Keyu Tamil

Keyu Tamil

Share

01/06/2026

திருவள்ளுவர் ஒரு சைவரே ... பல இந்து தெய்வங்களைக் குறிப்பிடுகிறார்.

சிலர் இவர் சமணரா, பௌத்தரா என்றும் வாதாடிப் பார்த்து தோற்றுப்போனார்கள். ஏனெனில் சமணமோ பௌத்தமோ, தெய்வத்தைப் பற்றிப் பேசுவதில்லை; வள்ளுவரோ தெய்வம் பற்றியும், வானுறையும் தெய்வம் பற்றியும் அடிக்கடி பேசுகிறார்.

சனாதன தர்மத்தில்தான் 'தெய்வம்' என்ற சொல் இருக்கிறது. இந்த சொல் 6 குறள்களில் இருக்கிறது. திருவள்ளுவர் ஹிந்து சமயத்தவர் என்பதற்கு இதுவும் ஒரு சான்று.

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.

குறள் 43:

தென்புலத்தார், தெய்வம், விருந்தினர், சுற்றத்தார், தான் என்ற ஐவகையிடத்தும் அறநெறி தவறாமல் போற்றுதல் சிறந்த கடமையாகும்.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும் தெய்வத்துள் வைக்கப் படும்.
குறள்: 50

உலகத்தில் வாழவேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன், வானுலகத்தில் உள்ள தெய்வ முறையில் வைத்து மதிக்கப்படுவான்.

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை.
குறள் 55.

வேறு தெய்வம் தொழாதவளாய்த் தன் கணவனையே தெய்வமாகக் கொண்டு தொழுது துயிலெழுகின்றவள் பெய் என்றால் மழை பெய்யும்.

தெய்வத்தால் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்.
குறள் 619:

ஊழின் காரணத்தால் ஒரு செயல் செய்ய முடியாமல் போகுமாயினும், முயற்சி தன் உடம்பு வருந்திய வருத்தத்தின் கூலியையாவது கொடுக்கும்.

ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத்
தெய்வத்தோ டொப்பக் கொளல்.
குறள் 702.

ஐயப்படாமல் மனத்தில் உள்ளதை உணரவல்லவனை (அவன் மனிதனே ஆனாலும்) தெய்வத் தோடு ஒப்பாக கொள்ள வேண்டும்.

குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றுத் தான்முந் துறும்.
குறள் 1023.

என் குடியை உயரச் செய்வேன் என்று முயலும் ஒருவனுக்கு ஊழ், ஆடையைக் கட்டிக் கொண்டு தானே முன் வந்து துணை செய்யும்.

கடவுள் வாழ்த்தில் இவர், கடவுளுக்குப் பயன்படுத்திய சொற்கள் எல்லாம் தேவாரம், திவ்வியப்பிரபந்தத்தில் வருகின்றன. சம்ஸ்கிருதத்திலும் உள்ளன.

திருவள்ளுவர் குறிப்பிடும் தெய்வங்கள்:–

அடி அளந்தான் – திருமாலின் (த்ரி விக்ரம) வாமனாவதாரம் (610)

அமிழ்து- பாற்கடலை கடைந்தபோது வந்த அம்ருதம் 64, 1106, 720, 82 (சாவா மருந்து)

ஆதி பகவன் – 1

யமன் (கூற்றம்) – 269, 1085, 326, 765, 1083

பித்ருக்கள் (இறந்தோர்)- தென்புலத்தார் 43 யமன் வாழும் திசை

பிரம்மா – உலகு இயற்றியான் 1062

இந்திரன் – 25

[[ ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்புளார் கோமான் இந்திரனே சாலுங் கரி

( குறள் எண் : 25 )

சாலமன் பாப்பையா உரை: அகன்ற வானத்து வாழ்பவரின் இறைவனாகிய இந்திரனே, புலன்வழிப் பெருகும் ஆசை ஐந்தையும் அறுத்தவனின் வலிமைக்குத் தகுந்த சான்று ஆவான் ]]

கண்ணன் – தாமரைக்கண்ணான் 1103

லக்ஷ்மி- தாமரையினாள் 617, 179, 519, 920,

மூதேவி – மாமுகடி 617, 936

பன் மாயக் கள்வன் (கோபி, கிருஷ்ணன்)-1258

வள்ளுவர், பல நூறு குறள்களில் சொன்ன— தவம், தானம், வேள்வி, தர்மம் (அறம்), நோன்பு, பார்ப்பான், அந்தணன், புத்தேளிர் (தேவர்), மேல் உலகம், பிறவாமை, மறை, மறை மொழி (மந்திரம்), விதி, நிலையாமை, மெய்ப்பொருள், மாசறு காட்சி, நூல் (வேதம்) முதலியன இந்துமத விஷயங்கள்.

இதற்கு அடுத்தபடியாக வருவது வேத கால தெய்வங்களான இந்திரன், யமன் ஆகும்.

பிரம்மா — (உலகு இயற்றியான் 1062) —.

சிவனைப் பற்றியும் பிரம்மாவைப் பற்றியும் மறைமுகக் குறிப்புகள், இரண்டு குறள்களில் வருகின்றன:

பெயக்கண்டும் நஞ்சுண்டமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டுபவர் (580)

நஞ்சுண்டவர் - சிவபெருமான்.

இன்னொரு குறளில் (377) ‘வகுத்தான்’ என்று பிரம்மாவைக் குறிப்பிடுகிறார். வகுத்தான் என்பதை தலைவிதியை எழுதிய தெய்வம் என்று உரைகாரர்கள் காட்டுவர்.

24/05/2026

ஆசிரியர் சேவைக்கு பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப்பரீட்சை இன்று வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

23344 வெற்றிடங்களை பூர்த்தி செய்ய அரச சேவையில் உள்ள 66991 பட்டதாரிகளும் திறந்த அடிப்படையில் 99991 பட்டதாரிகளுமாக 163433 பட்டதாரிகள் தோற்றியிருந்தனர். இவற்றில் மாற்று வலுவுள்ள 323 பட்டதாரிகளும் தோற்றி இருந்தனர்.

பரீட்சை வெற்றிகரமாக 1048 பரீட்சை நிலையங்களில்நடத்தப்பட்டது என பரீட்சைகள் திணைக்களம் மற்றும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

Want your public figure to be the top-listed Public Figure in Batticaloa?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address


Ampilanthurai, Kokkaddicholai
Batticaloa
30162