Vetha

Vetha

Share

29/05/2026

*மகிழ்ச்சியான வாழ்விற்கு இறையுணர்வும் அறநெறியும்!*

இறையுணர்வு பெறும் நோக்கத்தோடு மனவளக்கலை (Vethathiri SKY)) பயிற்சிகளைச் செய்பவரே, ஓராண்டு காலத்திற்குள் இறைநிலையை உணர்ந்து கொள்வார்.

அகத்தவமும் அகத்தாய்வும் செய்து இறைநிலையை உணர்ந்தவர்க்கு, 1)அனைத்துயிரும் ஒன்றென்று அறிந்த அடிப்படையில் கடமைகளை ஆற்றும் அன்பும் கருணையும் ஊற்றெடுக்கும்.

2)ஒழுக்கம், கடமை, ஈகை ஆகிய இறைநீதியை மதித்து தனக்கும் பிறக்கும் நல்லதைச் செய்து வாழ்வார்.
அறவழியில் பொருள் ஈட்டி, புலன் இன்பங்களை அளவோடு அனுபவித்து, எல்லோரும் இன்புற்று வாழ உதவி உடல்நலத்தோடும் மனநலத்தோடும் மகிழ்ச்சியாக வாழ்வார்.
வாழ்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்

28/05/2026

*நலவாழ்விற்கு ஆறாவது அறிவின் சிறப்பு!*

ஆறாவது அறிவைக் கொண்டு,நிலம், நீர்,நெருப்பு, காற்று, விண் ஆகிய ஐம்பூதங்களுக்கும் மூலமான மெய்ப்பொருளை சிந்தித்து அறிந்த அறிவும், ஐம்பூதங்களாலான இயற்கையை, வாழ்க்கை அனுபோகப் பொருட்களாக மாற்றும் தொழில் அறிவும், ஐம்பூதங்களின் இயக்க விளைவுகளாகிய அழுத்தம், ஒலி, ஒளி, சுவை வாசனையை அளவோடு இரசித்து இன்புறும் அறிவும், எல்லோரும் இன்புற்று வாழ உதவும் அறிவும் ஆறாவது அறிவின் சிறப்பு ஆகும்.

ஆறாவது அறிவில் முழுமை பெற்ற மனிதனே, இயற்கையை மதித்து ஒழுக்கம், கடமை, ஈகை ஆகிய அறநெறிகளைக் கடைப்பிடித்து தனக்கும் பிறர்க்கும் நல்லதைச் செய்து உடல் நலத்தோடும் பொருள், புகழ், அதிகாரம், புலனின்பம் நான்கும் போதும் என்ற மனநிறைவோடும் நலமாக வாழ்வார்.
வாழ்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்

24/05/2026

*மனவளக்கலைஞர்களே!*
*நீங்கள் இறைவனைக் கண்டு கொண்டீர்களா?*

இறைநிலைத்தவம் செய்து இறைவனைக் கண்டுகொள்பவருக்கே, எல்லா உயிர்களையும் தனக்கு சமமாக மதித்து ஒழுகும் அன்பும் கருணையும் ஊற்றெடுக்கும். பொருள் ஈட்டும் செயலிலும், புலன் இன்பங்களைத் துய்க்கும் செயலிலும்
ஒழுக்கம், கடமை, ஈகை ஆகிய அறநெறிகளைக் கடைப்பிடித்து, உடல்நலத்தோடும் மனநலத்தோடும் எந்நாளும் மகிழ்ச்சியாக வாழ்வீர்கள்!
வாழ்க வேதாத்திரியம் வாழ்க வளமுடன்

உதவிக்கு அலைபேசி எண்
70109 55300

Want your school to be the top-listed School/college in Coimbatore?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Address


B6, Housing Unit, Seeranaicken Palayam
Coimbatore
641007