Adzen Marketing
21/02/2026
பாகிஸ்தான்-நியூசிலாந்து போட்டியை முன்னிட்டு விசேட போக்குவரத்து
ஐசிசி உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்று (21) நடைபெற உள்ள பாகிஸ்தான்-நியூசிலாந்து போட்டியை முன்னிட்டு, காவல்துறையினர் விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர்.
குறித்த போட்டி இன்றிரவு 07.00 மணிக்கு ஆரம்பமாகும்.
அதன்படி,
1) சங்கராஜ மாவத்தை மற்றும் சுமனதிசி மாவத்தை
2) வின்சன் பெரேரா மாவத்தை
3) பிரிட்டோ பாபா புல்லே பிரேதேசம், பன்சல வீதி, கெத்தாராம வீதி
4) செபஸ்டியன் எல வீதி
5) அடி சிய் வீதி
6) ஸ்ரீ போதிராஜா மாவத்தை
7) மாளிகாவத்தை சந்தி மற்றும் ஜும்மா மஸ்ஜித் வீதி
8) பிரதீபா மாவத்தை மற்றும் சத்தர்மா மாவத்தை ஆகிய பகுதிகளிலும் ஆர். பிரேமதாச மைதானத்திற்கு செல்லும் வீதிகளிலும் போக்குவரத்து தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
21/02/2026
தரம் 6 பாடப்புத்தக சர்ச்சை: சந்தேகநபர்களை உடனடியாக கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!
புதிய கல்வி சீர்திருத்தத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட 6 ஆம் தர ஆங்கிலப் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியில், மாணவர்களுக்குப் பொருத்தமற்ற இணையதள முகவரி சேர்க்கப்பட்டமை தொடர்பான வழக்கை விசாரித்த கங்கொடவில நீதவான் நீதிமன்றம், இது குறித்த விசாரணைகளை விரைவுபடுத்துமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
கங்கொடவில நீதவான் ருவன்திகா மாரசிங்க நேற்று (20) இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை உடனடியாகக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு அவர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினருக்கு பணிப்புரை வழங்கினார்.
தரம் 6 மாணவர்களுக்கான புதிய ஆங்கிலப் பாடத் தொகுப்பில், ஒரு பாடத்தின் கீழ் கொடுக்கப்பட்டிருந்த கியூஆர் குறியீடு அல்லது இணையதள இணைப்பு, ஆபாசமான அல்லது தகுதியற்ற உள்ளடக்கங்களைக் கொண்ட இணையதளத்திற்கு இட்டுச் செல்வதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில், அச்சு மற்றும் பாடத்திட்டத் தயாரிப்பில் ஈடுபட்ட அதிகாரிகளிடம் வாக்குமூலங்கள் பெறப்படவுள்ளன.
11/02/2026
விசேட தேவையுடையோருக்காக 10 புதிய நவீன பேருந்துகள்
விசேட தேவையுடையவர்கள், இலகுவாகப் பயன்படுத்தக்கூடிய வசதிகளுடன் கூடிய 10 புதிய நவீன பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
‘கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ள நிதியைப் பயன்படுத்தி இதற்கான முன்னோடித் திட்டமாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இதற்கமைய, 10 பேருந்துகளைக் கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் 15ஆம் திகதி குறித்த பேருந்துகள் நாட்டை வந்தடையவுள்ளன.
இந்த புதிய பேருந்துகளில் விசேட தேவையுடையோர் மற்றும் முதியவர்கள் இலகுவாக ஏறி இறங்கும் வசதிக்காக தாழ்வான மிதிபலகை மற்றும் முழுமையான குளிரூட்டப்பட்ட வசதி, டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
எனினும், இந்தப் பேருந்துகளை இயக்குவதற்கும் பராமரிப்பதற்கும்; தேவையான பௌதீக மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகளை வழங்க இலங்கை போக்குவரத்து சபைக்கு இயலுமை இல்லை என்பது தெரியவந்துள்ளது.
இந்தநிலையில், இலங்கை போக்குவரத்து சபையின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட லங்கா மெட்ரோ ட்ரான்சிட் என்ற தனியார் நிறுவனத்திடம் இந்த 10 பேருந்துகளையும் ஒப்படைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
11/02/2026
அகமதாபாத் - கொழும்பு நேரடி விமான சேவை: ஏப்ரல் மாதம் முதல் ஆரம்பம்
இந்தியாவின் அகமதாபாத் நகரிலிருந்து கொழும்புக்கு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ஊடாக நேரடி விமான சேவைகளை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாகச் சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
இவ்வருடம் ஏப்ரல் மாதம் முதல் இந்த விமான சேவைகளை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
"இவ்வருடம் ஏப்ரல் மாதம் முதல் குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்திலிருந்து கொழும்புக்கு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ஊடாக நேரடி விமான சேவையொன்றை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளோம். இதன் மூலம் இலங்கையிலுள்ள பக்தர்கள் குஜராத் சென்று வழிபாடுகளில் ஈடுபடுவதற்கான அரிய வாய்ப்புக் கிடைக்கும்" என்றார்.
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
Kandy
20000
Opening Hours
| Monday | 09:00 - 19:00 |
| Tuesday | 09:00 - 19:00 |
| Wednesday | 09:00 - 19:00 |
| Thursday | 09:00 - 19:00 |
| Friday | 09:00 - 19:00 |
| Saturday | 09:00 - 19:00 |
| Sunday | 09:00 - 19:00 |