Kavithai RAJA RHB
ஒரு ஏழை வீட்டு பெண்ணை பணக்கார வாலிபன் தொரத்தி தொரத்தி காதலிக்கிறான். காதல் என்பது இது கிடையாது. உன் மேல் எனக்கு முதலில் நம்பிக்கை வர வேண்டும் பிறகுதான் காதல் வரும். என்றாள் அவள். ஓ உனக்கு என் மேல் நம்பிக்கை வரவேண்டும் என்றால் நீ ஒரு நாள் முழுவதும் என்னுடன் இருக்க வேண்டும் என்றான் காதலன்.
Wat??? நான் ஒன்னும் அந்த மாதிரி பொண்ணு இல்லை! உன் கிட்ட பணம் இருந்தா......
என்று அவள் கோபமாக பேச. நான் சொல்வதை முழுமையாக கேள்.
நீ ஒருநாள் என்னுடன் இருந்தால் தானே நான் எப்படி என்று விளங்கிக் கொள்ள முடியும்!!! என்று சொல்லியவன் அவள் கையில் தனது துப்பாக்கியை கொடுத்து அந்த ஒருநாளில் நான் உன்னிடம் ஏதேனும் தவறாக நடந்தால் உன் பாதுகாப்பிற்காக வைத்துக் கொள் என்கிறான்.
அந்த ஒரு நாளில் அவன் மிக கண்ணியமாக ஆணாக ஆண்மைக்குறிய தகுதி திமிரு. இறக்கம்........
அவள் கண்ணிற்கு ஒரு ஹிரோ போல தெரிந்தான். அவன் எப்போதுமே அடிக்கடி என் இதயம் உன்னிடம் இருக்கிறது என்பான்.
இப்படி அவன் சொல்லும் போதெல்லாம் அவனுக்கு தெரியாமல் ஒரு சொட்டு கண்ணீர் வடிப்பாள். சரி என்று அவன் மீது நம்பிக்கை கொண்டு காதலை ஏற்றுக் 4 வருடம் உண்மையாக காதலித்தனர்.
காதலித்தால் இப்படி ஒரு சுகமா!!! என்று வியக்கும் அளவிற்கு மனதில் ஆசையுடன் கணவுகளுடன். ்திருமணத்திற்கு காத்திருந்தால் காதலி.
காதலன் தன் தந்தையிடம் இவளை பற்றி சொல்ல அவர் நீ நான் சொல்வதை கேட்கவில்லை என்றால் குடும்பத்தோடு தற்கொலை செய்துக் கொள்வோம் என்று மிரட்டுகிறார்.
வீட்டில் நடந்ததை தன் காதலியிடம் சொல்ல இனி நீ என்னை மறந்துவிடு. என்னால் என் பெற்றோர்களை மீறீ ஒன்றும் செய்ய இயலாது. என்கிறான். இந்த ஒரு சொல்லில் அவள் நொருங்கி போனாள்.
காதலனுக்கு ஆடம்பரமாக திருமணமும் நடந்து முடிந்தது. திருமணத்திற்கு வந்தவர்கள் பரிசு கொடுக்க இரண்டு நாளைக்கு பிறகு ஒரு கெட்ட வாடை படுகையறையில் வருகிறது இருவரும் அது என்ன வாடை என்று தேட பெயர் எழுதப்படாத ஒரு பரிசினை மனைவி பிரிக்க
அய்யோ!!! அம்மா!!! என்று பதறி மயக்கம் போட்டு கீழே விழுகிறாள். ஓடி வந்த கனவன் அந்த பரிசை பார்த்து உறைந்துவிடுகிறான்.
அடேய் முட்டாள் என் இதயம் உன்னிடம் இருக்கு என்றாயே உன் மனைவிக்கு எதைடா நீ கொடுப்பாய்!!! என்று அந்த இதயத்தின் மேலே எழுதியிருந்தது.
அதாவது தன் காதலனுக்காக தன்னுடைய இதயதை பிச்சி வெளியே எடுத்து அவனுக்கு பரிசாக கொடுத்திருக்கிறாள். அந்த இதயத்தை கையில் எடுத்து மார்போடு அனைத்துக் கொண்டு உயிர் போகும் அளவிற்கு அலறி அழுகிறான் அந்த முட்டாள்.
RHB
வாழ்க்கையா? மரணமா?
என்பதில் வாழ்க்கையை
தேர்ந்தெடுத்தேன் அதுவோ
மரணம் நோக்கி
அழைத்துச் செல்கிறது...
(Y) RHB
Click here to claim your Sponsored Listing.
Category
Telephone
Website
Address
Cuddalore