SLMC MEDIA UNIT

SLMC MEDIA UNIT

Share

03/07/2026

இலங்கை சார்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் பிரதி சபாநாயகர் அவர்கள் ஈரான் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லாஹ் கொமய்னியின் ஜனாஸா நல்லடக்கத்தில் கலந்து கொண்டர்.

03/07/2026

ஈரான் சென்றுள்ள ரவூப் ஹக்கீம்:
ஆயதுல்லாஹ் அலி கமேனியின் இறுதிச் சடங்குகளில் பங்கேற்பு!

ஈரானின் உச்ச தலைவர் அஆயதுல்லாஹ் கமேனியின் ஜனாஸா நல்லடக்க நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் ஈரான் பயணமாகியுள்ளார்.

​ஈரான் அரசாங்கத்தின் விசேட அழைப்பின் பேரில், நேற்று (ஜூலை 02) வியாழக்கிழமை அவர் தெஹ்ரான் நோக்கிப் பயணித்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

​கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய கூட்டுப் படைகள் ஈரான் மீது மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில், உச்ச தலைவர் கமேனி உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து பிராந்தியத்தில் நிலவிய போர்ச் சூழல் காரணமாக, அவரது ஜனாஸா நல்லடக்கம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

​தற்போது, அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையில் இடம்பெற்று வரும் தற்காலிக அமைதிப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, பல நாட்கள் நீடிக்கக்கூடிய வகையிலான பிரம்மாண்டமான ஜனாஸா ஊர்வலத்திற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த முக்கிய நிகழ்விலேயே ரவூப் ஹக்கீம் கலந்துகொள்ளவுள்ளார்.

அமெரிக்க - இஸ்ரேல் போரின் தொடக்கத்தில் கொல்லப்பட்ட ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் கிரியைகளுக்காக, 20 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தெஹ்ரானில் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. வெளிநாட்டு ஊடக அறிக்கைகளின்படி, இது ஈரானிய வரலாற்றில் மிகப்பெரிய கூட்டமாக இருக்கும்.

தங்கள் மறைந்த தலைவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக, நாடு முழுவதிலுமிருந்து பெருந்திரளான மக்கள் ஏற்கனவே தலைநகரை நோக்கி வந்துகொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பிராந்தியத்தில் வலுவான அரசியல் செல்வாக்கைச் செலுத்திய இந்த சக்திவாய்ந்த தலைவரின் மரணத்தால் ஒட்டுமொத்த ஈரானிய மக்களும் ஆழ்ந்த துக்கத்தில் இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

பிராந்தியத்தில் கடுமையான இராணுவ பதற்றம் நிலவினாலும், இறுதிச் சடங்கு சிறந்த முறையில் நடைபெறுவதை உறுதி செய்வதற்காக, தெஹ்ரான் முழுவதும் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செயல்படுத்தப்பட்டுள்ளதாக நாட்டின் பாதுகாப்புப் படைகள் உறுதிப்படுத்துகின்றன.

முன்னாள் உச்ச தலைவர் அலி கமேனிக்கான இறுதி ஊர்வலம் மற்றும் நினைவேந்தல் நாளை (04) தலைநகர் தெஹ்ரானில் தொடங்க உள்ளது. அரசு மரியாதையுடன் கூடிய இறுதிக் கிரியைகள் பல நாட்கள் நீடித்து, ஜூலை 9 ஆம் திகதி ஜனாஸா அடக்கம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, முன்னாள் உச்ச தலைவரின் இறுதிக் கிரியைகளை அவரது சொந்த ஊரான மஷ்ஹத்தில் ஜூலை 09 ஆம் திகதி நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இந்த துக்க காலத்தில் நாடு முழுவதும் சிறப்பு மத வைபவங்கள் மற்றும் தொடர்ச்சியான பொது அஞ்சலி நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்று ஈரானில் இருந்து வரும் அறிக்கைகள் மேலும் தெரிவிக்கின்றன.

30/06/2026

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், ஓய்வு பெற்ற சிரேஷ்ட பொலிஸ் அத்தியகட்சகருமான மீராசாஹிபு அப்துல் மஜீட் அவர்கள் இன்று இறைவன் அழைப்பை ஏற்றுக்கொண்டார்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

யா அல்லாஹ் அன்னாரின் எல்லா நற்செயல்களையும் ஏற்று, ஜன்னத்தில் உயர்ந்த இடத்தை வழங்குவானாக. ஆமீன்.

:- ஜனாசா தற்போது அன்னாரின் கொழும்பு இல்லத்தில் உள்ளது.
ஜனாசா நல்லடக்கம் தொடர்பான தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

Photos from SLMC MEDIA UNIT's post 19/06/2026

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (19) வெள்ளிக்கிழமை மாலை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அவர்களை மரியாதை நிமித்தமாகச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இச்சந்திப்பின் போது, இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைவரம் குறித்து விரிவாக ஆராயப்பட்டதுடன், இலங்கையிலுள்ள சிறுபான்மைக் கட்சிகளின் பிரதிநிதிகள் அனைவரும் ஒன்றிணைந்து, விரைவில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களைச் சந்திப்பதற்கு வருகை தரவுள்ளமை குறித்தும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவிடம், முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் எடுத்துரைத்தார்.

இந்த உத்தியோகபூர்வ சந்திப்பின் போது, தமிழ்நாடு வக்ஃபு வாரியத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கே. நவாஸ் கனி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலத் துணைச் செயலாளர் ஜமால் முஹம்மது இப்ராஹிம்,அதன் தென்காசி மாவட்டச் செயலாளர் சையது பட்டாணி, எம்.எஸ்.எப். மாநிலச் செயலாளர் ஷபீக் அஹமது மற்றும் "மணிச்சுடர்" நாளிதழின் சிரேஷ்ட ஊடகவியலாளர் திருச்சி எம்.கே. ஷாகுல் ஹமீது ஆகியோர் உடனிருந்தமை குறிப்பிடத்தக்கது.

18/06/2026

திருச்சி ஜமால் முகம்மது கல்லூரிக்கு இன்று (18) வருகை தந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் அவர்களுக்கு கல்லூரி நிர்வாகம் சார்பில் அதன் இயக்குநர் முனைவர் அப்துல் காதர் நிகால், கல்லூரி முதல்வர் முனைவர் ஜாகீர் உசேன் ஆகியோர் சால்வை அணிவித்து வரவேற்றனர். பின்னர் கல்லூரியில் மாணவர்கள் மற்றும் மாணவிகள் மேற்கொள்ளும் பட்டப்படிப்புகள் குறித்து விளக்கிமளித்தனர். இதன்போது, திருச்சி அய்மான் மகளிர் கலை அறிவியல் கல்லூரி தாளாளர் மற்றும் செயலாளர் ஹபிபுல்லாஹ், மூத்த ஊடகவியலாளர் திருச்சி எம். கே. ஷாகுல் ஹமீது ஆகியோர் உடனிருந்தனர்.

Want your business to be the top-listed Media Company in Colombo?
Click here to claim your Sponsored Listing.

Address


Colombo
00020000