Rameshwaran

Rameshwaran

Share

15/01/2026

மக்கள் வாழ்வில் மகிழ்ச்சி பொங்க தைப்பொங்கலை வரவேற்போம் !

உழவுத் தொழிலுக்கு காரணமாக இருக்கும் உழவர்களுக்கும் அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் காளைகளுக்கும், உலகுக்கு ஒளி கொடுக்கும் சூரிய பகவானுக்கும் நன்றி செலுத்தம் உன்னத தைப்பொங்கல் திருநாளில் மலையக மக்களின் வாழ்வில் மகிழ்ச்சி பொங்கவும், அவர்கள் பெற்றுக் கொண்ட உரிமைகள் நிலைக்கவும் பண்டிகையை மகிழ்ச்சியுடன் வரவேற்போம் .

கடந்த ஆண்டின் இறுதிப் பகுதியில் இயற்கையில் கோரத் தாண்டவத்தில் மக்கள் பட்ட வேதனைகளையும், ஏற்பட்ட இழப்புகளையும் மறக்கவும் ஈடு செய்யவும் முடியாது. இத்தகையை சூழ்நிலையில் மலர்ந்துள்ள புத்தாண்டில் முதலாவது பண்டிகையை வரவேற்கிறோம்.

தமிழர் பண்பாட்டில் செய்த உதவிக்கு நன்றி தெரிவிக்கும் பொங்கல் பண்டிகையில் வாசலில் கோலமிட்டு கரும்பு, தோரணம் கட்டி புதுப்பானையில் புத்தரிசி பொங்கலிட்டு சூரியனுக்கும், மாடுகளுக்கும் படைப்பதோடு உற்றார் உறவினர்கள், நண்பர்கள் சகிதம் மகிழ்ச்சியாகவும், நாம் கடந்த காலங்களில் எதிர்கொண்ட துன்பங்கள் நீங்கி, இன்பம் பெருகவும், மலையக மக்கள் மத்தியில் ஒற்றுமை நிலவவும் எல்லாம் வல்ல இறைவனின் அருள் கிடைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன் .

#மலையகம்

25/12/2025

துன்பங்கள் நீங்கி தூய ஆண்டு மலரட்டும்!

நாடு சுபிட்சமான ஏதிர்காலத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்த ஆண்டின் இறுதிப் பகுதியில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தம் சொல்லொணா துயரத்துக்கு எம்மை இட்டுச் சென்றுள்ளது. மலரும் புத்தாண்டில் அனைத்து துயரங்களும் நீங்கி மகிழ்ச்சி பொங்க கிறிஸ்மஸ், புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

அண்மையில் இயற்கை அனர்த்தம் ஏற்பட்ட போது நாட்டின் பல பகுதிகளிலும் மக்கள் பாதிப்பை எதிர்நோக்கியிருந்தார்கள். குறிப்பாக மலையக மக்கள் பல பிரதேசங்களில் வீடு வாசல், சொத்து சுகங்களை இழந்து சிரமங்களை மேற்கொண்டிருந்தார்கள். மாணவர்களின் கல்வியும் பாதிக்கப்பட்டிருந்தது. அவர்களுக்கான நிவாரணங்களை முடிந்தளவு வழங்கியிருந்தோம். எமது மகக்ளுக்கு காணி, வீட்டு உரிமைகளைப் பெற்றுக் கொடுக்க அரசாங்கத்தின் கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளதோடு, இந்திய அரசாங்கத்தின் வீடமைப்புத் திட்டத்தை துரிதமாக மேற்கொள்ளவும் வலியுறுத்தி வருகிறோம்.

மக்கள் வாழ்வு இயல்பு நிலைக்குத் திரும்பவும், கிறிஸ்மஸ் பண்டிகையைக் கொண்டாடும் மக்களுக்கு உலக இரட்சகர் யேசு பிரானின் பேரருள் கிட்டவும் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவிப்பதோடு, மலரும் புத்தாண்டு அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் ஆண்டாக மலர வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன் என்றும் குறிபிட்டுள்ளார்.

Want your public figure to be the top-listed Public Figure in Talawakele?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Address

No 04, South Meddecombura , Wattagoda
Talawakele