Perumbakkam E Rajasekar
28/06/2026
இன்று செய்யூர் தொகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற முகாமில், மருத்துவர்களின் வழிகாட்டுதலின்படி குழந்தைகளுக்கு எனது கரங்களால் போலியோ சொட்டு மருந்து வழங்கினேன்.
உங்கள் வீடுகளில் உள்ள 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கும் இன்று தவறாமல் போலியோ சொட்டு மருந்து செலுத்துங்கள். குழந்தைகளின் பாதுகாப்பான எதிர்காலத்தை உறுதி செய்வோம்!
என்றும் மக்கள் பணியில்,
பெரும்பாக்கம் எ. ராஜசேகர்
செய்யூர் சட்டமன்ற உறுப்பினர்,
கழக அம்மா பேரவை துணை செயலாளர்,
பரங்கிமலை தெற்கு ஒன்றிய கழக செயலாளர்.
AIADMK
AIADMK IT WING
Edappadi K. Palaniswami
26/06/2026
இனிய மொஹரம் நல்வாழ்த்துகள்! 🌙✨
அனைவரது வாழ்விலும் துன்பங்கள் நீங்கி இன்பங்கள் மிளிரட்டும்! வேற்றுமை நீங்கி, ஒற்றுமை ஓங்கட்டும்! ஈகையும், நட்பும் பெருகட்டும் என மனதார வாழ்த்துகிறோம். 🤝
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக, கழகப் பொதுச்செயலாளர் மாண்புமிகு எடப்பாடி கே. பழனிசாமி அவர்களின் நல்வாழ்த்துகளுடன்...
பெரும்பாக்கம் திரு ஏ. ராஜசேகர், MLA
(செய்யூர் சட்டமன்ற உறுப்பினர், கழக அம்மா பேரவை துணைச் செயலாளர், பரங்கிமலை தெற்கு ஒன்றிய கழக செயலாளர்)
"கழகமே கோயில்! அம்மாவே தெய்வம்!!" 💚
AIADMK
AIADMK IT WING
Edappadi K. Palaniswami
இன்று சுனாம்பேடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேரடி ஆய்வு மேற்கொண்டேன்.
இந்த ஆய்வின் போது, மருத்துவமனைக்குத் தேவையான அடிப்படை உபகரணங்கள் பற்றாக்குறையாக இருப்பதையும், தற்போது ஒரே ஒரு மருத்துவர் மட்டுமே பணியில் இருப்பதையும் நேரில் பார்வையிட்டு கேட்டறிந்தேன்.
மேலும், பொதுமக்களின் தேவைகள் குறித்த கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டேன். மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, மருத்துவமனைக்குத் தேவையான உபகரணங்களை உடனடியாக வழங்கவும், காலியாக உள்ள மருத்துவர் பணியிடங்களை விரைந்து நிரப்பவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு துரித நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளேன்.
நமது செய்யூர் தொகுதி மக்களின் சுகாதார தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்ய தொடர்ந்து பாடுபடுவேன்.
செழிக்கட்டும் செய்யூர்.
என்றும் மக்கள் பணியில்,
பெரும்பாக்கம் எ. ராஜசேகர்
செய்யூர் சட்டமன்ற உறுப்பினர்
கழக அம்மா பேரவை துணை செயலாளர
24/06/2026
மக்களின் நீண்டநாள் கோரிக்கைகள் நிறைவேறிய அழகிய தருணம்!
செய்யூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று (24.06.2026) நடைபெற்ற 1435-ஆம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நிகழ்ச்சியில் நான் கலந்துகொண்டு, பொதுமக்களுக்கு ரூ. 2.50 கோடி மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினேன்.
மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் ஜமாபந்தி அலுவலர் தலைமையில் நடைபெற்ற இந்தச் சிறப்பான நிகழ்வில், மொத்தம் 133 பயனாளிகளின் நீண்டநாள் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு, அவர்களுக்கான உதவிகள் நேரில் வழங்கப்பட்டன.
வழங்கப்பட்ட நலத்திட்ட உதவிகளின் விவரம்:
இலவச வீட்டுமனைப் பட்டா: 57 பயனாளிகளுக்கு.
உழவர் பாதுகாப்புத் திட்டம்: விபத்து நிதி, இயற்கை மரண உதவி மற்றும் திருமண உதவித்தொகைகள் என மொத்தம் 50 விவசாயக் குடும்பங்களுக்கு.
புதிய மின்னணு குடும்ப அட்டை: 20 பயனாளிகளுக்கு.
பட்டா மாற்றம்: 5 பயனாளிகளுக்கு.
ஆதரவற்ற விதவைச் சான்று: 1 பயனாளிக்கு.
மக்களின் அத்தியாவசியத் தேவைகளான வீட்டுமனைப் பட்டாக்கள், விவசாயிகளுக்கான நல நிதிகள் மற்றும் குடும்ப அட்டைகளை தாமதமின்றி ஒரே இடத்தில் பயனாளிகளுக்கு நேரில் வழங்கியது எனக்குப் பெரும் மனநிறைவை அளித்தது. எளிய மக்களின் கோரிக்கைகள் அனைத்தின் மீதும் உரிய கவனம் செலுத்தி நிறைவேற்றப்பட்ட இந்த நிகழ்வு, செய்யூர் தொகுதி மக்களுக்கும் எனக்கும் ஒரு மிக அழகான மற்றும் நெகிழ்ச்சியான தருணமாக அமைந்தது!
செழிக்கட்டும் செய்யூர்.
என்றும் மக்கள் பணியில்,
பெரும்பாக்கம் எ. ராஜசேகர்
செய்யூர் சட்டமன்ற உறுப்பினர்
கழக அம்மா பேரவை துணை செயலாளர்
பரங்கிமலை தெற்கு ஒன்றிய கழக செயலாளர்
23/06/2026
செய்யூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கொடூர் ஊராட்சியில், சிட்கோ (TANSIDCO - தமிழ்நாடு சிறுதொழில் மேம்பாட்டுக் கழகம்) மூலமாக தொழிற்சாலைகள் அமைப்பதற்காக நிலங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால், இதுவரை அங்கு எந்தவொரு சிறுதொழில் நிறுவனங்களும் கொண்டுவரப்படாமல், அந்த நிலம் எவ்வித வளர்ச்சியுமின்றி இருக்கிறது.
சிட்கோ (SIDCO) என்பது குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களை (MSME) ஊக்கப்படுத்தி, சிறு தொழிற்பேட்டைகளை (Industrial Estates) உருவாக்கி உள்ளூர் மக்களுக்கும் இளைஞர்களுக்கும் நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை வழங்கும் மிக முக்கியமான தளமாகும்.
இன்று சிட்கோ இயக்குநர் திரு. ஏ. கார்த்திக், இ.ஆ.ப. (இந்திய ஆட்சிப் பணி) அவர்களை நேரில் சந்தித்து இதுகுறித்து வலியுறுத்தினேன். கொடூர் ஊராட்சியில் ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் உடனடியாக சிறுதொழில் நிறுவனங்களைக் கொண்டு வந்து, நமது தொகுதி இளைஞர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த விரைந்து ஆவன செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளேன்.
நமது செய்யூர் தொகுதி மக்களின் உரிமைகளுக்காகவும், வளர்ச்சிக்காகவும் எனது பணி தொடர்ந்து நடக்கும்!
செழிக்கட்டும் செய்யூர்.
என்றும் மக்கள் பணியில்,
பெரும்பாக்கம் எ. ராஜசேகர்
செய்யூர் சட்டமன்ற உறுப்பினர்
கழக அம்மா பேரவை துணை செயலாளர்
பரங்கிமலை தெற்கு ஒன்றிய கழக செயலாளர்
AIADMK
AIADMK IT WING
Edappadi K. Palaniswami
EPS Enum Naan
22/06/2026
நேற்றைய தினம் (21.06.2026), நமது செய்யூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட லத்தூர் மேற்கு ஒன்றியத்தில் அமைந்திருக்கும் இரண்டு ஊராட்சிகளில் நடைபெற்ற மிகச் சிறப்பான ஆன்மீக விழாக்களில் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தேன்.
மடையம்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கன்னியம்மன் ஆலயத்தின் 30-ஆம் ஆண்டு கூழ் அமுது வார்த்தல் திருவிழாவில் கலந்து கொண்டு, பொதுமக்களுடன் இணைந்து சாமி தரிசனம் செய்தேன். அதனைத் தொடர்ந்து, அம்மனூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கன்னியம்மன் ஆலயத்தில் வெகு விமரிசையாக நடைபெற்ற அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழாவில் பங்கேற்று, அம்மனின் திருவருளைப் பெற்றேன்.
இந்த இரு நிகழ்வுகளிலும் பங்கேற்க எனக்கு அன்பான அழைப்பு விடுத்துச் சிறப்பித்த லத்தூர் மேற்கு ஒன்றியத்தைச் சேர்ந்த மடையம்பாக்கம் மற்றும் அம்மனூர் ஊராட்சி பொதுமக்கள், விழா குழுவினர் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.
செழிக்கட்டும் செய்யூர்.
என்றும் மக்கள் பணியில்,
பெரும்பாக்கம் எ. ராஜசேகர்
செய்யூர் சட்டமன்ற உறுப்பினர்
கழக அம்மா பேரவை துணை செயலாளர்
பரங்கிமலை தெற்கு ஒன்றிய கழக செயலாளர்
21/06/2026
சித்தாமூர் மேற்கு ஒன்றியம், அம்மணம்பாக்கம் ஊராட்சியில் மின்கசிவால் வீடுகளை இழந்த 6 குடும்பங்களுக்கு, எனது சொந்த நிதி மற்றும் லயன்ஸ் கிளப் உதவியோடு புதிய வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டு இன்று திறக்கப்பட்டன.
என் செய்யூர் தொகுதி மக்களுக்கு எந்தவொரு இக்கட்டான சூழ்நிலையிலும் நான் அரணாக இருப்பேன். இது வார்த்தை அல்ல, என் வாழ்க்கை!
செழிக்கட்டும் செய்யூர்.
என்றும் மக்கள் பணியில்,
பெரும்பாக்கம் எ. ராஜசேகர்
செய்யூர் சட்டமன்ற உறுப்பினர்
கழக அம்மா பேரவை துணை செயலாளர்
பரங்கிமலை தெற்கு ஒன்றிய கழக செயலாளர்
AIADMK
AIADMK IT WING
Edappadi K. Palaniswami
EPS Enum Naan
20/06/2026
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட கழகத்தின் சார்பில், கழகப் பொதுச்செயலாளர், தமிழ்நாடு முன்னாள் முதல்வர், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர், புரட்சித் தமிழர் மாண்புமிகு எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க;
கழக செய்தித் தொடர்பாளர் பேராசிரியர் ச. கல்யாணசுந்தரம் அவர்கள் தலைமையிலும்;
🔹 திரு. திருக்கழுக்குன்றம் ஆறுமுகம் (மாவட்டச் செயலாளர்)
🔹 திரு. தனபால் (நாடாளுமன்ற உறுப்பினர்)
🔹 திரு. பெரும்பாக்கம் E. ராஜசேகர் (செய்யூர் சட்டமன்ற உறுப்பினர்)
ஆகியோரின் முன்னிலையில்,
தமிழ்நாட்டில் நிலவிவரும் தொடர் மின்வெட்டு மற்றும் பாலியல் வன்கொடுமைகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கத் தவறியதையும், தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி விவசாயிகளின் கடன் தள்ளுபடி வாக்குறுதியை நிறைவேற்றாத ஆளும் விடியா த.வெ.க அரசை கண்டித்தும் இந்த மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது.
கழகத் தொண்டர்கள், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் பெருந்திரளாகக் கலந்துகொண்டு, மக்கள் விரோத அரசுக்கு எதிராகத் தங்களது கண்டனத்தை வலுவாகப் பதிவு செய்தனர்!
செழிக்கட்டும் செய்யூர்.
என்றும் மக்கள் பணியில்,
பெரும்பாக்கம் எ. ராஜசேகர்
செய்யூர் சட்டமன்ற உறுப்பினர்
கழக அம்மா பேரவை துணை செயலாளர்
பரங்கிமலை தெற்கு ஒன்றிய கழக செயலாளர்
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Kanchipuram