UTV KOVAI TIMES
கோவையில் சாமியார் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், புதைக்கப்பட்ட அவரது உடலை தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தி அவரது பேத்திகள் வருவாய் கோட்டாட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
கோவை நவக்கரையை சேர்ந்தவர் ராமானந்தமூர்த்தி. சாமியாரான இவர் அதே பகுதியில் 2.5 ஏக்கர் பரப்பளவில் ‘ஸ்ரீ மலையாள தேவி துர்கா பகவதி பிராட்டியம்மன்’ என்ற கோவிலைக் கட்டி பராமரித்து வந்தார். இதற்கிடையே கடந்த 2024ஆம் ஆண்டு அவர் உயிரிழந்தார். அவரது உடல் கோவில் வளாகத்திலேயே புதைக்கப்பட்டுள்ளது.ஆனால், சாமியார் உயிரிழந்த தகவலை அவரது முதல் மனைவி மற்றும் குடும்பத்தினரிடம் தெரிவிக்காமல், இரண்டாவது மனைவியின் மகன் ஆனந்தகுமார் தன்னிச்சையாக புதைத்ததாக கூறப்படுகிறது.
வால்பாறையில் பலத்த இடி, மின்னல் மற்றும் சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பலத்த இடி,மின்னலுடன் கூடிய சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் மரங்கள் முறிந்து மின்கம்பங்கள் மீது விழுந்ததில் மின்சாரம் இரண்டு மணி நேரமாக துண்டிக்கப்பட்டது
சோலையார் எஸ்டேட் பஜார் பகுதியில் மின் கம்பம் மீது மரம் விழுந்ததில் மின் கம்பிகள் அறுந்து மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது மேலும் வீடுகளின் கூறைகளும் இடிந்து விழுந்தது.
இந்நிலையில் பல்வேறு தேயிலைத் தோட்ட பகுதிகளில் நிழல் மரங்களும் முறிந்து விழுந்து உள்ளது குறிப்பிடத்தக்கது
கோவையில் மேளதாளங்கள் முழங்க கோட்டை சங்கமேஸ்வரர் கோயில் தேரோட்டம்.
63 நாயன்மார்கள் திருவீதி உலா : கயிலாய வாத்தியங்கள் முழங்க பக்தி திருவீதி உலா - பலத்த போலீஸ் பாதுகாப்பு.கோவை மாநகரின் மிகப்பழமையான மற்றும் பிரசித்தி பெற்ற ஆன்மீகத் தலங்களில் ஒன்றான கோட்டை அருள்மிகு சங்கமேஸ்வரர் கோயில் தேரோட்டம் இன்று காலை ‘பக்திப் பெருக்குடன்’ மிக விமரிசையாக நடைபெற்றது. சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்வான இந்தத் தேரோட்டத்தில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘சிவ சிவ’ கோஷமிட்டு வடம்பிடித்து இழுத்தனர். தேவாரப் பாடல்களின் இன்னிசையும், கயிலாய வாத்தியங்களின் முழக்கமும் ஆன்மீக அனுபவத்தை பக்தர்களுக்கு வழங்கியது.இன்று காலை ஈஸ்வரன் கோயிலில் இருந்து தேரோட்டம் புறப்பட்டது. அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமி சங்கமேஸ்வரர் எழுந்தருள, அவருக்கு முன்னால் 63 நாயன்மார்களின் சிலைகளும், செங்கோலும் திருவீதி உலாவாக எடுத்து வரப்பட்டன. பாரம்பரிய சிவ வாத்தியங்கள் முழங்க, ஓதுவார்கள் தேவாரப் பாடல்களைப் பாட, பக்தர்கள் பரவசத்துடன் தேரை இழுத்துச் சென்றனர். இந்தத் தேரோட்டமானது கோட்டைமேடு வீதி வழியாகச் சென்று, உக்கடம் என்.எச். ரோடு (NH Road) மற்றும் பெரிய கடைவீதி வழியாக வலம் வந்தது. சரியாக 11.30 மணி அளவில் தேர் மீண்டும் நிலையை வந்தடைந்த போது, கூடியிருந்த பக்தர்கள் கற்பூர ஆரத்தி எடுத்துத் தரிசனம் செய்தனர்.
கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில் உண்டியல் வருமானம் 78 லட்சத்து ஆயிரத்து439 ரூபாய் வசூல் ஆனது. கோவையில் மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது
இக் கோவில் ஏழாவது படை வீடு என பக்தர்களால் போற்றப்படுகிறது .
மாதந்தோறும் பக்தர்கள் அளிக்கும் உண்டியல் காணிக்கள் எண்ணப்படுவது வழக்கம்
நேற்று பக்தர்கள் அளித்த காணிக்கைகளை என்னும் பணி நடைபெற்றது.மொத்தம் உள்ள 14 நிரந்தர உண்டியல்களில் ரூபாய் 77 லட்சத்து 18ஆயிரத்து325ரூபாய் வசூல் ஆனது.கோசலை உண்டியலில் 83 ஆயிரத்து324 ரூபாய் வசூல் ஆனது
ஆக மொத்தம் 78லட்சத்து ஆயிரத்து439 ரூபாய் வசூல் ஆனது.தங்கம் 46கிராம்800மில்லி கிராமும் வெள்ளி2கிலோ900கிராமும்
பித்தளை29கிலோ500கிராமும் இருந்தது. மருதமலை கோவில் தக்கார் ஜெயக்குமார், துணை ஆணையர் விமலா, உதவி ஆணையர் , சுவாமி நாதன் ஆய்வர் பவானி ஆகியோர் முன்னிலையில் கோவில் கண்காணிப்பாளர்கள் மற்றும் பணியாளர்கள் பக்தர்கள் காணிக்கை என்னும் பணியில் ஈடுபட்டனர்.
கோவையில் குடும்பத் தகராறு – பெட்ரோல் பங்க் உரிமை விவகாரம் பரபரப்பு! சக்தி சாலை கடத்தூர் பகுதியில் இயங்கி வரும் பாரத் பெட்ரோலியம் பெட்ரோல் பங்க் உரிமை குறித்து அண்ணன்–தங்கை இடையே மோதல் வெடித்துள்ளது. பெட்ரோல் பங்க் உரிமையை தங்கையின் பெயரில் எடுத்திருந்த நிலையில், தற்போது தங்கை மற்றும் அவரது கணவர் இணைந்து பங்க் உரிமையை கைப்பற்ற முயற்சிப்பதாக அண்ணன் மகேந்திர பிரபு குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், அடியாட்கள் மூலம் மிரட்டல் விடுப்பதாகவும், காவல்துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ள நிலையில், மின்சார இணைப்பு பணிகளை எதிர்த்து போராட்டம் நடைபெற்றதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
கோவை, போத்தனூர் காவல் நிலையத்தில் பணி புரியும் மனிஷா, ஐஸ்வர்யா ஆகியோருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. காவல் ஆய்வாளர் அசோக்குமார், துணை ஆணையர் கார்த்திகேயன், உதவி ஆணையர், கோவை ராமநாதபுரம் காவல் ஆய்வாளர் முத்துலட்சுமி, ஆய்வாளர் ரமேஷ் ஆகியோர் தலைமை தாங்கினார். தொடர்ந்து பெண் போலீசார்க்கு வளைகாப்பு நடைபெற்றது. பின்னர் அனைவருக்கும் உணவு பரிமாறப்பட்டது. இதில் போலீசார் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கோவை
நரசிம்மநாயக்கன்பாளையம், அப்புலுபாளையம்
ஸ்ரீ மாகாளியம்மன் திருக்கோவில் சித்திரைத் திருவிழா
சக்தி கரகம், அக்னி கரகம் அழைத்தல் நடைபெற்றது.
கடந்த 21ம் தேதி பண்டிகை சாட்டுதலுடன் விழா தொடங்கியது. 28ம் தேதி அப்புலுபாளையம் அருள்மிகு நாகாளம்மன் கோயிலில் இருந்து மாகாளியம்மனுக்கு நகை எடுத்து வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இன்று காலை நரசிம்மநாயக்கன்பாளையம் மெயின் ரோடு அருள்மிகு வரசக்தி விநாயகர் கோவிலில் இருந்து சக்தி கரகம் அழைத்து வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து பொங்கல், மாவிளக்கு பூஜைகள் மற்றும் கிடா வெட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை வரசக்தி விநாயகர் கோவிலில் இருந்து அக்னி கரகம் அழைத்து வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
கோவை மாவட்டம் வால்பாறை ஏழாவது சொர்க்கம் என்று அழைக்கப்படும் வால்பாறையில் மிகவும் பிரசித்தி பெற்ற கூழாங்கல் ஆறு, நல்ல முடி பூஞ்சோலை காட்சிமுனை, சோலையாறு அணை, பாலாஜி கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு வெளிநாட்டினர். தமிழகம், கேரளா, பாண்டிச்சேரி. உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்தும் அதிகளவில் சுற்றுலா பயணிகளின் தினந்தோறும் வந்து செல்வது வழக்கம் இந்நிலையில் இந்த ஆண்டு வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து உள்ளதால் ஆறுகளில் நீர் வற்றி வறட்சியாக காணப்படுவதால் சுற்றுலா பயணிகள் வந்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர் இதனால் சுற்றுலாப் பயணிகளின் வரத்து குறைந்துள்ளது.
கோவை மற்றும் உடுமலைப்பேட்டையில் ஜூனியர் ஹாக்கி போட்டி துவங்கி உள்ளது.
ஜூன் மாதம் இறுதியில் கோவையில் நடைபெற உள்ள Junior Men National India Hockey போட்டியில் தமிழ்நாடு அளவில் சிறந்த அணியை தேர்ந்தெடுக்கும் வகையில் 35 மாவட்ட அணிகள் பங்கேற்கும் ஜூனியர் ஹாக்கி போட்டு இன்று கோவை மற்றும் உடுமலைபேட்டையில் துவங்கியுள்ளது.
கோவையில் ஆர் எஸ் புரம் பகுதியில் அண்மையில் திறக்கப்பட்ட சர்வதேச தரத்திலான ஹாக்கி மைதானத்தில் இந்த போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இங்கு 17 மாவட்ட அணிகளும் உடுமலைப்பேட்டையில் 18 மாவட்ட அணிகளும் பங்கேற்றுள்ளன.
இவர்களுக்கான இறுதிப்போட்டி வருகின்ற இரண்டாம் தேதி கோவையில் நடைபெற உள்ளது. கோவையில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் கோவை, திருச்சி, தூத்துக்குடி, சென்னை, விருதுநகர், சேலம் உள்ளிட்ட 17 மாவட்ட அணிகள் பங்கேற்றுள்ளன.
கோவை மற்றும் உடுமலைப்பேட்டையில் வெற்றி பெறும் அணிகளுக்கான காலிறுதி அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் வருகின்ற 1மற்றும் 2ம் தேதி கோவையில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட லிங்காபுரம் கிராமம் அருகில் கடந்த 25 ஆம் தேதி தாயைப் பிரிந்த யானைக்குட்டி ஒன்று சுற்றித்திரிந்ததை அந்தப் பகுதி மக்கள் பார்த்து வனத்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர் இதைத்தொடர்ந்து கடந்த மூன்று நாட்களாக பல்வேறு பகுதிகளில் காணப்பட்ட யானைக் கூட்டங்களுடன் குட்டி யானையை சேர்க்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது ஆனால் அது தோல்வியில் முடிந்தது. ட்ரோன் கேமரா உதவியுடன் தாய் யானையை கண்டுபிடித்து குட்டி யானையை தாயிடம் சேர்க்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர் நான்காவது நாளான இன்றும் ஈடுபட்டு வருகின்றனர் தொடர்ந்து வனத்துறை மருத்துவ குழுவினர் குட்டி யானையை பராமரித்து வருவதாகவும் தாயிடம் சேர்க்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதயங்கள் அறக்கட்டளையின் 9வது ஆண்டு விழா நடைபெற்றது.
ைப் 1 சர்க்கரை நோயை கட்டுக்குள் கொண்டு வர தொடர்ந்து களப்பணியாற்றி வரும் இதயங்கள் அறக்கட்டளையின் 9வது ஆண்டு விழா, கோயம்புத்தூர் ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கிக்கானி பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது.இந்த நிகழ்வில், அறக்கட்டளையின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணன் சுவாமிநாதன், கடந்த ஒன்பது ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட மருத்துவ சேவைகள், அரசுடன் இணைந்து செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் எதிர்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ள புதிய மருத்துவ தொழில்நுட்பங்கள் குறித்து விரிவாக விளக்கினார்.அறக்கட்டளையின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணன் சுவாமிநாதன் பேசுகையில்,
டைப் 1 சர்க்கரை நோயால் உயிரிழப்பு அபாயத்தில் இருந்த குழந்தைகள் கூட, சரியான மற்றும் நேர்மையான சிகிச்சையால் இன்று பள்ளி மற்றும் கல்லூரி கல்வியை தொடர்ந்து வருகின்றனர். சிலர் தன்னம்பிக்கையுடன் வேலை செய்து வருமானமும் ஈட்ட ஆரம்பித்துள்ளனர். கடந்த 9 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் முதல் வகை சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட 4000- க்கும் அதிகமான குழந்தைகளை பராமரித்து வருகிறோம்.
இந்த நிகழ்ச்சியில் நன்கொடையாளர்கள், மருத்துவர்கள், ரோட்டரி கிளப் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Address
GKD Nagar, PN Palayam
Coimbatore
641037