Kshatriyas - The Ruler

Kshatriyas - The Ruler

Share

28/05/2026

இந்த பாராட்டு விழாவில் சி.வி. சண்முகம் எங்காவது மேடையில் இருக்கிறாரா?
C.V.சண்முகம் செய்ததாக உறவுகள் வீண் வதந்தியை பரப்ப வேண்டாம்.

வன்னியர் பொதுச்சொத்துவாரிய 44-வது (44/2018) சட்டத்தை கொண்டு வர செய்தவர் ஐயா சிஎன்ஆர்.

10.5% உள்ஒதுக்கீட்டுக்கான நீதிமன்ற ஆணை (2012 ஆண்டு), அரசாணை எண் GO MS No.35 அம்மையார் ஜெயலலிதா அவர்களை போடசெய்தவர் ஐயா சிஎன்ஆர். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையத்திடம் 10.5% பரிந்துரையை 2012 இல் போட செய்தவர் ஐயா சிஎன்ஆர் அவர்கள்.

எஸ்.எஸ். இராமசாமி படையாட்சியார் அவர்களுக்கு கடலூரில் மணிமண்டபம் மற்றும் 100-வது பிறந்தநாளை அரசு விழாவாக எடப்பாடியாரை செய்ய வைத்தவர் ஐயா சிஎன்ஆர்.

இதையெல்லாம் எடப்பாடியார் செய்ததற்காக தான் 2019 இல் சி.என்ஆர் ஐயா எடப்பாடியார் அவர்களுக்கு பல லட்சம் செலவுசெய்து பாராட்டுவிழா நடத்தினார்.

ஆனால் இதையெல்லாம் சி.வி. சண்முகம் செய்ததாக அவர்களுடைய ஆதரவாளர்கள் சொல்வது தவறானது.

உண்மையான தலைவரின் உழைப்பை தயவுசெய்து மறைக்காதீர்கள். இந்த பாராட்டு விழாவில் சி.வி. சண்முகம் எங்காவது மேடையில் இருக்கிறாரா?

23/05/2026

ஆட்சியில் பங்கு மற்றும் அதிகாரத்தில் பங்கு என்று தன் சமூக மக்களை சரியான பாதைக்கு அழைத்துச் செல்கிறார் விசிக வின் தலைவர் திரு. தொல் திருமாவளவன் அவர்கள்.

தன் குடும்பத்தை சேர்ந்தவர்களை பதவிகளில் அமர்த்தி அழகு பார்க்காமல் கட்சியின் சக நிர்வாகிகளை அமைச்சராக்கி அழகு பார்க்கும் அந்த குணம் தான் விசிகவுக்கு உரிய அங்கிகாரம் கிடைக்க காரணம்.

தலைமைத்துவக்கான படிப்பினையை மற்றவர்கள் இவரிடம் கற்றுக்கொள்ள வேண்டும்..

நம்பிய மக்களை நடுரோட்டில் தவிக்க விட்ட அன்புமணியும் இராமதாசும் இவர்களிடம் கற்றுக்கொள்ள வேண்டும் விசுவாசம்ன்னா என்னவென்று.

25 உயிர்கள் தன் சமூகம் தங்களுடைய குடும்பங்களை காப்பாற்றும் என்று 1987 இல் இடஒதுக்கீடு கேட்டுபோராடி உயிர் இழந்தனர்.

அந்த 25 குடும்பங்களுக்கு இதுவரை ஒரு MLA சீட்டாவது கொடுத்து அழகு பார்த்ததா இந்த பாமக கட்சி.

சுயநலமாக செயல்படும் தலைவர்களை தலைமையாக தேர்ந்தெடுத்தால் வன்னியர் சமூகத்திற்கு துரோகமே செய்வார்கள்.

இதுவரை அரசியலில் எந்த பதவியையும் வகிக்காமல் தன் சொத்துக்களை விற்று பல சட்டப்போராட்டங்களை செய்து பல திட்டங்களை நமக்காக போராடிக்கொடுத்த ஐயாசிஎன்ஆர் அவர்கள் தலைமையை ஏற்போம்.!

Photos from Kshatriyas - The Ruler's post 01/04/2026

உரிமைக்காக போராட மட்டுமே தெரிந்த சமூகம், இந்த வன்னியர் சமூகம்!

போராடி உயிரை மட்டுமே விடத்தெரிந்த சமூகம், இந்த வன்னியர் சமூகம்!

சாதி அரசியலை நம்பி நடுரோட்டில் நின்ற சமூகம் இந்த வன்னியர் சமூகம்!

முன்னோர்களின் போராட்ட குணத்தை மறந்த சமூகம் இந்த வன்னியர் சமூகம்!

உண்மையான போராட்ட தலைவர்களை இனம் கண்டும் துரோகம் செய்த தலைவர்களை அரசியலுக்காக ஆதரிக்கும் சமூகம் இந்த வன்னியர் சமூகம்.

துரோகம் செய்த தலைவர்கள் இன்னும் செய்வார்கள் என்று நம்பும் சமூகம் இந்த வன்னியர் சமூகம்!

மற்ற சகோதர சமுதாயத்தைப் போல் எல்லா கட்சிகளில் உள்ள தலைவர்களை மதிக்கும் பண்பாட்டை மறந்த சமூகம் இந்த வன்னியர் சமூகம்!

முன்னோர்களின் உழைப்பை மறந்த சமூகம் இந்த வன்னியர் சமூகம்!

அந்த உழைப்பால் சேர்த்து வைத்த சொத்துக்களை பல லட்சம்கோடி மதிப்பை அறக்கட்டளைகளாக இந்த வன்னிய சமூகத்துக்கு முன்னேற்றத்திற்காக எழுதி வைத்ததை மறந்த சமூகம் இந்த வன்னியர் சமூகம்!

இந்த அறக்கட்டளைகளை தன் குடும்ப பெயரில் மாற்றி எழுதி திருடிய துரோகிகளுக்கு முட்டுக்கொடுக்கும் சமூகம் இந்த வன்னியர் சமூகம்!

ஆனால் இதை அனைத்தையும் சட்டப்படி போராடி 200 லட்சம்கோடி மதிப்புடைய ஒரு வன்னியர் பொதுச்சொத்து வாரியத்தை 44-வது சட்டத்தை உருவாக்கி அமைத்து

அந்த வாரியத்தை இந்த சமுதாய மக்களுக்காக செயல்படுத்துவதற்காக

2011 இலிருந்து 2021 வரை அதிமுக அரசை தொடர்ந்து ஆதரித்து வந்தவர் ஐயா சிஎன்ஆர். 2019 இல் செயல்படுத்த எடப்பாடியார் சம்மதம் தெரிவித்தார். அப்போது தான் பாமக கூட்டணி சேரமாட்டோம் என்று சொன்னவர்கள் கூட்டணி சேர்ந்தார்கள். எதற்காக?

வாரியம் செயல்படுவதை நிறுத்தி வைக்கப்பட்டது!

அன்றிலிருந்து இன்றுவரை தொடர்ந்து திமுகவையும் செயல்பட வைக்க, தொடர்ந்து போராடுகிறவர் ஐயா சிஎன்ஆர்.

ஆனால் திமுகவும் செயல்படுத்தவில்லை.

திமுகவிடமும் செயல்படுத்தாதவாறு துரோகிகள் தடுக்க முயற்சியெடுக்கின்றனர்.

200 லட்சம்கோடியை செயல்படுத்தினாலே இந்த சமூகம் நம்பர் ஒன் இடத்திற்கு முன்னேற்றத்தில் தென்படும்!

ஆனால் இந்த வன்னியர் சமூகம் இதையெல்லாம் உணராமல் இன்னும் கையேந்தி பிச்சையெடுக்கவே பழக்கப்படுகின்றனர்.

உன் பணத்தை சுரண்டி உன்னையே பிச்சைக்காரனாக்குவதையே அறியாத முட்டாள்களுக்கு எடுத்துச்சொல்லி பயன் இல்லை.

200 லட்சம் கோடி மதிப்புடைய வன்னியர் பொதுச்சொத்து வாரியத்தை செயல்படுத்தும் கட்சிகளுக்கு மட்டுமே எங்கள் வாக்கு என்று சொல்லிப் பாருங்கள். நிச்சயமாக அதை நாம் செயல்படுத்த வைக்க முடியும்.

#200லட்சம்கோடி

Want your organization to be the top-listed Non Profit Organization in Chennai?
Click here to claim your Sponsored Listing.

Website

Address


Chennai
600003