Janith vivek
•ரூ.20,000 சம்பள உயர்வு கோரி அரச ஊழியர்கள் போராட்டம்!*
இருபதாயிரம் ரூபா சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டுமெனக் கோரி அரசாங்க ஊழியர்கள் தொழிற் சங்க போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் வாரத்தில் குறித்த தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்படும் என அரசாங்க மற்றும் அரசாங்கத்திற்கு சொந்தமான தனியார் நிறுவனங்களின் தொழிற்சங்க ஒன்றிய அழைப்பாளர் ரவி குமுதேஷ்
தெரிவித்தார்.
இந்நிலையில், மாதாந்த சம்பளம் 20,000 ரூபாவி னால் உயர்த்தப்படவேண்டும் என்பதே போராட்டத் தின் பிரதான கோரிக்கை என அவர் கூறினார்.
மேலும், தொழிற்சங்கங்களை ஒடுக்குதல், பயங்கர வாத எதிர்ப்பு சட்டம், ஊடக ஒழுக்கவிதிகள் சட்டம் போன்றவற்றை எதிர்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கமைய இந்த விடயங்கள் தொடர்பில் அதிகாரிகளை தெளிவுபடுத்திய போதிலும் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என அவர் கூறினார்.
Song ❤️💫🥰
🤣
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Sopore