Light For Learning
06/03/2026
சட்டத்தரணி மர்யம் மன்சூர் நளீமுதீன் முன்வைத்த கல்முனை தொகுதி அபிவிருத்தி தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கைக்கு பதிலளித்து, ஜனாதிபதி செயலாளர் அலுவலகம் நடவடிக்கை எடுக்க உத்தரவு
ஏ.ஆர் மன்சூர் பௌண்டேசன் மற்றும் லைட் போ லேர்னிங் (light for learning) அமைப்பின் தலைவர் சட்டத்தரணி மர்யம் மன்சூர் நளீமுதீன் அவர்கள் ஜனாதிபதியிடம் முன்வைத்திருந்த கோரிக்கையை கிழக்கு மாகாண பிரதம செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டு , தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்த அறிவிப்பு, ஜனாதிபதி செயலாளர் அலுவலகத்தின் பொதுமக்கள் தொடர்பு பிரிவின் பிரதி பணிப்பாளர் திரு. சி.ஏ.கே. பரணமன அவர்களால் 2026.02.18 அன்று கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த கடிதத்தில், கல்முனை தொகுதி அபிவிருத்தி மற்றும் கிழக்கு மாகாணம் தொடர்பான பல்வேறு விடயங்களை ஆராய்ந்து, அவசியமான நடவடிக்கைகளை எடுக்குமாறு கிழக்கு மாகாண பிரதம செயலாளரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.இதில் கல்முனை தொகுதி நீண்ட காலமாக எதிர்நோக்கும் உட்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதி குறைபாடுகள், கிழக்கு மாகாண கடலரிப்பு அபாயம் , பெண்கள் மற்றும் மாணவர்கள் சார்ந்த எதிர்கால திட்டங்கள்,சுனாமி வீட்டுத்திட்டம் சார்ந்த முழுமை பெறா அபிவிருத்தி, வைத்தியசாலைகளின் தரமுயர்த்தல் , நவீன நூலகங்களின் தேவையும் பராமரிப்பும் , சாய்ந்தமருது தோணாவின் நிலையான அபிவிருத்தி ,மாவடிப்பள்ளி பால அபிவிருத்தி,திண்ம கழிவகற்றும் முறைமையும் தீர்வும் மற்றும் தொகுதி சார்ந்த பல முழுமையான அபிவிருத்தி திட்டங்களின் தேவைகள் குறித்து சட்டத்தரணி மரியம் முன்சூர் நளீமுதீன் அவர்கள் ஜனாதிபதியிடம் நேரடியாக முன்வைத்த கோரிக்கைக்கு தேவையான ஒத்துழைப்பை வழங்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
விசேடமாக கிழக்கு மாகாண கடற்கரைப் பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக கடலரிப்பு கடுமையாக அதிகரித்து வருகின்றமையினால் மக்கள் வாழ்வாதாரம் பல வழிகளில் பாதிக்கப்பட்டுள்ளது. கடற்கரை பாதுகாப்பு அணைகள் அமைத்தல், நிலையான கடற்கரை பாதுகாப்பு திட்டங்கள் அமல்படுத்தல், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வாழ்வாதார தொழில் வழிகாட்டல் மற்றும் நீண்டகால மறுவாழ்வு திட்டங்கள் ஆகியவையும் முக்கிய தேவைகளாக முன்வைக்கப்பட்டுள்ளன.மீனவர்கள், சிறு வணிகர்கள் மற்றும் தினசரி கூலித் தொழிலாளர்கள் உட்பட பல சமூகங்கள் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளனர். “இப்போது நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், எதிர்காலத்தில் பெரும் மனிதாபிமான மற்றும் பொருளாதார நெருக்கடி உருவாகும்” என்ற எச்சரிக்கையும் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கல்முனை தொகுதி மக்கள் நீண்ட காலமாக எதிர்நோக்கி வரும் அபிவிருத்தி தேவைகள் தொடர்பாக இந்நடவடிக்கை முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.
10/02/2026
சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி அமைப்பின்
ஜனாஸாக்களைக் கண்ணியப்படுத்தும் உன்னதப் பணிக்கு சட்டத்தரணி மர்யம் மன்சூர் அவர்களினால் கூடாரங்களுடன் ஒரு தொகை நலன்புரி உபகரணங்கள் வழங்கி வைப்பு
************************************************
“ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தைச் சுவைத்தே தீரும்" எனும் இறைவாக்கிற்கமைய, ஒரு முஃமின் மரணிக்கும்போது அவருக்குச் செய்ய வேண்டிய இறுதிக்கிரியைகளைச் செம்மையாகவும் கண்ணியமாகவும் முன்னெடுப்பதும், அக்குடும்பத்தின் துயரமான வேளையில் நிழலாகவும் ஒளியாகவும் பங்கேற்பதும் ஈருலக நற்பேறுகளைப் பெற்றுத்தரும் மகத்தானதொரு சமூகக் கடமையாகும்.
இப்பெரும் பொறுப்பினைத் தோளில் சுமந்து, சாய்ந்தமருது அல் பதாஹ் ஜும்மா பள்ளிவாசலை மையமாகக் கொண்டு மகத்தான சேவையாற்றி வருகிறது "அல் பதாஹ் ஜனாஸா நலன்புரி அமைப்பு".
"மனிதர்களில் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானவர், மற்ற மனிதர்களுக்கு அதிக பயன் அளிப்பவரே" என்ற நபிமொழிக்கேற்ப, ஜனாஸா குளிப்பாட்டுதல், கபூர் தோண்டுதல் முதல் நல்லடக்கம் மற்றும் அனர்த்த முகாமைத்துவப் பணிகள் வரை இவ்வமைப்பினர் செய்து வரும் தியாகங்கள் அளப்பரியவை.இவ் உயரிய பணியை மேலும் விரிவுபடுத்தி துரிதப்படுத்தும் நோக்கத்தை முன்னிறுத்தி, A.R. Munsoor Foundation தலைவியும், சட்டத்தரணியுமான சகோதரி Maryam Munsoor Naleemudeen அவர்களினால் கூடாரத் தொகுதி (Tent Full Sets ), கபூர் வெட்டுவதற்குத் தேவையான உபகரணங்கள் மற்றும் மின்விளக்குகள் (Focus Lights) என்பன நிர்வாகத்தினரிடம் முதற்கட்டமாக வழங்கி வைக்கப்பட்டது.
இவ் உயரிய மனிதாபிமானப் பணியில் தம்மை அர்ப்பணித்துள்ள அல் பதாஹ் ஜனாஸா நலன்புரி அமைப்பின் சகோதரர்களுக்கும், அவர்களுக்குப் பக்கபலமாக இருக்கும் உடன்பிறப்புகள் அனைவருக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் ஈருலகிலும் நற்கூலிகளை வழங்கியருள வேண்டுமெனப் பிரார்த்திக்கின்றோம்.
Click here to claim your Sponsored Listing.
Contact the organization
Telephone
Website
Address
Melbourne, VIC
3030