Motivational Sense.com

Motivational Sense.com

Share

24/03/2020

BE CAREFULL OF CURFEW…

சட்டம் பிராண்டி விடும்
“””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””

எதற்காக ஊரடங்கு…அந்த நோக்கத்தை சரியாகப் புரிந்து கொண்டால் கேர்ஃபிவை கெயார் பண்ணுவார்கள் நம்ம சிட்டிசன்கள்.

கேர்ஃபிவ் ஒன்றும் அடுத்தவர்களுக்காக அல்ல நமக்காக............... நமக்கே மட்டுமாக. நம்மை கொரொனாவின் கொடூரத்திலிருந்து விலக்களித்துக் கொள்ளுவதற்காக நாமாக தனிமைப்பட மாட்டோம் இவனுகளுக்கு சட்டப்படி ஊரடங்கு போட்டால்தான் ஊட்டுக்குள்ளே அடங்குவார்கள் என்று நம்பி அரசாங்கம் போட்டிருக்கின்ற இந்த ஊரடங்கு தொடர்பில் அடங்குவதற்கு மறுக்காதிருப்போமாக என்று அனைவரையும் மறுபடி மறுபடி கேட்டுக் கொண்டு…இந்த நேரத்தில் ஊரடங்கினை மீறுகின்ற போது ஏற்படுகின்ற சட்ட அட்ராஸிட்டிகளைப் பற்றி “புத்தியுள்ள மாந்தரோடு” உரையாடலமென்று ஆசைப்படுகின்றேன்.

தற்போதைய ஊரடங்கு என்பது சற்று வித்தியாசமானது. முன்னை மாதிரியல்ல. முசுப்பாத்தி காட்ட முடியாது. இப்போதைய கொரொனா வைரஸின் ஊழித் தாண்டவத்தில் அமுலிலிருக்கின்ற ஊரடங்கினை வயலேட் பண்ணுகின்ற சந்தர்ப்பத்தில் சட்டம் நம்மை வைத்து தரமான சம்பவம் செய்யக் காத்திருக்கின்றது என்பதனை சமூகத்தாருக்கு அறியத் தருகின்றேன்.

இது தொடர்பில் இலங்கையில் பல சட்டங்கள் தண்டணையையும் தண்டப் பணத்தையும் ஒன் யுவர் மார்க்கில் வைத்துக் கொண்டு யாராவது மாட்ட மாட்டானா என்ற பெரும் பசியோடு காத்துக் கிடக்கின்றன. தயவு செய்து அநியாயத்துக்கு இரையாகி விடாதீர்கள் சொல் பேச்சு கேட்காத புள்ளீங்களா. கெலின்ம கபால மோட்சம்தான். இரக்கமே காட்ட மாட்டார்கள். சட்டமும்தான் கருணைக்கு சாரி பாஸ்.

பின்வரும் சட்டங்கள் பீதியைக் கிளப்புகின்றன.

1947ம் அண்டின் 25ம் இலக்க பொது மக்கள் பாதுகாப்பு (Public Security Ordinance) சட்டத்தின் பிரவு-16ன் கீழ் அதிமேதகு ஜனாதிபதி நாட்டின் அவசர நிலைமை கருதி ஊரடங்கு சட்டத்தை வர்த்தமாணி மூலம் அறிவித்து அமுல்படுத்துகின்ற சந்தர்ப்பத்தில் அதனை மீறி நடக்கின்றவர்கள் ஒரு மாதத்துக்கு விஞ்ஞாத கடூழிய சிறைத் தண்டனைக்கு ஆளாவார்கள்.

இதே போல இலங்கை தண்டனைச் சட்டக்கோவை (Sri Lankan Penal Code) பிரிவு-264ன் கீழ் “தொற்று நோய் காரணமாக தனிமைப்படுத்தல் கட்டளையாக்கப்பட்டிருக்கின்ற நேரத்தில் அதனை மீறி நடக்கின்ற நபர்கள் குற்றவாளியாகக் காணப்படுகின்ற விடத்து ஆறு மாத காலத்துக்கு விஞ்ஞாத சிறைத் தண்டணைக்கு ஆளாவார்கள்.

இதே போல 1897ம் ஆண்டின் 03ம் இலக்க நோய் தடுப்பு மற்றும் தனிமைப்படுத்தல் கட்டளை சட்டத்தின் (Quarantine and Prevention of Diseases Ordinance No: 3 of 1897) பிரிவு-04ன் படி இந்த கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகளையோ அல்லது அதன் கீழ் ஆக்கப்படுகின்ற விதிகளையோ (இப்போது இந்த சட்டம்தான் நாடடி;ல் ஃபுல் எக்டீவெஷனில் இருக்கின்றது) மீறுவது குற்றமாகும். இந்த சட்டத்தின் பிரிவு-05 ன் படி இந்த சட்டத்தின் கீழ் குற்றவாளிகளாகக் காணப்படுகின்றவர்கள் ஆறு மாத காலத்தால் தண்டிக்கப்படக் கூடிய சிறைத் தண்டனையாலும் ரூபா. 2000க்கு விஞ்ஞாத தண்டப் பணத்தாலும் தண்டிக்கப்படுவார்கள். பிரவு-06ன் படி இந்த சட்டத்தின் கீழ் குற்றம் செய்தவர்களாக காணப்படுகின்றவர்களை பொலிசார் எந்தவிதமான கைதாணையுமில்லாமல் (Without Warrant) கைது செய்ய முடியும்.

இப்படி எல்லா சட்டங்களும் ஊரடங்கினை மீறுகின்ற சட்ட மறுப்பான்களுக்கெதிராக சம்பவம் செய்ய வழி மேல் வழி வைத்த வெறித்தன வெயிட்டிங்கில் இருக்கின்றன. கொரொனா தொற்றிலிருந்து தேசத்தை மீட்க முடிந்தளவு அரசாங்கமும் சம்பநதப்பட்ட வைத்தியர்கள் தாதிகள் அதிகாரிகள் போரடிக் கொண்டிருக்கின்ற இந்த வேளையில் சட்டத்தை மதிக்காமல் ஊரடங்கை மீறி குரங்கு சேட்டை பண்ணுகின்றவர்களுக்கெதிராக சத்தியமாக இங்கேயிருக்கின்ற எந்த சட்டமும் கருணை ப்ளீஸ் என்று காப்பாற்ற முன் வராது என்பதனை மனதிற் கொள்க எனது மனிதருள் மாணிக்கங்களே.

கிண்ணியா சபருள்ளாஹ்
2020-03-23

Photos from Motivational Sense.com's post 24/03/2020

Dear world....

22/03/2020

படிப்பினை தரும் வரலாற்று கதை..

அப்பாஸியா கலீஃபாக்களில் ஐந்தாவது கலீஃபா ஹாரூன் ரஷீது என்பவர்.

அப்பாஸியாக்களின் ஆட்சி நீண்ட நெடிய காலம் இருந்திருந்தாலும், அவர்களில் கலீஃபா ஹாரூன் ரஷீத் மட்டுமே மிகவும் பிரபலமாக திகழ்ந்தார் எனலாம்.

இவருடைய ஆட்சி காலத்தில் ஒரு தடவை மிகப்பெரிய பஞ்சம் வந்தது. இந்த பஞ்சத்தின் விளைவுகள் சமர்கந்திலிருந்து பக்தாது வரையிலும், கூஃபாவிலிருந்து மராகிஷ் வரையிலும் கடும் நெருக்கடியை உண்டாக்கியது.

ஹாரூன் ரஷீத் அவர்கள் இந்த நிலைமைகளை சமாளிக்க பலவித திட்டங்களை செயல்படுத்தினார்.

மக்களுக்காக அரசாங்க உணவுக்கிடங்குகளை திறந்து விட்டார். வரிகளை மன்னித்தார். நாடு முழுவதும் இலவச உணவுப் பந்தல்களை உண்டாக்கினார்.

அதிகாரிகள், தலைவர்கள், வியாபாரிகள் எல்லோரையும் மக்கள் சேவையில் ஈடுபடச் செய்தார். எத்தனை முயற்சிகள் செய்தும் நிலைமையை சரிபடுத்த இயலவில்லை.

இந்த பிரச்சினைகளின் காரணமாக ஒருநாள் இரவு ஹாரூன் ரஷீத் கடும் மன உளைச்சலில் இருந்தார். அவரால் உறங்க முடியவில்லை.

எனவே, நிலைமை குறித்து ஆலோசனை செய்ய தலைமை அமைச்சர் "யஹ்யா பின் காலித்" அவர்களுக்கு அழைப்பு விடுத்தார். இவர் கலீஃபா ஹாரூன் ரஷீத் அவர்களுக்கு ஆசிரியரும் கூட. கலீஃபா சிறு வயது முதலே அவரிடம் பாடம் படித்துள்ளார்.

ஹாரூன் ரஷீத், தனது ஆசிரியரும் தலைமை ஆசிரியருமான யஹ்யா அவர்களிடம் கேட்டார், "ஆசிரியர் அவர்களே! எனது மன உளைச்சலை போக்கி, நிம்மதி தருகின்ற வகையில் ஏதாவது ஒரு கதையோ, வரலாறோ சொல்லுங்களேன்."

இதைக் கேட்ட யஹ்யா புன்னகைத்தவாறே கூறினார்: "மன்னர் அவர்களே! ஏதோ ஒரு நபியின் காலத்தில் நடந்த ஒரு சம்பவத்தை நான் படித்துள்ளேன். அல்லாஹ்வின் தக்தீர் (விதி) மற்றும் திருப்தி போன்ற விவரங்களை அழகாக விளக்கும் கதை அது. நீங்கள் விரும்பினால் கூறுகிறேன்."

ஹாரூன் ரஷீத் கூறினார்: "முதலில் அதை சொல்லுங்கள். மன உளைச்சலின் காரணமாக எனக்கு மூச்சு முட்டுகிறது." யஹ்யா கதையை சொல்ல ஆரம்பித்தார்.

ஏதோ ஒரு காட்டில் ஒரு பெண் குரங்கு தனது குட்டியுடன் வசித்து வந்தது. ஒரு நாள் அது எங்கோ தூர பயணம் போக வேண்டி இருந்தது. ஆனால் குட்டியை உடன் கொண்டு போக முடியாத சூழ்நிலை. எனவே காட்டுக்கு ராஜாவாக இருந்த சிங்கத்திடம் வந்து, அரசே! நான் வெளியூர் பயணம் போகிறேன். நீங்கள் காட்டுக்கே ராஜா. அதனால் உங்கள் பாதுகாப்பில் எனது குட்டியை விட்டு செல்கிறேன். பார்த்து கொள்வீர்களா? என கேட்டது. சிங்கமும் ஏற்றுக் கொண்டது. குரங்கும் பயணம் போய் விட்டது.

அதன் பிறகு சிங்கம் வெளியே போகும் போதெல்லாம் குரங்கு குட்டியை தனது தோளில் ஏற்றிக்கொண்டு காட்டை வலம் வரத்தொடங்கியது. தினமும் இதே வழக்கம். குட்டியும் பாதுகாப்பாக இருந்தது.

ஒரு நாள் சிங்கம் இப்படி குரங்கு குட்டியை தோளில் வைத்தவாறு போய்க்கொண்டு இருந்த போது எங்கிருந்தோ திடீரென வந்த கழுகு பறவை ஒன்று, குட்டியை தூக்கிக் கொண்டு பறந்து விட்டது. சிங்கம் அங்கே இங்கே ஓடி, தேடி அலைந்தாலும் கழுகையும் காண முடியவில்லை; குரங்கு குட்டியையும் மீட்க முடியவில்லை. சிங்கம் பெரிய கவலையில் ஆழ்ந்தது.

சில நாட்களுக்கு பிறகு வந்த தாய்க்குரங்கு, சிங்கத்திடம் தனது குட்டியை திரும்ப கேட்டது. சிங்கம் வெட்கத்தோடு நடந்ததை கூறியது. அதைக் கேட்ட குரங்கு, சிங்கத்தை தாறுமாறாக திட்டியது.

"உனக்கு வெட்கமாக இல்லையா? நீ காட்டுக்கே அரசன் என்கிறாய். ஒரு குட்டியை, அமானிதத்தை பாதுகாக்க முடியவில்லையே. முழு காட்டையும் எப்படி ஆளப்போகிறாய்?"

சிங்கம் வெட்கத்தோடு பதில் சொன்னது, "நான் நிலத்தில் தான் ராஜா. தரைவழியாக எந்தவித ஆபத்து வந்து இருந்தாலும் நான் உனது குட்டியை காப்பாற்றி இருப்பேன். ஆனால் இந்த ஆபத்து வானத்திலிருந்து வந்தது. அதை வானத்தில் உள்ளவன் காக்க முடியும். நான் என்ன செய்ய!"

யஹ்யா பின் காலித் இந்த கதையை கூறிவிட்டு,
"அரசர் அவர்களே! இந்த பஞ்சமும் நிலத்திலிருந்து உண்டாகி இருந்தால், நீங்கள் அரசராக நின்று, கட்டுப்படுத்தி இருக்க முடியும். ஆனால் இது வானத்திலிருந்து இறங்கிய வேதனை. அதை இறக்கிய அல்லாஹ் தான் போக்க முடியும்.

எனவே, நீங்கள் அரசராக இல்லாமல், ஒரு யாசகனாக அல்லாஹ்விடம் மண்டியிட்டு உதவி கேளுங்கள். நிச்சயம் அல்லாஹ் இந்த பஞ்சத்தைப் போக்கி விடுவான்."

"ஆபத்துகள் இரண்டு வகையில் வரலாம். நிலத்திலிருந்து உண்டாகும் ஆபத்துகளை மக்கள் இக்லாசான முறையில் ஒன்றிணைந்து அல்லாஹ்வின் உதவியோடு போராடினாலே, தீர்த்து விடலாம்.

வானத்திலிருந்து வரும் ஆபத்துகளிலிருந்து பாதுகாப்பு பெற வேண்டுமானால்... அல்லாஹ்வை திருப்தி படுத்தாத வரை முடியாது. அல்லாஹ்வை திருப்தி படுத்த நீங்கள் அரசராக அல்ல ; யாசகனாக மாற வேண்டும். அவனிடம் தவ்பா செய்து உதவி தேடுங்கள். நிச்சயம் கிடைக்கும்.

எல்லா பிரச்சினைகளுக்கும், அதன் தீர்வுகளுக்கும் மத்தியில் உள்ள இடைவெளி, நெற்றிக்கும், ஸஜ்தா செய்யும் இடத்திற்கும் உள்ள தூரம் தான்.

நமது பிரச்சனைகளுக்கு தீர்வை தேடி ஏழு கடல்களையும் தாண்டி போக முயல்கிறோம். ஆனால் நமது நெற்றியை தரையில் வைத்து அல்லாஹ்விடம் உதவி கேட்க மறக்கிறோம்.

கதையின் நீதி:
இப்போது நம்மை சூழ்ந்து கொண்டுள்ள எல்லா வித ஆபத்துகளிலிருந்தும் பாதுகாப்பு பெற, அல்லாஹ்விடமே சரணடைவோம், உதவி பெறுவோம்.

(உருதுவிலிருந்து)

- சென்னை ஜியாவுதீன் பாகவி

Want your school to be the top-listed School/college in Colombo?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address


Colombo