Grace Tabernacle Apostolic Church

Grace Tabernacle Apostolic Church

Share

06/24/2026

வாடகை வீடு | RENTED HOUSE | INNERMAN DEVOTIONS

சங்கீதம் 23:6 - என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்; நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்.

ஒரு ஊரிலே வாழ்ந்து வந்த குடியானவன், அதிகமாக பிரயாசப்பட்டு உழைத்து வந்தான். தற்போது வாடகை வீட்டிலே வாழ்ந்து வந்த அவ னுக்கு, தன் குடும்பத்தோடு, சொந்த வீட்டிலே வசிக்க வேண்டும் என்று வாஞ்சையாய் இருந்தான். தனக்கு சொந்தமாக ஒரு அளவான வீட்டை கட்ட ஆரம்பித்தான். தன்னுடைய உழைபின் பிரயாசத்தினாலே உண் டாகும் பலனை, வீண் செலவு செய்யாமல், அந்த பணத்தை சொந்த வீட்டை கட்டுவதற்கு முதலீடு செய்து வந்தான். தான் வாழும் வாடகை வீட்டிலே எளி மையாக வாழ்ந்து வந்தான். அவனை கண்ட உற்றார், உறவினர்களில் சிலர், நீ ஏன் இப்படி வாழ்கின்றாய்? கடுமையாக உழை க்கும் நீ, அதன் பலனை அனுபவிக்க வேண்டாமா? பிள்ளைகள் இந்த வயதில் உண்டு குடித்து மகிழ்ந்திருக்காவிட்டால், எந்த வயதில் அதை செய்யப் போகின்றார்கள் என்று கூறிக் கொண்டார்கள். அவனோ, அவர்களுக்கு மறுமொழியாக: நானும் என் குடும்பமும் பட்டினியாக இருக்கவில்லை. பிள்ளைகள், தங்கள் வயதிலே செய்ய வேண்டிய காரியங்களை நிறைவேற்வதற்கான ஒழுங்குகள் யாவும் செய்யப்பட்டிருக்கின்றது. நாங்கள் வசிக்கும் வீட்டில் முதலீடு செய்வதற்கு அது எங்களுக்கு சொந்தமானதல்ல. சில அசௌகரியங்கள் உண்டு. ஆனால், எங்களுடைய நிரந்தர வீடு கட்டப்பட்டபின்பு, நாங்கள் அங்கே சென்று விடுவோம். இப்போதுள்ள பிரச்சனைகள் ஒன்றும் அங்கே இருக்காது என்று தயவாக கூறினான். கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருக்க அழைப்பை பெற்ற அருமைய சகோதர சகோதரிகளே, நாம் வாழும் இந்த உலகம், நமக்கு ஒரு வாடகை வீடு. இது நிரந்தரமான வாசஸ்தலம் அல்ல. 'இப்பொழுது இருக்கிற வானங்களும் பூமியும் அந்த வார்த்தையினாலேயே அக்கினிக்கு இரையாக வைக்க ப்பட்டு, தேவபக்தியில்லாதவர்கள் நியாயந்தீர்க்கப்பட்டு அழிந்துபோகும் நாள்வரைக்கும் காக்கப்பட்டிருக்கிறது.' 2 பேதுரு 3:7ல் வாசிக்கின்றோம். எனவே, ஞானமுள்ள பிள்ளைகளைப் போல, அநித்தியமானவைகளிலே உங்கள் காலங்களையும், வளங்களையும் முதலீடு செய்யாமல், நித்திய வீட்டிற்குரியவைகளிலே முதலீடு செய்யுங்கள். இவ்வுலகத்தை அனுபவி க்கிறவர்கள் அதைத் தகாதவிதமாய் அனுபவியாதவர்கள்போலவும் இருக்கவேண்டும்; இவ்வுலகத்தின் வேஷம் கடந்துபோகிறதே. (1 கொரி 7:31)

ஜெபம்: பரலோக தேவனே, அநித்தியமானவைகளிலே என் நாட்களை நான் விரயப்படுத்தாதபடிக்கு,நித்தியத்திற்குரியவைகளை பற்றுக் கொள்ளும்படிக்கு உணர்வுள்ள இருயதத்தை தந்து வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - பிலிப்பியர் 3:20

Psalms 23:6 - Surely goodness and mercy shall follow me all the days of my life: and I will dwell in the house of the Lord for ever. (KJV)

Based on: The Inner Man Tamil Monthly Magazine - Published by Grace Tabernacle apostolic church, Toronto Canada

Background Music: Recorded by Grace Tabernacle apostolic church

06/22/2026

திவ்விய சுபாவத்தின் பங்காளிகள் | PARTAKERS OF DIVINE NATURE |INNERMAN DEVOTIONS

2 பேதுரு 1:4 - இச்சையினால் உலகத்திலுண்டான கேட்டுக்குத் தப்பி, திவ்விய சுபாவத்துக்குப் பங்குள்ளவர்களாகும்பொருட்டு

இந்த உலகத்தின் போக்கில் வாழும் கல்விமான்கள், இந்த உலத் தின்படி சிந்திக்கின்றார்கள். பூமிக்கடுத்தவைகளை சிந்தித்து. உலக ஞானத்தை நாடுகின்றார்கள். நாங்களோ, இயேசுகிறிஸ்துவை, சிலுவையில் அறையப்பட்ட அவரையேயன்றி, வேறொன்றையும் குறித்து மேன்மை பாராட்டுவதில்லை என்று தேவ ஊழியராகிய பவுல்தாமே கொரிந்தியருக்கு எழுதிய நிரூபத்திலே கூறியிருக்கின்றார். சிலுவையில் அறையப்பட்ட இயேசுகிறிஸ்துவை மேன்மை பாராட்டுகின்றவர்கள், இந்த பூமிக்குரியவைகளை தேடாமல், மேலானவைகளை நாடித் தேடுகின்றார்கள். அவர் கள் உலக ஞானத்தையல்ல, தேவ ஞானத்தை வாஞ்சிக்கின்றார்கள். அவர் மேலும் குறிப்பிடுகையில்: தேறினவர்க ளுக்குள்ளே ஞானத்தைப் பேசுகிறோம்; இப்பிரபஞ்சத்தின் ஞானத்தையல்ல, அழிந்துபோகிற வர்களாகிய இப்பிரபஞ்சத்தின் பிரபுக்களுடைய ஞானத்தையுமல்ல, உலகத் தோற்றத்திற்கு முன்னே தேவன் நம்முடைய மகிமைக்காக ஏற்படுத்தினதும், மறைக்கப்பட்டதுமாயிருந்த இரகசியமான தேவஞானத்தையே பேசுகிறோம். அதை இப்பிரபஞ்சத்துப் பிரபுக் களில் ஒருவனும் அறியவில்லை. அறிந்தார்களானால், மகிமையின் கர்த்தரை அவர்கள் சிலுவையில் அறையமாட்டார்களே. எழுதியிருக்கிறபடி: தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக் கண்காணவுமில்லை, காதுகேட்கவுமில்லை, அவைகள் மனுஷனுடைய இருதயத்தில் தோன்றவுமில்லை. நமக்கோ தேவன் அவைகளைத் தமது ஆவியினாலே வெளிப்படுத்தினார்; அந்த ஆவியானவர் எல்லாவற்றையும், தேவனுடைய ஆழங்களையும், ஆராய்ந்திருக்கிறார்.' ( 1 கொரி 2:6-10) இந்த உலக ஞானத்தை கொண்டவர்கள், இந்த உலகத்தின் வேஷத்தை தரித்து, இந்த உலகத்திலுண்டானதும், அற்ப பிரயோஜனமுள்ளதும், அழிந்து போகிறதுமான மேன்மைகளை குறி த்து பெருமையடைகின்றார்கள். தேவ ஞானத்தை பெற்றவர்கள், தேறின சிந்iயுடையவர்களாக இருக்கின்றார்கள். ஒருவேளை அவர்கள் இந்த உலகத்திலே மேன்மையானவைகள் என்று கருதப்படுபவைகளை கொண் டிருந்தாலும், இச்சையினால் உலகத்திலுண்டான கேட்டுக்குத் தப்பி, திவ்விய சுபாவத்துக்குப் பங்குள்ளவர்களாகும்பொருட்டு, உலத்திலுள்ளவைகளைக் குறித்து மேன்மைபாராட்டாமலும், பூமிக்குரியவைகளை சிந்திக்காமல், பரலோகத்திற்குரியவைகளையே தியானமாக கொண்டிருக்கின்றார்கள்.

ஜெபம்: தூய ஆவியை எனக்கு அருளின தேவனே, நான் இச்சையினால் உலகத்திலுண்டான கேட்டுக்குத் தப்பி, திவ்விய சுபாவத்துக்குப் பங்குள்ளவர்களாகும்பொருட்டு, பரலோகத்திற்குரியவைகளை பற்றிக் கொள்ள கிருபை செய்வீராக. இட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 கொரி 7:31

2 Peter 1:4 - that by these ye might be partakers of the divine nature (KJV)

Based on: The Inner Man Tamil Monthly Magazine - Published by Grace Tabernacle apostolic church, Toronto Canada

Background Music: Recorded by Grace Tabernacle apostolic church

Want your place of worship to be the top-listed Place Of Worship in Toronto?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address


210 Silver Star Boulevard , Unit 807
Toronto, ON
M1V5J9

Opening Hours

Tuesday 7pm - 8:30pm
Sunday 9am - 1pm