MS DREAM HOMES
15/01/2022
12/11/2021
சிந்திபதற்காக....
இப்போழுது உள்ள சூழ்நிலையில் கட்டுமான பொருட்களின் விலை அதிகரிப்பால் சதுர அடிக்கு கூடுதல் செலவாகுது.
ஒப்பந்தம் எடுத்து ஒப்பந்த முரையில் வேலை செய்வோர் எக்குத்தப்பாக சம்பாதிக்கிறார்கள் என பலர் எண்ணுகிறார்கள். இது ரொம்ப தவறு ஒப்பந்ததார்ர்களுக்கு 10% லாபம் கிடைத்தாலே பெரிய விஷயம்தான் இந்த திடீர் விலை ஏற்றம் பொருள் தட்டுப்பாடு என்றால் இந்த லாப சதவீதம் வெறும் 5% க்கும்கூட வாய்ப்புன்டு சிலர் போட்டிபோட்டு குறைவான தொகைக்கு எடுத்து இழப்பை சந்திப்போரும் நிறைய உண்டு சிலர் வேலையை பாதியில் போட்டுவிட்டு ஓடிவிடுவர் பல பஞ்சாயத்துகளும் நடக்கும்...
எனவே சிலர் குறைவான தொகைக்கு செய்வதாக சொன்னால் வேலையை ஒப்படைத்து சிக்கலில் மாட்டிக்காமல் இருப்பதே சிறந்தது இந்த துறையில் முறையாக செய்து நல்ல பேருடன் தொழில் செய்வோர் பத்து சதவீதம் பேர்தான் இருப்பர் இதற்கு பொறியாளர்கள் பக்கம் மட்டும் குறை இல்லை வீட்டுக்காரர்கள் பக்கம் குறை இருக்கு குறைவாக தொகையை சொல்வோர்களுக்கு வேலை தந்து சிக்கலில் தவிக்கின்றனர் இன்றைய கட்டுமான பொருட்களின் திடீர் உயர்வு கட்டுனர்களை நிலைகுலைய செய்துள்ளது...
கடந்த வருடத்தைவிட கம்பி டன்னுக்கு ரூ.25000 ஏறிவிட்டது...சிமெண்ட் மூட்டை ரூ.100 ஏறிவிட்டது...செங்கல் ஜல்லி விலையும் அவ்வாறே ஏறியுள்ளது...எலக்ட்ரிக்கல்,பிளம்பிங்,பெயிண்டிங் மற்றும் மர சாமான்கள் விலை 30% சதவீதம் ஏறிவிட்டது இதனால்தான் கட்டுமான தொகையும் எகிறவேண்டிய சூழல் கம்பி,சிமெண்ட் விலை தற்போது ஏறிய விலையில் பாதி குறைந்தால்கூட சதுர அடிக்கு ரூ.50 தான் மேற்சொன்ன கட்டுமான தொகையில் குறையும்...
ஒரு பத்து சதுரம் வீட்டுக்கு இன்று தோராயமாக மொத்த வேலைக்கும் கணக்கிட்டால் 20 லட்சம் செலவாகும்...இதை ஒரு பொறியாளர் ஒப்பந்தமாக எடுத்து செய்தால் 1.5 முதல் 2லட்சம் லாபம் கிடைக்கலாம்...குறைந்தது ஆறு மாத கால வேலை என்றாலும் மாதம் அந்த பொறியாளுருக்கு 30000 முதல் 33000 ரூபாய் கிடைக்கலாம்...ஒரு கொத்தனாரே இன்று மாதம் மாதம் 25000 ரூபாய் சம்பாதிக்கிறார்...வேலைகள் அதிகமாக நடந்தால் நீங்க நினைப்பதுபோல் ஒருவர் மாதம் லட்சக்கணக்கில் சம்பாதிக்க இயலும்...
இந்த எதார்த்தத்தை வீடு கட்டுவோர் புரிந்துகொண்டால் அவர்களது வீடு சிறப்பாக அமையும்...பலர் பேச்சை கேட்டு குழப்பமாகி வீடு கட்டும் பொறியாளர்களிடம் உறவை மோசமாக்கிக்கொண்டால் வீடு கட்டுவோருக்குதான் இழப்பு...அதே நேரம் பொறியாளர்களும் தாங்கள் போட்ட ஒப்பந்தத்தில் உள்ளதுபடி மீறாமல் அல்லது வேலைகளை குறைக்காமல் செய்துதரவேண்டியது கடமை குறித்த காலத்தில் பேமெண்ட் தராத வீட்டுக்காரர்களாலும் பிரச்சனை வருது பணத்தை வாங்கிக்கொண்டு வேலையை நேரத்துக்கு முடித்து தராத பொறியாளர்களாலும் சிக்கலே...
ஆகையால்தான் நான் இப்போது நிறைய பொறியாளர்கள் அவருக்கு தெரிந்தவர்கள், நண்பர்கள், உறவுக்காரர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் செய்யாமல் கன்சல்டிங் அடிப்படையில் வேலையை செய்து தருகிறார்கள் இங்கே பொறியாளருக்கு பண இழப்புக்கும் வேலை இல்லை...வீட்டுக்காரருக்கும் நாம் ஏமாந்தோமா என்ற எண்ணமும் ஏற்படப்போவதில்லை...அதேநேரம் கன்சல்டிங் முறை வேலையில் வீட்டுக்காரருக்கு பொருட்களை ஏற்பாடு செய்து தரும் பெரிய பொறுப்பு இருக்கு...மாதச்சம்பளத்துக்கு வேலை செய்வோர் இதற்கு பயந்தே மொத்த காண்ட்ராக்ட் விட்டுவிடுவர்...
கட்டுமானத்தொழில் செய்வதும் சாதாரண விஷயம் கிடையாது என பலருக்கு புரிய வைப்பதற்காகவே இந்த பதிவு!
உங்கள் கனவு இல்லத்தை தரமாகவும் நிறைவாகவும் கட்டி தர அணுகவும்..
MS DREAM HOMES
SIVAKASI
☎️ +𝟗𝟏 95976 42456
98429 01148
𝐺𝑒𝑡 𝑦𝑜𝑢𝑟 𝑃𝑙𝑎𝑛𝑠 & 𝐷𝑒𝑠𝑖𝑔𝑛𝑠 𝑓𝑟𝑜𝑚 𝑜𝑢𝑟 𝑒𝑥𝑝𝑒𝑟𝑡𝑠.
𝟑𝐃 𝐄𝐥𝐞𝐯𝐚𝐭𝐢𝐨𝐧| 𝐈𝐧𝐭𝐞𝐫𝐢𝐨𝐫 𝐃𝐞𝐬𝐢𝐠𝐧| 𝟐𝐃 𝐃𝐫𝐚𝐰𝐢𝐧𝐠𝐬 |
𝐀𝐫𝐜𝐡𝐢𝐭𝐞𝐜𝐭𝐮𝐫𝐚𝐥_𝐒𝐭𝐫𝐮𝐜𝐭𝐮𝐫𝐚𝐥 𝐃𝐫𝐚𝐰𝐢𝐧𝐠𝐬|
𝐴 𝑐𝑜𝑚𝑝𝑙𝑒𝑡𝑒 𝑠𝑜𝑙𝑢𝑡𝑖𝑜𝑛 𝑓𝑜𝑟 𝑎𝑙𝑙 𝑦𝑜𝑢𝑟 𝑝𝑙𝑎𝑛𝑛𝑖𝑛𝑔 & 𝑑𝑒𝑠𝑖𝑔𝑛𝑖𝑛𝑔 𝑛𝑒𝑒𝑑𝑠…
தரம் மலிவு விலையில் கிடைப்பதில்லை
Click here to claim your Sponsored Listing.
Contact the business
Website
Address
Chennai
626141