importmirror.com

importmirror.com

Share

05/06/2026

அரசின் அபிவிருத்திட்டங்கள்
அடங்கிய கலந்தாலோசனை ஏன் கூட்டப்படுகிறது?
என்ற காரணமறியாது தேவையற்ற பிரச்சனைகள்
பிரதேச அபிவிருத்தியை இல்லாமலாக்கி விடும்.

05/06/2026

#முதியோர் இல்லத்தில் 12 பேர் உயிரிழந்ததன் காரணம் கண்டறியப்பட்டது!

ஜே.எப்.காமிலா பேகம்-

#பாணதுறை அங்குருவாட்டதொட்ட, படகொட பகுதியில் நடத்தப்பட்டு வந்த *"செனெஹசே கெதர - Senahase Kedalla"* என்ற முதியோர் மற்றும் சிறப்பு தேவையுடையவர்களுக்கான தங்கும் நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான தீ விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர்.

எந்தவித சட்டபூர்வ அனுமதியோ, தர நிர்ணயமோ இல்லாமல் நடத்தப்பட்டு வந்த இந்த நிலையத்தில், 15 பேருக்கு மட்டுமே வசதியுள்ள சிறிய வீட்டில் 71 பேர் அதி ஆபத்தான முறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தது இப்போது உறுதியாகியுள்ளது.

Follow importmirror.com

இது வெறும் விபத்தை விட, அதிகாரிகளின் கண்களை மூடிக்கொண்டு பணம் சம்பாதிக்கும் நோக்கில் செய்யப்பட்ட பாரதூரமான அலட்சியத்தின் சோகமாக மாறியுள்ளது.

தீ ஏற்பட்டபோது அந்த கட்டிடத்தில் ஆண்கள் 35 பேர், பெண்கள் 36 பேர் உட்பட 71 பேர் சிக்கியிருந்தனர். அதில் 62 பேர் பல்வேறு மனநல பாதிப்புகள் உள்ள சிறப்பு தேவையுடையவர்கள்.

தீ ஏற்பட்டபோது அப்பாவி முதியவர்களின் உயிரைக் காப்பாற்ற பகுதி மக்கள் மேற்கொண்ட முயற்சியில் மிகவும் அதிர்சியூட்டும் பல விடயங்கள் வெளிவந்தன. மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள், சில முதியவர்கள் சுமார் 6 அடி நீள இரும்பு சங்கிலிகளால் கட்டப்பட்டிருந்ததாக கூறினர்.

அத்துடன், இவ்வளவு பெரிய தீ பரவும்போது கூட முதியவர்களின் உயிரைக் காப்பாற்ற நிலையத்தின் உரிமையாளரோ வேறு எந்த ஊழியரோ அங்கு இருக்கவில்லை.
முழு முதியோர் இல்லத்திற்கும் வெறும் 2 ஊழியர்கள் மட்டுமே வேலை செய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

உள்ள தகவல்களின்படி, இந்த தீ விபத்திற்கு அந்த இடத்தில் இருந்த நீர் மோட்டார் மற்றும் மல்டி பிளக்கில் ஏற்பட்ட மின் கசிவே காரணம்.
அந்த இடத்தின் அருகில் சுமார் 80 மெத்தைகள் குவித்து வைக்கப்பட்டிருந்தன. மின் கசிவால் அந்த மெத்தைகளில் தீ பிடித்து அது வேகமாக பரவியது.

எந்தவித தீயணைப்பு கருவியோ பாதுகாப்பு முறையோ அங்கு அமைக்கப்படவில்லை. மன மற்றும் உடல் பலவீனமுள்ள சில முதியவர்கள் பதற்றத்தில் தீயை நோக்கியே ஓடியதாகவும் கூறப்படுகிறது. தீயில் சிக்கியவர்களை காப்பாற்ற முயன்றபோது அவர்களின் சதை உருகி விழும் அளவிற்கு தீக்காயம் ஏற்பட்டதாக சம்பவத்தை பார்தவர்கள் தெரிவித்தனர்.

இந்த கொடூர தீ விபத்து கடந்த 3ம் தேதி மாலை 5 மணியளவில் ஏற்பட்டுள்ளது. இது பற்றி அங்குருவாட்டோட்ட பொலிசாருக்கு மாலை 5.40 மணியளவில்தான் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீ ஆரம்பித்தவுடன் பகுதி மக்கள் விரைந்து செயல்பட்டு வீட்டில் சிக்கியிருந்தவர்களை காப்பாற்ற கடுமையாக முயன்றனர்.
ஆனால் வீட்டின் முன்பக்க கதவு ஜன்னல்கள் அனைத்தும் பூட்டப்பட்டிருந்ததால் மீட்பு பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

கட்டிடத்திற்கு உதவியாக வந்த 100க்கும் மேற்பட்ட மெத்தைகள் குவித்து வைக்கப்பட்டிருந்ததால் தீ மிக வேகமாகவும் கொடூரமாகவும் பரவியது.
ஹொரண நகர சபையின் தீயணைப்பு வாகனங்கள் இந்த இடத்திற்கு வர தாமதமானதாக கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
வந்த தண்ணீர் லாரிகளுக்கும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டதால் சுற்றியுள்ள கிணறுகள் மற்றும் நீர் ஆதாரங்களை தேட வேண்டியிருந்தது. பகுதி மக்கள், பொலிசார், விசேட அதிரடிப்படை மற்றும் தீயணைப்பு பிரிவினர் இணைந்து கடுமையாக முயன்று இரவு 7.30 மணியளவில் தீயை கட்டுப்படுத்தினர்.

குறிப்பாக குழாய் தண்ணீருக்கு பதில் கிணற்று நீரை மட்டுமே எடுக்கும் இந்த கிராமப்புற பகுதியில் திடீர் தீயை அணைப்பது கடினமாக இருந்தது.

மீட்பு பணியில் ஈடுபட்ட பகுதி மக்கள் கூறியதன்படி, நடக்க கூட முடியாத அப்பாவி முதியவர்கள் சிலர் தீயில் சிக்கி பெரும் வேதனையுடன் கதறியபடி உயிரிழந்தனர். ஒரு பெண்மணி தீயிலிருந்து காப்பாற்றி வெளியே கொண்டு வந்த பிறகும், தன் தங்க சங்கிலி வீட்டிற்குள் விழுந்து விட்டதாக கூறி மீண்டும் தீ எரியும் வீட்டிற்கு ஓடியதால் அவரும் தீக்கு பலியானார்.

இன்னும் அதிர்சியான விடயம் என்னவென்றால், மனநல பாதிப்புள்ள சிலர் தப்பி ஓடிவிடுவார்கள் என்ற பயத்தில் அவர்களின் கால்களுக்கு சங்கிலி போட்டு கட்டிலில் கட்டி வைத்திருந்தனர்.
சங்கிலியால் கட்டப்பட்டிருந்ததால் தீ பரவும் நேரத்தில் அவர்களால் தப்பிக்க எந்த வாய்பும் இல்லாமல், தீயில் சிக்கி கருகிய நிலையில் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.
விபத்து நடக்கும் போது இந்த நிலையத்தின் உரிமையாளர் அந்த இடத்தில் இருக்கவில்லை.

வேலை செய்ததாக சொல்லப்படும் 3 ஊழியர்களும் தீயுடன் அந்த இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டனர். தீ ஏற்படும் நேரத்தில் நிலையத்தின் உரிமையாளர் அதற்கு முந்தைய நாள் அங்கு இறந்த வேறொரு முதியவரின் பிரேத பரிசோதனைக்கு சென்றிருந்ததாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

#இது இலவசமாக நடத்தப்பட்ட தொண்டு நிறுவனம் அல்ல.

ஒரு முதியவரை சேர்கும்போது ரூ. 75,000 முதல் கட்டணமாகவும், ரூ. 35,000 மாத கட்டணமாகவும் வசூலிக்கப்பட்டது. இவ்வளவு பெரிய தொகையும் வெளிநாட்டு நிதியுதவியும் பெற்று நடத்தியும், மனிதர்களை சங்கிலியால் கட்டி வைக்கும் அளவிற்கு அங்கு உரிய உள்கட்டமைப்போ பாதுகாப்பு திட்டமோ செயல்படவில்லை.

இன்னும் பாரதூரமான விடயம் என்னவென்றால் இந்த நிலையம் எந்த அரச நிறுவனத்திலும் பதிவு செய்யப்படவில்லை.
தேசிய முதியோர் செயலகம், மேல் மாகாண சமூக சேவைகள் திணைக்களம் அல்லது மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய செயலகம் எந்த நிறுவனத்திடமிருந்தும் இவர்கள் அதிகாரப்பூர்வ அனுமதி பெறவில்லை.

சமூக வலைத்தளங்கள் மூலம் பெரும் விளம்பரம் செய்து இந்த நிலையம் நடத்தப்பட்டாலும், அரச அதிகாரிகளின் எந்தவித கண்காணிப்புக்கும் இது உட்படவில்லை என்பது அதிகாரிகளின் பாரதூரமான கடமை தவறலை காட்டுகிறது.

தன் நிலையம் எரிந்து கருகி அப்பாவி முதியவர்கள் உயிரிழக்கும் துயரமான தருணத்தில், நிலைய உரிமையாளர் பின்னர் வந்து செய்தது நம்ப முடியாதது. அவர் அந்த சம்பவத்தை வீடியோ எடுத்து தன் முகநூல் கணக்கில் பதிவிட்டுள்ளார். அதை ஒரு மில்லியனுக்கும் மேற்பட்டோர் பார்துள்ளனர்.

இது சமூக வலைத்தளங்கள் மூலம் மக்களின் அனுதாபத்தை பெற்று தீயை காட்டி மேலும் பணம் சம்பாதிக்கும் நோக்கில் செய்யப்பட்ட மனிதாபிமானமற்ற செயல் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தற்போது சம்பந்தப்பட்ட நிலைய உரிமையாளர் பொலிசாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த "செனெஹசே கெதர" தங்கும் நிலையம் பற்றி விசாரணை செய்யும்போது அதன் சட்டவிரோத தன்மை தெளிவாகிறது. தேசிய முதியோர் செயலக இயக்குனர் சதுர மிஹிதும் மற்றும் உதவி இயக்குனர் கூற்றுப்படி, இந்த நிலையம் தேசிய முதியோர் செயலகம், மாற்றுத்திறனாளிகளுக்கான செயலகம் அல்லது மாகாண சமூக சேவைகள் திணைக்களம் எதிலும் பதிவு செய்யப்படவில்லை. 5 பேருக்கு மேல் தங்க வைத்தால் 2000ம் ஆண்டு 09ம் இலக்க சட்டம் மற்றும் 2011ம் ஆண்டு 05ம் இலக்க திருத்த சட்டப்படி அதை பதிவு செய்வது கட்டாயம்.

மில்லனிய பிரதேச செயலகம் பல முறை இந்த நிலையத்தை பதிவு செய்யுமாறு நிலைய பொறுப்பாளர்களுக்கு அறிவுறுத்தியும், அவர்கள் அதை முற்றிலும் புறக்கணித்து செயல்பட்டனர். பகுதி மக்களும் இங்கு நடக்கும் மனிதாபிமானமற்ற செயல்கள் பற்றி அதிகாரிகளிடம் முறையிட்டும், அதற்கு உரிய பதில் கிடைக்கவில்லை என்று கிராம மக்கள் கூறுகின்றனர்.

இந்த நிலையத்தின் உரிமையாளர் 38 வயதான இசுரு அனுஷ்க பெரேரா என்ற 'லொகு அய்யா', இதை வெறும் பணம் சம்பாதிக்கும் மோசடியாக மாற்றியிருந்தாக சிலர் கூறியுள்ளனர். வசிப்பவரை சேர்கும்போது ரூ. 75,000 முதல் பதிவு கட்டணமும், மாதம் ரூ. 35,000ம் பொறுப்பாளர்களிடமிருந்து வாங்கினார்.

இதுதவிர மருத்துவ சிகிச்சைக்கு என்று கூறி அவ்வப்போது ரூ. 20,000-30,000 வரை பெரும் தொகையும் வாங்கியுள்ளார். சமூக வலைத்தளம் மற்றும் யூடியூப் சேனல்கள் மூலம் பல வீடியோக்களை வெளியிட்டு, பிரபல கலைஞர்களை கூட அழைத்து வந்து இந்த இடத்தை மிகவும் பாதுகாப்பான இடமாக உலகிற்கு காட்ட அவர் முயன்றார். அதன் மூலம் உள்நாடு மற்றும் வெளிநாட்டு தானவான்களிடமிருந்தும் பல்வேறு அமைப்புகளிடமிருந்தும் லட்சக்கணக்கில் நிதியுதவி பெற்றுள்ளார்.

அவருக்கு சொந்தமான இதேபோன்ற அனுமதியற்ற நிலையங்கள் இன்னும் 3-4 களுத்துறை தெற்கு, கொலம்பவத்த, சேருபிட்ட, கல்பாத பகுதிகளில் உள்ளதாகவும் பொலிசார் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த துயரச் சம்பவத்தில் 10 உடல்கள் சம்பவ இடத்திலேயே கண்டெடுக்கப்பட்டன. அதில் 9 பெண்கள் உடலும், 1 ஆண் உடலும், தீயில் சிக்கிய பூனையின் உடலும் இருந்தன. கடுமையான தீக்காயங்களுடன் ஹொரண மற்றும் கல்பாத மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட 8 பேரில் 2 பேர் பின்னர் இறந்தனர். இதன்படி மொத்த இறப்பு எண்ணிக்கை 12 ஆக உயர்ந்தது.

மேலும் 6 பேர் தொடர்ந்து ஹொரண ஆதார மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காப்பாற்றப்பட்ட 51 பேரை முதலில் படகொட ஆரம்ப பாடசாலையில் தங்க வைத்து, பின்னர் இலங்கை இராணுவம் மற்றும் அங்குருவாடதொட்ட பொலிஸ் தலையீட்டில் அவர்கள் கல்பாத பகுதியில் உள்ள வேறொரு நிறுவனத்திற்கும் கதிர்காமம் அரச முதியோர் தங்கும் நிலையத்திற்கும் பாதுகாப்பாக அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தன் உறவினர்களுக்கு என்ன நடந்தது என்று தேடி நாடு முழுவதிலிருந்தும் மக்கள் நிலையத்திற்கு வந்து கொண்டிருக்கின்றனர். மொரகஹேன மற்றும் அம்பலன்கொட பகுதிகளிலிருந்து வந்த உறவினர்கள், தாம் பெரும் தொகை கொடுத்து தங்கள் பிள்ளைகள் மற்றும் உறவினர்களை இங்கு தங்க வைத்ததாக கூறினர்.

சம்பவம் தொடர்பாக அங்குருவாடத்தொட்ட பொலிசார் விரிவான விசாரணையை ஆரம்பித்துள்ளனர். நிலைய உரிமையாளர் இசுருஅனுஷ்க பெரேரா இலங்கை தண்டனை சட்ட கோவை 298வது பிரிவின்படி அலட்சியமாக செயல்பட்டு மரணம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹொரண நீதவான் லக்மினிவிதானகமகே சம்பவ இடத்தில் நீதவான் விசாரணை நடத்தி, சந்தேக நபரை ஜூன் 11ம் தேதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

களுத்துறை பிரிவு பொறுப்பு பிரதி பொலிஸ் மா அதிபர் பத்மினி ரணவக்க மற்றும் பாணதுறை பிரிவு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஷாந்த சில்வா ஆகியோரின் ஆலோசனையின் பேரில் விசாரணைகள் நடக்கின்றன. ஹொரண மாவட்ட பொது மருத்துவமனையின் விசேட தடயவியல் மருத்துவ அதிகாரி சந்தகன்வடுகே மரண பரிசோதனை செய்கிறார்.

இந்த தீ விபத்திற்க்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இருப்பினும் நீர் மோட்டாரின் மல்டி பிளக்கில் ஏற்பட்ட மின் கசிவு அல்லது கொசு வலையில் தீ பிடித்து பின் எரிவாயு சிலிண்டர் வெடித்ததால் இது நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் அரச பகுப்பாய்வாளர்கள் மற்றும் பாணதுறை பிரிவு குற்றச் சம்பவ இட பரிசோதனை அதிகாரிகள் மேலதிக விசாரணை செய்து வருகின்றனர்.

Want your business to be the top-listed Media Company in Ampara?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Website

https://www.importmirror.com/, https://www.importmirror.com/

Address


Addalaichenai
Ampara
32350.