Nature Relaxation

Nature Relaxation

Share

Photos from Nature Relaxation's post 28/06/2024

இளைஞர்களின் எழுச்சி நாயகனை இழந்து விட்டோம்.

😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

இயற்கையை நேசி பொதுநல அறக்கட்டளையின் செயல்பாடுகள் குறித்தும் இளைய தலைமுறையினர் இயற்கை மீதும் சமூகத்தின் மீதும் அக்கறை கொண்டு பொள்ளாச்சி பகுதியில் நிறைய தன்னார்வ அமைப்புகள் வந்திருப்பது பெருமைக்குரிய விஷயம் என்று பலமுறை எங்களிடம் பேசியவர் ஐயா பொள்ளாசி தொழில் வர்த்தக சபையின் தலைவர் திரு ஜி.டி.கோபாலகிருஷ்ணன் அவர்கள்.

ஐயா அவர்கள் பல்வேறு பொறுப்புகளில் இருந்தாலும் கூட எளிமையின் தோற்றமாக இன்றளவும் இருந்து வந்தவர்.

சமூக ஆர்வலராக வாழ்நாள் முழுவதும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் ஐயா அவர்கள்.

இயற்கையை நேசி பொதுநல அறக்கட்டளையின் செயல் திட்டங்களையும் வரக்கூடிய காலங்களில் அறக்கட்டளையின் செயல்பாடுகள் குறித்தும் அவரோடு கலந்து கொண்டோம். பெருத்த நிதி இல்லாத போதும் இந்த அறக்கட்டளை கடந்து செல்லும் பாதைகளுக்கு வித்திட்டவர் ஐயா அவர்கள். எங்கள் நாயகனை இழந்து விட்டோம் என்பதை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.

மரக்கன்றுகள் நடுவது அல்ல நட்டு வளர்ப்பது என்று நாங்கள் தெரிவித்த போது நானே முன்நின்று அதை துவக்கி வைக்கிறேன் என்று சொன்னவர் ஐயா அவர்கள். இன்று நம்மோடு அவர் இல்லை என்பதை ஏற்க மறுக்கிறது எங்கள் மனது.

இனி எங்கள் எண்ணங்களை யாரிடம் சொல்லி விவாதிப்பது. வேதனை அளிக்கிறது.

அவருக்கு ஆயிரம் பணிகள் இருப்பினும் நாங்கள் சந்திக்க வருகிறோம் என்று தகவல் தெரிவிக்கப்பட்டால் உடனடியாக எங்களுக்கான நேரத்தை ஒதுக்கி உடனே சந்திக்கக்கூடிய ஒரு நல்ல மனிதனை இழந்தோம் என்பதை ஏற்க மறுக்கிறது மனது. இளைஞர்களின் எழுச்சி நாயகனை இழந்து விட்டோம். பொள்ளாசி தொழில் வர்த்தக சபையின் தலைவர் திரு ஜி.டி.கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்களின் மறைவு என்பது ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு. இயற்கையை நேசி பொதுநல அறக்கட்டளை கனத்த இதயத்தோடு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.

26/06/2024

இளைஞர்களின் வாழ்க்கையை மாற்றிவிடும் போதை
இன்று சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம்

Photos from Nature Relaxation's post 26/06/2024

இளைஞர்களின் வாழ்க்கையை மாற்றிவிடும் போதை
இன்று சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம்

# # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # #

சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, இன்று பொள்ளாச்சி காவல் துணை கண்காணிப்பாளர் திரு.ஜெயச்சந்திரன் தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

பொள்ளாச்சி சரக காவல் துணை கண்காணிப்பாளர் திரு.ஜெயச்சந்திரன் பேசியாவது ; இன்றைய சூழலில் இளைஞர்கள் மட்டுமல்லாமல், பள்ளி மாணவர்களும் போதைப் பொருளுக்கு அடிமையாவது வருத்தமான விஷயம். இளைஞர்களின் வாழ்க்கையை மாற்றிவிடும் போதைப்பொருள். இம்மாதிரியான மாணவர்களுக்கு சரியான விழிப்புணர்வு வழங்கி அப்பழக்கத்தில் இருந்து அவர்களை விடுவிக்க வேண்டும்.

போதைப்பொருள் தடுப்பு திட்டங்களில் சமூக ஈடுபாடு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். போதைப்பொருள் பயன்பாட்டுத் தீங்குகளைப் பற்றிய புரிதலை ஏற்படுத்த தன்னார்வ அமைப்புகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் விழிப்புணர்வு பிரசாரம் செய்ய முன்வர வேண்டும். இதன் மூலம் போதைப் பொருள் பழக்கத்தை பரவ விடாமல் ஓரளவு கட்டுக்குள் கொண்டு வர முடியும் என்று கூறினார்.

மேலும், இதுகுறித்து இயற்கையை நேசி பொதுநல அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் மா.வெற்றிவேல் பேசுகையில், இயற்கையை நேசி பொதுநல அறக்கட்டளையானது இன்றுமுதல் காவல்துறையோடு இணைந்து போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாதந்தோறும் நடத்தலாம் என முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இத்திட்டத்திற்கு அறக்கட்டளையின் திட்ட ஆலோசகர் மற்றும் போக்குவரத்து விழிப்புணர்வு அமைப்பாளர் திரு.கமலக்கண்ணன் அவர்களை நியமனம் செய்யப்படுகிறது. இதுவரை அவர் வகித்த திட்ட ஆலோசகர் மற்றும் போக்குவரத்து விழிப்புணர்வு அமைப்பாளர் என்ற பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு. இன்றுமுதல் போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் போக்குவரத்து விழிப்புணர்வு அமைப்பாளராக செயல்படுவார் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறினார்.

இதில், காவல் உதவி ஆய்வாளர்கள் திரு.தெய்வேந்திரன், திரு.ராமச்சந்திரன், திரு.ரியாஸ், முன்னாள் மாவட்ட முதன்மை டிராபிக் வார்டன் திரு.கமலக்கண்ணன், சேவாலயம் அறக்கட்டளை தலைவர் திரு.மயில்சாமி, முதல் துணை நிலை ஆளுநர் திரு.அரிமா ராஜசேகர், பொள்ளாச்சி ரோட்டரி சங்கம் திரு.கிரீஸன், இயற்கையை நேசி பொதுநல அறக்கட்டளையின் அறங்காவலர் திரு.முருகானந்தம், மற்றும் டிராபிக் வார்டன்கள் திரு.பாலமுரளி கிருஷ்ணா, திரு.செந்தில்குமார், திரு.அருள்மொழி ஆகியோர் கலந்து கொண்டு, இளைய சமுதாயம் போதை பொருட்களுக்கு அடிமையாகி எதிர்காலத்தை தொலைக்காமல் தடுப்பதற்காக பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படுவது குறித்து பேசினார்கள்.

Photos from Nature Relaxation's post 06/06/2024

அறக்கட்டளையின் நீண்டநாள் கனவு நிறைவேறியது..
அறக்கட்டளையின் பல்வேறு சமூக சேவைக்காக டிராக்டர் வாங்கப்பட்டது.

# # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # #

இயற்கையை நேசி பொதுநல அறக்கட்டளையின் பல்வேறு சமூக சேவைக்காக அறக்கட்டளையின் சார்பில் மஹேந்திரா டிராக்டர் வாங்கப்பட்டது.

இயற்கையை நேசி பொதுநல அறக்கட்டளையின் பல்வேறு சமூக சேவைக்காக வாங்கப்பட்ட வாகனத்தின் சாவியை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.சுகுமார் அவர்கள் வழங்க, அறக்கட்டளையின் அறங்காவலர் முருகானந்தம் சாவியை பெற்றுக்கொண்டார்.

இதில், பொள்ளாச்சி தமிழிசை சங்கத்தின் துணைச் செயலாளரும் இயற்கை ஆர்வலருமான அண்ணன் திரு.முரளிகிருஷ்ண காளிங்கராயர், திட்ட ஆலோசகர் மற்றும் சாலைப் போக்குவரத்து விழிப்புணர்வு அமைப்பாளர் திரு.கமலக்கண்ணன், மகளிர் நலன் மற்றும் விழிப்புணர்வு அமைப்பாளர் திருமதி கவிதா, பசுமை நலன் மற்றும் விழிப்புணர்வு அமைப்பாளர் திரு.ராஜேஷ்குமார், பிளாஸ்டிக் களைதல் மற்றும் விழிப்புணர்வு அமைப்பாளர் திரு.தினேஷ்குமார், பழங்குடியினர் நலன் மற்றும் விழிப்புணர்வு அமைப்பாளர் (கேரளா) திருமதி. முத்தாள், இளைஞர் நலன் மற்றும் விழிப்புணர்வு அமைப்பாளர் திரு. சீனிவாசபிரபு மற்றும் உறுப்பினர் முத்து ஆகியோர் கலந்துகொண்டனர்.

இயற்கையை நேசி பொதுநல அறக்கட்டளை பல்வேறு சமூக சேவைகளை செயல்படுத்தி வருகிறது. இருப்பினும் நீண்டநாள் கனவு இன்று நிறைவேறியது. 2018 ஆம் ஆண்டு அறக்கட்டளை துவங்கப்பட்ட நாள்முதல் மரங்களை நடுவதல்ல, நட்டு தண்ணீர் ஊற்றி வளர்ப்பது என்பதை கொள்கையாக கொண்டிருந்தது.

அதன் காரணமாக அறக்கட்டளை சார்பில் இதுவரை ஒரு மரக்கன்றைக்கூட நடாமல் இருந்தோம். மரங்களை நடுவது பெரிதல்ல தண்ணீர் ஊற்றி வளர்க்க வேண்டும். தண்ணீர் கொண்டு செல்ல எங்களிடம் வாகனம் இல்லாததால் மரக்கன்றுகளை நடாமல் இருந்தோம். ஆனால், பறவைகளின் நலன் கருதி பழக்கன்றுகளையும் மரக்கன்றுகளையும் நட்டு வளர்ப்பதென முடிவு செய்யப்பட்டது.

தற்போது, அறக்கட்டளையின் உறுப்பினர்கள் பங்களிப்போடு இந்த மஹேந்திரா டிராக்டரை அறக்கட்டளையின் சேவைகளுக்காக வாங்கியுள்ளோம் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றோம்.

அறக்கட்டளையின் சேவைகளுக்காக இந்த வாகனம் வாங்க பெரிதும் உதவிய பிளாஸ்டிக் களைதல் மற்றும் விழிப்புணர்வு அமைப்பாளர் திரு.தினேஷ்குமார், மகளிர் நலன் மற்றும் விழிப்புணர்வு அமைப்பாளர் திருமதி கவிதா, பறவைகள் நலன் மற்றும் விழிப்புணர்வு அமைப்பாளர் திரு.முருகானந்தம் ஆகியோருக்கு அறக்கட்டளை பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறது.

08/05/2024

பறவைகளுக்கும் கொஞ்சம் தண்ணீர் வைப்போம்

゚viral

Want your business to be the top-listed Photography Service in Pollachi?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Website

Address


Pollachi
642001