Ceylon Times Network
23/05/2026
6 மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலைக் காரணமாக 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு முன்னெச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ளது.
இதற்கமைய, கேகாலை மாவட்டத்தின் தெரனியாகலை, ருவன்வெல்ல, தெஹியோவிட்ட மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தின் எஹலியகொட, குருவிட்ட, அயகம, இரத்தினபுரி ஆகிய பகுதிகளுக்கு வெளியேறுவதற்கான 'சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கொழும்பு மாவட்டத்தின் சீதாவக்க மற்றும் பாதுக்கை பகுதிகளுக்கும், கம்பஹா மாவட்டத்தின் அத்தனகல்ல பகுதிக்கும், களுத்துறை மாவட்டத்தின் புளத்சிங்கள, ஹொரணை, இங்கிரிய, பாலிந்தநுவர ஆகிய பகுதிகளுக்கும், கேகாலை மாவட்டத்தின் யட்டியாந்தோட்டை பகுதிக்கும், இரத்தினபுரி மாவட்டத்தின் பெல்மதுல்ல, கிரியெல்ல, எலபாத, கலவனை, நிவித்திகல ஆகிய பகுதிகளுக்கும் இரண்டாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கம்பஹா மாவட்டத்தில் மீரிகம மற்றும் திவுலபிட்டிய, களுத்துறை மாவட்டத்தில் அகலவத்த மற்றும் மத்துகம, கேகாலை மாவட்டத்தில் புலத்கொஹுபிட்டிய, நுவரெலியா மாவட்டத்தில் அம்பகமுவ ஆகிய பகுதிக்கும் முதலாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
23/05/2026
சர்வதேச போட்டிகளில் ஓய்வு பெற்ற அதிரடி ஆட்டநாயகனின் புதிய சாதனை
சௌதப்பிரிக்க வீரர் Heinrich Klaasen இந்த ஆண்டு Indian Premier League தொடரில் அபாரமான சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
நான்காவது இடம் அல்லது அதற்கு கீழ் பேட்டிங் செய்யும் வீரர்களில், ஒரே T20 தொடரில் 600 ஓட்டங்களை கடந்த முதல் வீரராக அவர் உருவெடுத்துள்ளார். மேலும், அவருக்கு இன்னும் மூன்று போட்டிகளில் விளையாடும் வாய்ப்பும் உள்ளது. இதன் மூலம் அவர் 1000 ஓட்டங்களை கடக்க கூடிய வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ள Rishabh Pant, 2018 IPL தொடரில் 579 ரன்களை 175.98 என்ற அதிரடி ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்திருந்தார்.
ஆனால் இந்த IPL தொடரில் Klaasenனின் முழு அதிரடி ஆட்டத்தை இன்னும் ரசிகர்கள் முழுமையாக காணவில்லை என்று சிலர் கருதுகின்றனர்.
இதற்கான முக்கிய காரணம், Klaasen மிகவும் சக்திவாய்ந்த மேல் வரிசை பேட்ஸ்மேன்களுக்கு பின்னர் களமிறங்குவதும், அனுபவமற்ற கீழ் வரிசை அணியினருக்கு முன் ஓவர்கள் முடியும் வரை விக்கெட் இழக்காமல் விளையாட வேண்டிய சூழலும் ஆகும்.
அவர் அணிக்குத் தேவையான நிலைத்து நின்று தன்மை மற்றும் குறைந்த பந்துகளில் அதிக ஓட்டங்களை வழங்கும் பொறுப்பை ஏற்றுள்ளார். அதை அவர் சிறப்பாக செய்து வருகிறார்.
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, கிளாசன் சற்று மந்தமான காலத்தை சந்தித்திருந்தார். ஆனால் IPL-இல் உயர்தர பயிற்சிகளும், புதிய பொறுப்பும் அவரை மீண்டும் பழைய அதிரடி ஆட்டத்துக்கு கொண்டு வந்துள்ளன.
குறிப்பாக Royal Challengers Bengaluru அணிக்கு எதிராக ஹைதராபாத்தில் நடைபெற்ற போட்டியில், கிளாசன் தனது பழைய அதிரடி ஆட்டத்தை ரசிகர்களுக்கு மீண்டும் காட்டினார். ஆரம்பத்தில் மெதுவாக விளையாடிய அவர், பின்னர் வெறும் 15 பந்துகளில் 46 ரன்கள் குவித்து போட்டியின் போக்கையே மாற்றினார்.
Josh Hazlewood வீசிய ஓவரில் அதிரடி காட்டி பந்துவீச்சாளரை திணறடித்தார் அதுமட்டுமில்லாமல் Josh Hazlewoodன் முழு T20 வாழ்க்கையிலேயே மிகவும் அதிக ரன்கள் விட்ட ஓவராக கிளாசன் அந்த ஓவரை மாற்றினார்
மேலும், Suyash Sharma வீசிய பந்தை பின்னங்காலில் நின்றபடியே extra cover திசையில் அடித்த சிக்ஸ், கிளாசனின் அபார சக்தியை வெளிப்படுத்தியது. இது அவரை உலகின் மிகவும் அச்சுறுத்தலான நடுப்பகுதி T20 பேட்ஸ்மேன்களில் ஒருவராக மீண்டும் நிரூபித்துள்ளது.
பிளேஆஃப் சுற்று தொடங்கும் நேரத்தில் கிளாசன் தனது உச்ச ஆட்டத்துக்கு திரும்பியிருப்பது, எதிரணி அணிகளுக்கு பெரிய எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது.
இவரின் அதிரடியால் sunrises அணியானது 55 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
Click here to claim your Sponsored Listing.