USF Media Network
01/01/2024
தேசிய இளைஞர் சேவைகள் மன்ற கிழக்கு மாகாணக் காரியாலயத்தின் 2024 ஆம் ஆண்டின் கடமைச் செயற்பாடுகளை ஆரம்பிக்கும் நிகழ்வு
--------------------------------------------------------------------------
2024 ஆம் ஆண்டின் கடமைச் செயற்பாடுகளை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை (01) தேசிய இளைஞர் சேவைகள் மன்ற கிழக்கு மாகாணக் காரியாலயமும் சாய்ந்தமருது இளைஞர் பயிற்சி நிலையமும் இணைந்து கிழக்கு மாகாணப் பணிப்பாளர் எச்.யூ.சுசந்த தலமையில் இடம்பெற்றது. இதன்போது கிழக்கு மாகாணப் பணிப்பாளர் தேசிய கொடியினை ஏற்றி நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார்.
அதனைத்தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன், நாட்டுக்காக உயிர் நீத்த முப்படடையினருக்காக இரண்டு நிமிட மௌனம் அனுஷ்ட்டிக்கப்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இதன்போது தேசிய இளைஞர் சேவைகள் மன்ற கிழக்கு மாகாணக் காரியால உத்தியோகத்தர்கள், சாய்ந்தமருது இளைஞர் பயிற்சி நிலைய உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் அரசாங்க சேவை சத்தியபிரமாண உறுதிமொழியினை எடுத்துக் கொண்டார்கள்
இங்கு உரையாற்றிய கிழக்கு மாகாணப் பணிப்பாளர் எச்.யூ.சுசந்த எங்களால் உறுதிகொள்ளப்பட்ட சாத்தியப்பிரமாணத்துக்கு அமைவாக எங்களது சேவையைப் பெறுவோர் பயனடைய வேண்டும் என்றும் அதற்காக நாங்கள் அனைவரும் தாங்கள் தங்களது கடமைகளை சரிவர ஆற்ற வேன்டும் என்றும் “வலுவான எதிர்காலத்துக்கான தொடக்கவுரை” என்ற கருப்பொருளை முன்னிறுத்தி நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை மெய்ப்படுத்தி மக்கள் மையப் பொருளாதாரமொன்றை உருவாக்குவதற்கு வினைத்திறன்மிக்க மனித வளத்தினைக் கொண்ட அரச சேவைகளை வழங்க அனைவரும் முன்வரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
Click here to claim your Sponsored Listing.