Kohu Srikugan SK

Kohu Srikugan SK

Share

13/06/2026

St. Anthony's Shrine Colombo 13

13/06/2026

St. Anthony's Shrine Colombo 13

10/06/2026

வீரவன்ச - கம்மன்பில தலைமையில் சத்தியாக்கிரகம் என்ற பெயரில் புறக்கோட்டையில் நடந்து வந்த கூத்து முடிவுக்கு வந்து இருக்கிறது.

சத்தியாக்கிரகத்தில் ஈடுபடுவதாகக் கூறிக் கொண்ட ஆசாமிகள் விசாரணை அதிகாரிகளிற்கும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிகாரிகளிற்கும் எதிராக அச்சுறுத்தல் விடுத்து அவர்களின் மன தைரியத்தைக் குலைத்துப் போட்டுக் கொண்டு இருந்தார்கள்.

இத்தனைக்கும் இவர்கள் வெறும் பத்துப் பதினைந்து பேர்.

ஏன் இந்தக் கும்பலை துரத்தாமல் பார்த்துக் கொண்டு இருந்தார்கள் என்று ஆச்சர்யமாக இருந்தது.

வீரவன்சவின் தம்பி, நாற்பது வாகனங்களை சட்டவிரோதமாகப் பாவித்த விவகாரத்தில் வெளிநாடு செல்லத் தடை என்ற அறிவிப்பும், வீரவன்சவின் ஊடகச் செலாளர் 22ம் திகதி வரை விளக்கமறியல் என்ற அறிவிப்பும் இன்று காலையில் ப்ரேக்கிங் நியூஸாக முதலில் வந்தது.

அத்தோடு பயங்கரவாதிகளோடு கூட்டுச் சேர்ந்து சலே காய்நகர்த்திய விவகாரம் பாராளுமன்றத்தில் உத்தியோகபூர்வமாக வாசிக்கப்பட்டது.புலனாய்வு ஊடகவியலாளர்கள் உட்பட ஈஸ்டர் குண்டு வெடிப்பு தொடர்பாய் ஆர்வம் உள்ள அனைவரும் தெரிந்து வைத்திருக்கும் கதை இது. அதைத்தான் அமைச்சர் ஆனந்த விஜேபால புதிதாய் வாசித்து இருந்தார்.

அந்த அறிவிப்போடு சத்தியாக்கிரகம் முடிவுக்கு வந்துவிட்டது.ஒரு கண்ணீர்ப் புகை செலவின்றி ஆட்களைக் காலி செய்துவிட்ட்டார்கள்.

சீ ஐ டி பணிப்பாளர் ஷானி அபேசகரவை தலைமை விசாரணைக் குழுவில் இருந்து அகற்றித் தனக்கு முறையான அறை ஒன்றைத் தரும் வரை உண்ணாவிரதம் தொடரும் என்றார் சாலே.

ஷானியின் வதை முகாமில் இருந்து சலே அகற்றப்படும் வரை தமது போராட்டம் தொடரும் என்றிருந்தார் விமல் வீரவன்ச.

கடைசியில் எதுவும் நடக்கவில்லை.

சலே பெப்ரவரி 25 முதல் தடுப்புக்காவலில் இருக்கிறார். முதல் மூன்று மாதங்களிலும் அவர் எந்த முறைப்பாடும் செய்யவில்லை.ஆனால் தன் ஆஸ்தான குரு ஜீ கோட்டாபயவிற்கு பயணத் தடை விதிக்கப்பட்ட பிறகுதான் அசாதாரண கோலங்களைக் காட்டினார். யாரோ வெள்ளை ஆடையில் வந்து தன்னைச் சித்திரவதை செய்வதாகக் கூறினார். உண்மையில் அது இறந்து போன ஆவிகளோ தெரியாது.

மேலும் சாப்பாடு சரி இல்லை என்றார். அறையில் எலி ஓடுது என்றார். சாப்பாட்டைத் துறந்தார்.

சலே மீது சித்திரவதை மேற்கொள்ளப்பட்டதா இல்லையா என்பதை ஆய்வு செய்ய ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட விசேட மனநல தடயவியல் மருத்துவ குழுவை கொழும்பு கோட்டை இன்று நீதவான் நீதிமன்றம் நியமித்துள்ளதாம்.

சலே தன் ஐ போன் மற்றும் லேப்டப்பின் பாஸ்வேர்டுகளை இதுவரை வழங்கவில்லை என்கிறது சீ ஐ டி. இதுவே எம்மைப் போன்ற சாமானியர்களாய் இருந்தால் என்ன ஆகி இருக்கும். ஆக, சலே மீது இன்னும் ஒரு கீறலும் விழவில்லை. ஆனால் சலே இற்கு எதிராக வழங்கப்பட்ட ரகசிய சாட்சியங்களால் தான் அவர் உண்மையைச் சொல்ல நொறுக்கப்பட்டு இருக்கிறார்.

உண்மையில் இலங்கையில் இதுவரை PTA எனப்படும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதான கைதிகளில் சுரேஷ் சாலே அளவிற்கு சூபர் லக்சரி கைதியாக யாருமே இருந்ததில்லை.மில்க் டொபி, ப்ரைட் ரைஸ், ப்ரெஷ் மில்க் எல்லாம் வழங்கப்பட்டதாகவும் சுரேஷ் சாலே ஆஸ்கார் நடிப்பை வெளிப்படுத்திக் கொண்டிருப்பதாகவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் கோட்டை நீதிமன்றத்தில் சொல்லி இருந்தார்.

சலே எப்படியும் தடுப்புக்காவலிற்குத்தான் செல்லவேண்டி இருக்கிறது.

அப்படி அல்லாமல்

ப்ரூனே சுல்தானின் மாளிகையில் இருக்கும் ஒரு அறையை உருவாக்கி அதில் இத்தாலி கட்டிலும் இங்கிலாந்து மெத்தையும் போட்டு மைசூர் சந்தனத்தில் மாலைப் பொழுதில் நீராடப் பிரம்மாண்டமான சரிகை வேலைப்பாடுகளுடன் ஒரு குளியலறையும் அமைத்து இடைக்கிடை ஒட்டகப் பால் அல்வாவும் காஷ்மீர் அப்பிளுமா கொடுக்க முடியும்.

Want your public figure to be the top-listed Public Figure in Colombo?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address


Colombo