Be Positive
🚨 காசை பேங்கில போட்டு பூட்டி வைக்கிறியளோ? அப்ப நீங்க ஒரு பெரிய இளிச்சவாயன் தான்! 🚨
இப்படிச் சொன்னா எங்கட ஆக்களுக்கு வடிவாக் கோவம் வரும் எண்டு எனக்குத் தெரியும். இருந்தாலும் சொல்லித் தானே ஆகோணும்!
"காசைச் சேர்த்து வைக்கிறவை எல்லாம் லூசுகள்".
ஏன் எண்டு கேக்கிறியளோ? நீங்க காசைக் கையாளத் தெரியாதவை எண்டதால இல்ல. இந்த சிஸ்டமே உங்களை மாதிரி காசைச் சேர்த்து வைக்கிறவங்களை நசுக்கிற மாதிரித் தான் டிசைன் பண்ணப்பட்டிருக்கு.
கொஞ்சம் வடிவா விளங்கப்படுத்துறன், கேளுங்கோ... 👇
உங்கட உழைப்பில வந்த காசை கொண்டுபோய் பேங்கில போட்டதும் ஏதோ பெரிய உலகக் கோப்பையை வெண்ட மாதிரி ஒரு பெருமை வரும்! "சேமிப்பு", "பாதுகாப்பு", "எதிர்காலத் திட்டம்" எண்டு உங்களுக்கு நீங்களே பீலா விட்டுக்கொள்ள வேண்டியது.
எல்லாம் சுத்த ஹம்பக்! 🤦♂️
உண்மையில என்ன நடக்குது எண்டு தெரியுமோ?
நீங்க கொண்டு போய் பேங்கில காசைக் குடுத்த அடுத்த செக்கன்... அது உங்கட காசு இல்ல. அது பேங்க்காரண்ட சொத்து! உங்கட சேமிப்பைத் தான் அவனுகள் மூலதனமா வைச்சு வியாபாரம் செய்றானுகள்.
* உங்கட காசை எடுத்து மற்றவங்களுக்குக் கடனா குடுப்பானுகள்.
* பளுவான வட்டியைக் கறப்பானுகள்.
* இடையில வாற லாபம், காசுப் புழக்கம் எல்லாத்தையும் அவனுகள் அனுபவிப்பானுகள்.
உங்களுக்கு என்ன கிடைக்கும்?
பிச்சை போடுற மாதிரி ஒரு 2% இல்லாட்டி 3% வட்டி! அதுவும் இல்லை எண்டா வருசக் கடைசியில ஒரு கலண்டரும், ஒரு பிளாஸ்டிக் வாளியும்! 🤣
இன்னொரு பக்கம் "பணவீக்கம்" (விலைவாசி ஏறுறது) எண்டு ஒரு சைலண்ட் கில்லர் இருக்கு. அவன் வந்து வருசத்துக்கு 7%, 8% எண்டு உங்கட காசட பெறுமதியைக் கபளீகரம் பண்ணிடுவான். இது யூரோ டாலர் போன்ற கொஞ்சம் ஸ்ரோங்கான காசுகளிற்கு... இலைங்கை ரூபாய் அண்டால் 10% - 30% வரைக்கும் போகலாம்...
ஆகமொத்தம் பேங்க்காரன் கொழுத்துப்போவான். நீங்க மட்டும் அதே இடத்தில நின்னு செக்கு மாடு மாதிரி உழைச்சுக்கொண்டிருப்பீங்க.
அதான் இவ்வளவு காலமா நான் நிறைய இடங்கள்ள கத்திச் சொல்லுறது. காசு எண்டது வெறும் குப்பை எண்டு! அரசாங்கம் கண்டபடி காசை அச்சடிக்குது, காசுட மதிப்பு நாளுக்கு நாள் அதலபாதாளத்துக்குப் போகுது. உங்கட சேமிப்புக்கு எந்தப் பெறுமதியும் இல்லாமப் போகுது. பேங்க்காரன் மட்டும் உங்கட காசில பிசினஸ் பண்ணி மப்பில திரியிறான். இதுக்க ஏமாற்று இன்வெஸ்ட்மெண்ட் இன்சுரன்ஸ் பேர்வழியள் வேற..... சொல்லி வேலை இல்லை மோனே....
அப்ப இந்த பணக்காரங்கள் மட்டும் எப்படி மேலும் மேலும் பணக்காரங்கள் ஆகுறாங்கள்?
அவனுகள் உங்கட மாதிரி காசை பேங்கில போட்டு முடக்கி வைக்கிறேல்ல. காசுக்கு பதிலா இதையெல்லாம் வாங்குவாங்கள்.
* 🏠 காணி, பூமி, வீடுகள் (Real Estate)
* 🥇 தங்கம், வெள்ளி
* 🏢 பிசினஸ்
* 💰 கவர்ன்மென்டால அச்சடிக்க ஏலாத சாமான் எதுவோ, அது எல்லாத்தையும் வாங்கிப் போடுவாங்கள். கண்டியளோ??
ஏனெண்டா பணக்காரங்களுக்கு ஒரு சின்ன உண்மை தெரியும். காசைப் பாவிக்கிறவனைத் தேடித் தான் காசு ஓடி வரும்! சும்மா பெட்டிக்குள்ள பூட்டி வைக்கிறவனுக்கு வராது.
நீங்களும் இந்த எலிப் பொறியில இருந்து (Rat race) தப்ப வேணும் எண்டா, தயவுசெய்து இந்த நடுத்தர வர்க்கத்து புத்தியைக் கொஞ்சம் ஓரமா வைச்சிட்டு, முதலாளி மாதிரி யோசிக்கப் பழகுங்கோ!
பேங்கில காசைக் குவிக்கிறதை விட்டிட்டு, காசு தரக்கூடிய சொத்துக்களைச் சேருங்கோ.
காசைப் பெருக்கப் போறியளோ? இல்லாட்டி உங்கட காசை வைச்சு பேங்க்காரனைப் பணக்காரன் ஆக்கப் போறியளோ? நீங்களே முடிவு பண்ணுங்கோ! 😉
வங்கி நண்பர்கள் என்னுடன் கோவித்து மல்லுக்கட்ட வேண்டாம்.
🤷🏻♂️🤷🏻♂️🤷🏻♂️
17/01/2026
உலகப் புகழ்பெற்ற இந்தப் படத்தை எடுத்த கெவின் கார்ட்டர் தற்கொலை செய்து கொண்டது ஏன்?
கெவின் கார்ட்டர் உலக புகழ்பெற்ற
புகைப்படக்காரர். எல்லா சிறந்த புகைப்படக்காரர்களை போன்றே இவருக்கும் நல்ல புகைப் படங்களை எடுக்க வேண்டுமென்ற ஆசையும் ஆர்வமும் இருந்தன. இந்த ஆர்வம் அவரை நாடு, நகரம், கிராமம், காடு, மலை என்று கொண்டு சென்றது.
1993 இல் இந்த ஆர்வம் அவரைத் தனது சக புகைப்படப் பத்திரிக்கையாளர்களுடன்
சூடானுக்குக் கொண்டு சென்றது. அப்போது சூடான் வரலாறு காணாத பஞ்சத்தில் சிக்கித் தவித்துக் கொண்டு இருந்தது. குறிப்பாக சூடானின் தென்பகுதி மக்கள் உண்ண உணவின்றி, பருகநீரின்றி பசி, தாகத்தில் தவித்துக் கொண்டிருந்தனர். பசி பஞ்சத்தில் தவிக்கும் மக்களின் நிலைகளைக் காமிராவில் பதிவு செய்ய கெவின் தொலைதூர கிராமங்கள் வரை சென்றார். இறுதியாக அவர் முயற்சி கைகூடியது. ஒரு நாள் தன் காமிராவை தோளில் தொங்க விட்டுக் கொண்டு உள்ளத்தை உலுக்கக் கூடிய படத்துக்கான காட்சியைத் தேடியலைந்து கொண்டிருந்தபோது அப்படிப்பட்ட காட்சி தென்பட்டது.
பசி பஞ்சத்தால் அடிபட்ட நோஞ்சான் நிலையில் உள்ள ஒரு சிறுமி நடக்கக் கூட இயலாத நிலையில், எலும்புக் கூடு போன்ற தன்னுடலை தவழ்ந்து இழுத்துக் கொண்டு மெல்ல மெல்ல
ஊர்ந்து செல்வதைக் கண்டார்.
அந்தச் சிறுமி ஐக்கிய நாடுகளின் சபையின் சார்பாக அமைக்கப்பட்டு இருந்த உணவு வழங்கும் முகாமை நோக்கி தள்ளாடியபடி தவழ்ந்து கொண்டிருந்தது உண்மையிலேயே இதயத்தைப் பிழியக் கூடியதாக இருந்தது. தோளில் இருந்து காமிராவை இறக்கி கோணம் பார்த்த கெவினுக்கு இன்னொரு வியப்பும் காத்திருந்தது.
ஆம்; அந்த எலும்பும் தோலுமான சிறுமிக்கும்ப் பின்னாலேயே சிறிது தொலைவில் ஒரு பிணம் தின்னிக்கழுகும் சிறுமியின் மீது பார்வையை நிலை நிறுத்திக் கொண்டு இருந்தது. எப்போது சிறுமியின் உடலை விட்டு உயிர்
பிரியும்; மீதியுள்ள அந்தத் தோலையும் அதைச்சுற்றி இருக்கும் சிறிது மாமிசத்தையும் எப்போது சாப்பிடலாம் எனக் காத்திருந்தது பிணம் தின்னிக்கழுகு.
கெவின் கேமரா லென்சை கண்ணுக்கு ஒத்திக் கொண்டார்; சிறுமியையும் கழுகையும் ஒரே பிரேமில் அடக்கிக் கொண்டு ‘க்ளிக்’ செய்தார். இப்போது அவரது புகைப்படக்கருவியில் மிக அரிதினும் அரிதான படம் பதிவாகி விட்டது. இதை விற்றால் நல்ல விலை கிடைக்கும் என்ற மகிழ்ச்சியில் காமிராவைத் தோளில் மாட்டிக் கொண்டு தனது வண்டியை ஸ்டார்ட் செய்தார்; பறந்து விட்டார். இந்த அரிதான படத்தை ‘நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிக்கைக்கு விற்று
விட்டார்.
இந்தப் புகைப்படம் 1993 மார்ச் திங்கள் 26 ஆம் நாள் காலை நாளிதழில் முதல் பக்கத்தில் வெளியானது. இந்தப் படத்தைப் பார்த்ததும் ஆயிரக்கணக்கான வாசகர்கள் பத்திரிக்கை அலுவலகத்திற்கு தொலைப்பேசி மூலம் தொடர்புக் கொண்டனர்.
அனைவரும் ஒரே கேள்வியைத்தான் கேட்டனர். புகைப்படத்தில் உள்ள சிறுமி என்ன ஆனாள்? அவள் உயிருடன் பிழைத்தாளா அல்லது இறந்து விட்டாளா? இந்தக் கேள்விக்கான பதில் பத்திரிக்கையின் தொலைப் பேசி ஆப்ரேட்டரிடமோ படத்தை எடுத்த கெவின் கார்ட்டர்டமோ இல்லை.
1994,மே 23 அன்று பெரும் கை தட்டல்களுக்கு இடையே கெவின் கார்ட்டர் கொலம்பியப் பல்கலைக்கழகத்தின் பிரமாண்டமான அரங்கத்தில் இந்த அரிதான புகைப்படத்திற்கான புலிட்சர் விருதப் பெற்றுக்கொண்டார் இந்த விருது புகைப்படத் துறையில் நோபல் விருதுக்கு இணையானது.
விருது பெற்ற சில நாட்களுக்குப்பின் கெவின் பெரும் மன உளைச்சலுக்கு ஆளானார். கெவினுக்கும் அங்கு இருந்த பிணம்தின்னிக் கழுகுக்கும் என்ன வேற்றுமை? இரண்டும் ஒரே விதமாகத்தான் செயல்பட்டுள்ளனர்.
‘குறைந்தபட்சம் புகைப்பட நிபுணர் கெவின் அந்த சிறுமிக்கு ஒரு வாய் தண்ணீர் தந்து உயிரைக் காப்பாற்றி இருக்கலாம்; அல்லது தனது வலுவான கைகளினால் அந்தச் சிறுமியைத் தூக்கிச் சென்று உணவளிக்கும் அமைப்பு அலுவலகத்தின் வாயிலிலாவது சேர்த்து இருக்கலாம்; கல்லெடுத்து வீசி அந்தக் கழுகையாவது விரட்டி இருக்கலாம்; ஆனால் இவற்றில் எதையும் செய்யாமல் வெறும் ஒரு படத்தை எடுத்தார்; அதை அதிக விலை தந்த பத்திரிக்கைக்கு விற்று விட்டார் என்று ஒருவர் அவர் மீது குற்றம் சாட்டியதுதான் காரணம்.
இரண்டு மாதங்களுக்குப் பின் கடற்கரைக்கு அருகில் அவரது கார் நின்று கொண்டிருந்தது. அதில் அவர் பிணமாகக் கிடந்தார். கெவின் தற்கொலை செய்துகொண்டார். அவரது பிணத்திற்கு அருகில் காவல்துறைக்கு ஒரு கடிதம் கிடைத்தது. அதில் சில வரிகளே இருந்தன.
முதல் வரி I am Really, Really Sorry...
நாம் எவராக இருந்தாலும்
சரி, நம்மிடம் மனிதம் இல்லையெனில்
நாமும் மிருகத்திற்கே
ஒப்பாவோம்...
Click here to claim your Sponsored Listing.