Today Ceylon
03/06/2026
றிஸ்வி யஹ்சர் உகண பிரதேச செயலகத்தின் கணக்காளராக கடமையேற்றார்...!!!
(ஷனா)
அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேச செயலகத்தின் கணக்காளராக கடமையாற்றிய மருதமுனையை சேர்ந்த கமறுத்தீன் றிஸ்வி யஹ்சர், நாவிதன்வெளி பிரதேச செயலக கணக்காளர் கடமைக்கு மேலதிகமாக உகண பிரதேச செயலகத்தின் கணக்காளராகவும் இன்று (03) கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார்.
அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் அனுப்பம மங்கள விக்ரமாராச்சி மற்றும் உகண பிரதேச செயலாளர், உதவிப் பிரதேச செயலாளர், நிர்வாக அதிகாரிகள் முன்னிலையில் தனது கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார். றிஸ்வி யஹ்சர், 2000 ஆம் ஆண்டு இலங்கை கணக்காளர் சேவையில் இணைந்து கொண்டதன் பின்னர் மகோயா பிரதேச செயலகம், மகோயா வலயக் கல்வி அலுவலகம், பதியத்தலாவ பிரதேச செயலகம், அக்கரைப்பற்று மாநகர சபை, கல்முனை வலயக் கல்வி அலுவலகம் ஆகியவற்றில் இதற்கு முன்னர்
கணக்காளராக கடமையாற்றியுள்ளார். இறுதியாக நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் கணக்காளராக கடமை ஆற்றும் நிலையிலயே தற்போது இப்பணிக்கு மேலதிகமாக உகன பிரதேச செயலகத்தில் கணக்காளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
றிஸ்வி யஹ்சர், மருதமுனையை சேர்ந்த கமறுத்தீன் - நஜ்முன்னிசா ஆகியோரின் இரண்டாவது புதல்வர் என்பதுடன் இவர் மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரியின் பழைய மாணவரும் ஆவார்.
03/06/2026
நாவிதன்வெளியில்
'உலக பால் தினம் 2026'
உலக பால் தினத்தை முன்னிட்டு, கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தின் PSDG திட்டத்தின் கீழ் “திரவப் பால் பாவனையை ஊக்குவிக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி” நாவிதன்வெளி பிரதேச செயலக முன்றலில் நாவிதன்வெளி அரச கால்நடை வைத்தியர் Dr. (Mrs). யாமினி மயூரன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்ச்சியின் பிரதான நோக்கம் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் புத்தம் புதிய திரவப் பாலின் பாவனையை ஊக்குவித்தல், பாலின் ஊட்டச்சத்து முக்கியத்துவம் தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தல், ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களை மேம்படுத்தல் மற்றும் உள்ளூர் பால்பண்ணையாளர்களை ஊக்குவித்தல் என்பனவாகும்.
இந்நிகழ்வில் நாவிதன்வெளி பிரதேச செயலாளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் சுகாதார வைத்திய அதிகாரி, பொது சுகாதார பரிசோதகர்கள், சுகாதார திணைக்கள உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய அரச திணைக்களங்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள், வர்த்தகர்கள், அரச ஊழியர்கள் மற்றும் சமூகப் பிரதிநிதிகள் எனப் பெருமளவானோர் தொடரும் மாணவர்களுக்கும் பாலின் ஊட்டச்சத்து மற்றும் சுகாதார நன்மைகள் குறித்து தெளிவூட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
03/06/2026
14 வயதுடைய இளம் பௌத்த பிக்கு துஸ்பிரயோகம்-அம்பாறை மாவட்டத்தில் சம்பவம்
பாறுக் ஷிஹான்
14 வயதுடைய இளம் பௌத்த பிக்குவை தொடர்ச்சியாக துஸ்பிரயோகம் மேற்கொண்டு தலைமறைவாகி இருந்த 41 வயதுடைய பௌத்த தேரரை மத்திய முகாம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம் மத்திய முகாம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுகந்த கம பகுதியில் அமைந்துள்ள விகாரையில் செவ்வாய்க்கிழமை(2) மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன் போது விகாரையில் தங்கி இருந்த 5 இளம் பிக்குகில் 3 இளம் பிக்குகள் அண்மையில் தப்பி சென்ற சம்பவம் தொடர்பில் அறிந்த ஊர் மக்கள் விகாரையை நோக்கி ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொள்ள தயாரான வேளை குறித்த விடயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
மேலும் 2 இளம் பிக்குகள் பொலிஸாரினால் வாக்குமூலம் பெறுவதற்காக விகாரையில் இருந்து அழைத்து சென்ற நிலையில் குறித்த சந்தேக நபரான 41 வயது பௌத்த தேரர் தீகவாவி பிரதேசத்திற்கு தப்பி சென்றிருந்தார் என எமது செய்தியாளர் பாறுக் ஷிஹான் தெரிவித்தார்.
பின்னர் மற்றுமொரு பௌத்த பிக்கு சகிதம் 41 வயதுடைய பௌத்த தேரர் தீகவாபி பகுதியில் இருந்து மத்திய முகாம் பொலிஸாரிடம் சரண் அடைந்ததை தொடர்ந்து கைது செய்யப்பட்டார்.
அத்துடன் குறித்த சம்பவத்தில் வாக்குமூலம் வழங்கிய இரு இளம் பிக்குகளில் பாதிக்கப்பட்ட 14 வயதுடைய இளம் பிக்குவை மத்திய முகாம் பொலிஸார் வாக்குமூலத்தை பெற்றுக்கொண்டதுடன் மருத்துவ பரிசோதனைக்காக அம்பாரை மாவட்ட பொது வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரியிடம் அழைத்துச் சென்றுள்ளனர்.
மேலும் குறித்த சம்பவத்தில் ஈடுபட்டு சந்தேகத்தில் கைதான 41 வயது சந்தேக நபரான பௌத்த தேரரை இன்று(3) அம்பாறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த மத்திய மகாம் பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
03/06/2026
#கிண்ணியாவில் பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில் ஐந்து பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு...
கிண்ணியா, இடிமன் பிரதேசத்தில் நேற்று (02) அதிகாலை இடம்பெற்ற வீதி விபத்தொன்றில், ஐந்து பிள்ளைகளின் தந்தையான கூலித் தொழிலாளி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
கிண்ணியா, அஹமட் லேன் பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய எம். ஏ. உசன் என்ற கூலித் தொழிலாளியே இவ்வாறு உயிரிழந்தவராவார். உயிரிழந்த நபர் (01) திகதி இரவு கிண்ணியா, ஈச்சந்தீவு பகுதிக்கு ஆற்று மணல் ஏற்றும் கூலித் தொழிலுக்காகச் சென்றுள்ளார்.
இன்று அதிகாலை வேலையை முடித்துவிட்டு, தனது மோட்டார் சைக்கிளில் அவர் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோதே இந்த விபத்து நேர்ந்துள்ளது.பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணை மற்றும் சி.சி.டி.வி (CCTV) காட்சிப் பதிவுகளின்படி, குறித்த நபர் மணல் ஏற்றுவதற்காகப் பயன்படுத்திய சவல் , மோட்டார் சைக்கிளின் கைப்பிடிக்குள் (Handlebar) சிக்கியுள்ளது.
இதன்போது, குருநாகல் பகுதியில் இருந்து தேங்காய் ஏற்றிக்கொண்டு எதிரே வந்த லொறியின் சக்கரங்களுக்குள் அகப்பட்டு, அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
விபத்துடன் தொடர்புடைய லொறியையும் அதன் சாரதியையும் கிண்ணியா பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்து கிண்ணியா பிரதேச போக்குவரத்து பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி ஏ. எம். முஸாமில் தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
294/A Ampara Road Irakkamam
Ampara
32450