Green Vision India

Green Vision India

Share

14/01/2026

கிராமத்துப் பக்கம் இன்னிக்கு காப்புக்கட்டுன்னு சொல்லுவாங்க. ஆவாரம்பூ, பூளைப்பூ( சிறு பீளை அல்லது கூரைப்பூ,வேப்பிலை எல்லாத்தையும் ஒண்ணா சேர்த்து வீட்டுக்கு வெளிப்பக்கம் சுற்றிலும் அங்கங்க சொருகி வைப்பாங்க.அந்த வீடுகளைப் பார்க்க அவ்வளவு அழகா இருக்கும்.இது கிருமி விரட்டியும் கூட.

காப்பு கட்டுதல் என்றால் என்ன?

பொங்கல் என்பது நம் மண்ணிற்கும், இயற்கைக்கும் நன்றி தெரிவிக்கும் நாளாக ஒருபுறம் இருந்தாலும், அது நம் உடலுக்கும் மனதிற்கும் மறைமுகமாக ஆரோக்கியம் தரும் நாள். பொங்கல் கொண்டாடும் நாள்கள் மழைக்காலம் தணிந்து, குளிர்காலத்தின் ஒருபகுதியில் நடைபெறுவதால், உடலின் அதிக உஷ்ணசக்திகள் மாறிமாறி வெளியேறி, மக்களிடையே பெரியம்மை, காலரா போன்ற தொற்று நோய்களை உருவாக்கிவிடும்.

அதுமட்டுமின்றி மழைக்காலம் முடிந்தவுடன் பல நச்சுப்பூச்சிகள் வீட்டினை நோக்கிப் படையெடுக்க ஆரம்பித்துவிடும் என்பது நாம் அறிந்த விஷயம். இதனைத் தவிர்க்கவே பொங்கலுக்கு முன்பு வீட்டில் உள்ள அனைத்துப்பொருட்களையும் சுத்தம் செய்து, சுண்ணாம்பினால் வெள்ளையடித்து, பரண்களில் மாட்டுச்சாணம் கொண்டு மெழுகுவர். (சுண்ணாம்பு மற்றும் மாட்டுச்சாணத்தின் காரத்தன்மையால், பூச்சிகள் வராது.)மேலும் வெள்ளையடிப்பதினால் சுவர்களில் வெயிலினால் ஏற்படும் தாக்கம், வீட்டைத் தாக்காமல் பாதுகாக்கும், இதனால் வெயில் சார்ந்த அம்மை,
தாக்காமல் பாதுகாக்கும், இதனால் வெயில் சார்ந்த அம்மை, வயிற்றுப்போக்கு நோய்கள் நம்மை அண்டாது.

பொங்கல் பண்டிகை துவங்குவதற்கு முதல்நாள் வழிபாடு துவங்குவதற்கு முன்பு போகி அன்று பண்டிகைக் காலங்களில் வீட்டினரை நோய் அண்டி விடக்கூடாது என எண்ணி, "காப்பு கட்டுதல்" எனும் சடங்கு கொண்டாடப்படுகிறது. இந்நாளில் மழையால் ஏற்படும் மூட்டைப்பூச்சிகளின் தொல்லையின் காரணமாகவும், விஷப்பூச்சிகளின் தாக்குதலில் இருந்து விடுபடவும் நோய் எதிர்ப்பான்களாகப் பயன்படும் மூலிகைகளான மாவிலை, வேம்பு, ஆவாரம்பூ, சிறுபீளை, தும்பை, பிரண்டை, துளசி கொண்டு வீட்டின் முகப்புகளிலும், தெருக்களிலும் தோரணங்களாகத் தொங்கவிடுவர், ( இவற்றில் ஏதேனும் ஐந்து அல்லது மூன்று.) இதில், நோய் தாக்கும் பூச்சிகள் வருவதில்லை என்ற உண்மை பொதிந்துள்ளது.

அறுவடை முடிந்து விளைபொருள்கள் வீடு வந்த பிறகே கொண்டாடப்படுகிறது பொங்கல். அப்படி வீட்டுக்கு வரும் விளைபொருட்கள்தான் அடுத்த ஒரு ஆண்டிற்கானஉணவாகவும், அடுத்த விளைச்சலுக்கான விதையாகவும் இருக்கிறது.
அவை கெட்டுப் போகாமல் பத்திரமாக இருந்து அந்த வீட்டுக்குப் பயன்பட வேண்டும் என்பதற்காகவே வீடுகளில் காப்பு கட்டப்படுவதாகச் சொல்கிறார்கள் தமிழாய்வாளர்கள். "விளைகிற நிலங்களும் அதில் விவசாயிகளுடன் சேர்ந்து பாடுபடும் கால்நடைகளும்கூட பாதுகாப்பாக இருக்க வேண்டுமென்ற பரந்த சிந்தனையில்தான் நிலங்களையும் தொழுவங்களையும்கூட இதில் சேர்த்துக் கொள்கிறோம்"

இயற்கையின் கொடையால் எழும் உற்சாக ஒலியே 'பொங்கலோ பொங்கல். காப்பு கட்டு துவங்கி காணும் பொங்கல் வரை தொடரும் இயற்கைத் திருவிழா.

இங்கு இயற்கைதான் பிரதானம். மனித இனமே இயற்கையில் இருந்து பிறந்ததுதானே. இயற்கையின் மகத்துவத்தை உணர்ந்த நமது முன்னோர் நமக்கு அளித்த வரமே பொங்கல் திருநாள். உணவை மட்டுமல்லாமல், உடல் ஆரோக்கியத்திற்கான அருமருந்தையும் இயற்கை கொடுக்கிறது.

பொங்கல் நமக்கு உணவு. வீட்டு வாசலில் சொருகும் காப்புக் கட்டு, மருந்து. உடல் நலத்தைப் பேணவே பொங்கல் பண்டிகையில் 'காப்பு கட்டுதல்' கலந்துள்ளது.

Want your organization to be the top-listed Non Profit Organization in Coimbatore?
Click here to claim your Sponsored Listing.

Address


73, SMS LAYOUT, Ondipudur
Coimbatore
641016

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm