Krishnancoil Junction
22/04/2024
இன்று கிருஷ்ணன்கோயில் தேரோட்டம்.... அனைவரும் வருக... பால கிருஷ்ணன் அருள் பெறுக...
29/11/2021
28.11.2021
நேற்று காலை 10: 30 அளவில் ஒரு குடும்பஸ்தர் ஹோண்டா ஆக்டிவாவில் தனது குடும்பத்தினருடன் வந்து அரசாங்கத்தின் இந்த நவீன பொறியில் (Ozhugunasery Junction) அவரின் கால் மாட்டி விட்டது. பின்னர் அங்கு இருந்த பொது மக்கள் அவரை மீட்டு எடுத்தனர் . அதற்கு பிறகு அங்கு இருந்த காவல் அதிகாரிகள் அதனை சுற்றி 4 கற்களை வைத்து சாதனை படைத்தனர். அதனை தொட்டு ஒரு 100 meter அளவில் உள்ள ஒழுகினசேரி சாஸ்தா கோவில் வாசலில் ஆன்லைன் செல்லான் என்னும் நூதன முறை கொள்ளையில் ஈடுபட்டு கொண்டு இருக்கும் அற்புத காட்சி.
கேள்வி 1. சாலையே இல்லை traffic police எதுக்கு?
கேள்வி 2. பொது மக்களிடம் பல்வேறு வகையான tax களை வாங்கும் அரசாங்கம் மக்களுக்கு தேவையான ரோட்டை ஏன் போடாமல் இருக்கிறது?
கேள்வி 3. இந்த ரோட்டில் செல்லும் எத்தனை பேருக்கு அஸ்தமாவும் முதுகு வலியும் ஏற்பட்டிருக்கும்?எனது நண்பர் ஒருவரின் மனைவிக்கு இந்த ரோட்டில் வந்து கரு கலைப்பே ஆகிவிட்டது. இதற்கு எல்லாம் யாரு பொறுப்பு ஏற்று கொள்வது?
மேலும் காவல் துறை இது போன்ற கட்டணத்தை மட்டும் வசூலிக்காமல் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலையை ஒழுங்காக சரி செய்த பின் இந்த கட்டணங்களை வசூலிப்பதில் தவறில்லை.
எந்த ஆட்சி வந்தாலும் அதிகாரிகள் மாறுவது இல்லை. ஆதலால் அதிகாரிகள் தான் ஒழுங்காக வேலை செய்வது இல்லை என்பது வெட்ட வெளிச்சம் ஆகிறது. ஒவ்வொரு இந்திய குடிமகனும் தன்னுடைய அடிப்படை உரிமையை விட்டு கொடுப்பதுனால் தான் இது போன்ற தரமற்ற சாலையும் சாலையினால் ஏற்படும் விபத்துகளும் அதிகரித்து கொண்டே வருகிறது. மக்களே விழித்து இருங்கள் இனியாவது ஒரு போக்குவரத்து காவல் துறை அதிகாரி உங்களை நிறுத்தி அபராதம் விதித்தால் எதிர்த்து கேள்வி கேளுங்கள். ஒருவர் கேள்வி கேட்காமல் ஊரே கேட்டால் எல்லாம் சரி ஆக நடக்கும். நாஞ்சில் நாட்டு சாலையை மீட்டு எடுப்போம்.
#நாகர்கோவில்
14/10/2021
அன்பான உறவுகளுக்கு🚩...
அனைவருக்கும் இனிய சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள்🚩...
அனைவருக்கும் இனிய ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்🚩...
இல்லறத்தில் இன்பம் பொங்கட்டும். அன்போடு அனைவரையும் அரவனைத்து வாழ்ந்திடுவோம்🚩...
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Nagercoil
629001