மூக்குத்தியை மட்டும் எடுத்து கொண்டு பாபாவிடம் ஓடி சென்றனர்.
📌 பாபா அவர்களை பார்த்து கூச்சலிட்டார் ,
"" இருவரும் இங்கு வந்து அமைதியாக உட்கார்ந்து இருந்தார்கள் ,எனக்கு தெரியாதா !! உங்களுக்கு சந்ததி இல்லை என்றும் மற்றும் உங்கள் மூக்குத்தி துளைந்து போனதையும் நான் அறிவேன். அதனால் தான் இரண்டிற்க்கும் தேங்காயை ஆசிர்வதித்து அளித்தேன் , அதனால் உங்களுக்கு மூக்குத்தி கிடைத்தது , ஆனால் நீங்கள் தேங்காயை அறையில் வைத்துவிட்டு வந்துவிட்டீர்கள். உடனே இருவரும் அறைக்கு சென்று தோங்காயை சாப்பிடுங்கள் .அப்பொழுதுதான் உங்கள் பிரச்சினைகள் முழுவதுமாக முடிவுக்கு வரும் """ என்றார் .
📍பின்னர் எட்டாவது நாள் பாபா அவர்களுக்கு செல்வதற்கு அனுமதி அளித்தார். அப்பொழுது பாபா அவர்களை பார்த்து கூச்சலிட்டார்,
""இப்பொழுது வீட்டிற்கு செல் , ஆனால் ஷீர்டிக்கு மீண்டும் வர வேண்டாம் ! "" என்றார்.
📌அதைகேட்டு தாமோதர் ஆச்சரியம் அடைந்து ,கனமான இதயத்துடன் பாபா ஏன் ஷீரடிக்கு இனி வர வேண்டாம் என்று சொல்கிறார் என்று நினைத்தார்.
📍உடனே தாமோதர் பாபாவிடம் ,
"" எல்லாம் சரி , நான் இனி வரவில்லை ஆனால் நான் செல்லும் முன்பு எனக்கு உங்களது அபரிமிதமான ஆசீர்வாதத்தை அளியுங்கள் "" என்றார்.
📌 அதற்கு பாபா ,
"" அரே !! நீ போன பின்பும் நான் உன்னை பார்த்துக்கொள்வேன் , உங்கள் முழு வம்சாவளி வரிசையை முழுவதும் நான் அறிவேன் . நீயும் நானும் பல கடந்த முற்பிறவியில் ஒன்றாக இருக்கிறோம். "" என்றார் .
📍 பின்னர் பாபா அவர்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் கை நிறைய உதி அளித்து ஆசீர்வதித்தார். பின்பு அவர்கள் வீடு திரும்பினர்🕉
🎉➡ பகிருங்கள் பக்தர்களே ♻
Click here to claim your Sponsored Listing.
Contact the restaurant
Website
Address
Colombo
00400