OSAI Environmental Organization - India
14/01/2023
2022 ஆம் ஆண்டில் சிறப்புரையாற்றிய இறுதி நிகழ்ச்சியாக நம்மாழ்வார், நெல் ஜெயராமன் ஆகியோரின் நினைவேந்தல் நிகழ்ச்சி அமைந்தது பெரு மகிழ்ச்சி தருகிறது.
திருக்கழுக்குன்றம் அருகே உள்ள 'தமிழ் நிலம் தமிழ்ப் பண்ணையை' இயற்கை ஆர்வலர்கள் பலரும் அறிந்திருப்பீர்கள். நம்மாழ்வார் அவர்களால் இயற்கை வேளாண்மைக்கு ஈர்க்கப்பட்டு தரிசாக கிடந்தb15 ஏக்கர் நிலத்தை உணவுக் காடாக மாற்றி இருக்கிறார் திரு இறையழகன் அவர்கள். அங்கு 300 வகையான 12000 மரங்களை வளர்த்தெடுத்து ஒரு காட்டை உருவாக்கி இருக்கிறார். அதைப் பற்றி விரிவான கட்டுரை எழுதுகிற அளவிற்கு செய்திகள் உண்டு. அங்கு கடந்த 30.12.2022 அன்று நம்மாழ்வார், நெல் ஜெயராமன் ஆகியோரின் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. மேனாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. வீ. தமிழ்மணி அவர்கள் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேராசிரியர் திரு. சுல்தான் அகமது இஸ்மாயில் (தமிழ்நாடு அரசு வளர்ச்சி கொள்கைக் குழு உறுப்பினர்), திரு. செந்தூர் பாரி ( எக்சுனோரா ) , திரு. ஏங்கல்ஸ் ராஜா ( வானகம்) உள்ளிட்டோர் உரை நிகழ்த்தினர். நூறுக்கும் மேற்பட்ட இயற்கை ஆர்வலர்களும் இயற்கை வேளாண்மையை வெற்றிகரமாக செய்து வருபவர்களும் பங்கேற்று தங்கள் உணர்வுகளை பகிர்ந்து கொண்டனர். சென்னை அருகே ஒரு கானகச் சூழலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறேன்.
" எந்த இடத்தையும் எனது நிலம் என்று சொல்லக்கூடாது என்பதை என் தந்தை வலியுறுத்திக் கூறுவார் " எனக் கூறும் உயர்ந்த மனதிற்கு சொந்தக்காரர் இறையழகன் அவர்கள். குடும்பத்தோடு சென்று காண வேண்டிய இடம் "தமிழ் நிலம் தமிழ்ப் பண்ணை" எனும் உணவுக் காடு.
தாமதமாகி விட்டாலும் தவிர்க்கக் கூடாது என்பதால் இப்போது பதிவிடுகிறேன்.
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the organization
Telephone
Website
Address
70-A, Raju Naidu Street, Sivananda Colony
Coimbatore
641012