Malaikuruvi
09/06/2026
பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் ஏற்பாட்டில் பெருந்தோட்டப் பாடசாலைகள் அபிவிருத்தி குறித்து பிரதமர் ஹரிணி அமரசூரிய,அமைச்சர் சமந்த வித்யாரத்ன,
பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன, மஹிந்தஜயசிங்க ஆகியோரின் தலைமையில் விசேட கலந்துரையாடல் பாராளுமன்றக் கட்டடத்தில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் பெருந்தோட்டப் பாடசாலைகள் எதிர்நோக்கும் முக்கியப் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகளைப் பெறுவது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.
தோட்டப் பாடசாலை ஒவ்வொன்றுக்கும் குறைந்தபட்சம் 2 ஏக்கர் காணியை சட்டபூர்வமாக ஒதுக்குது தொடர்பாகவும் தித்துவா பேரிடரினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளுக்கு உடனடி; தற்காலிக;நிரந்தரக் கட்டட நிர்மாண தீர்வுகளை விரைவாக வழங்குவது தொடர்பாகவும் அனைத்து மாவட்டங்களிலும், விஞ்ஞான ஆய்வகம், கணினிக் கூடம், நூலகம்,விளையாட்டுப் பிரிவைக் கொண்ட முழுமையான வசதிகளுடைய தமிழ் மொழி மூல 1AB மாதிரி பாடசாலைகளை உருவாக்குவது தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
09/06/2026
அமெரிக்காவில் தனித்திறன் கொண்ட வெளிநாட்டு பணியாளர்களுக்கான புதிய ஹெச்-1பீ விசாக்களுக்கு அதிபர் டிரம்ப் விதித்த 100,000 டொலர் கட்டணத்தை சட்டவிரோதமானது எனக் கூறி அமெரிக்க நீதிமன்றம் இரத்துச் செய்து உத்தரவிட்டுள்ளது.
ஹெச் 1-பி விசாக்களுக்கான கட்டணத்தைப் பெருமளவில் டிரம்ப் உயர்த்தியதை எதிர்த்து, ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த 20 தலைமை வழக்கறிஞர்கள் வழக்கு தொடர்ந்திருந்த நிலையில் அதற்கான தீர்ப்பை நீதிமன்றம் இன்று வழங்கியது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்தாண்டு செப்டம்பரில் இந்தக் கட்டணத்தை அறிவித்தார். இது சட்டவிரோதமான வரி என்றும் வரிகளை நிர்ணயிக்கும் நாடாளுமன்றத்தின் உரிமையை இது பறிப்பதாகவும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
"விசா வழங்க வசூலிக்கப்படும் கட்டணம் எந்தப் பெயரில் அழைக்கப்பட்டாலும், அந்தக் கட்டணத்தின் தன்மை அது ஒரு வரி என்பதையே காட்டுகின்றது" என்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி சொரோகின் குறிப்பிட்டார்.
08/06/2026
நல்லதண்ணி - ரக்காடு கிராமப் பகுதியில் தொடர்_மழையால் மரம் முறிந்து வீழ்ந்ததில் குடியிருப்பு முற்றாக சேதம்!
மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட ரிக்காடன் பகுதியில் பாரிய மரம் ஒன்று குடியிருப்பு ஒன்றின் மீது வீழ்ந்ததில் முற்றாக சேதமடைந்துள்ளது.
சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. தொடர் மழையால் வீட்டின் அருகில் இருந்த மரம் வேரோடு சாய்ந்து வீட்டின் மேல் வீழ்ந்துள்ளது. இதனால் வீட்டின் கூரை, சுவர்கள்,வீட்டு உபகரணங்கள் பலத்த சேதமடைந்துள்ளன. வீட்டில் இருந்தவர்களுக்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்படவில்லை.
மஸ்கெலியா நிருபர் செ. தி. பெருமாள்
08/06/2026
குத்துச்சண்டை போட்டியில் கொட்டகலை கேம்பிரிட்ஜ் மாணவர்களின் மற்றுமொரு சாதனை!
மத்திய மாகாண கல்வித் திணைக்களம் வருடாந்தம் நடத்தும் குத்துச்சண்டை போட்டி இம்முறை கண்டி சில்வெஸ்டர் கல்லூரியில் கடந்த ஜூன் 03 ஆம் திகதி முதல் 07 ஆம் திகதி வரை நடைபெற்றது.
இதில் கொட்டகலை கேம்பிரிட்ஜ் கல்லூரி சார்பாக மாணவர்கள் நால்வர் பங்குபற்றினர். அவர்களில் ஆர்.கிந்துஜன்,என்.செக்கினா ஆகிய மாணவர்கள் வெண்கல்ப் பதக்கங்களை சுவீகரித்தனர்.
வை.தன்யசிறி என்ற மாணவி வெள்ளிப்பதக்கத்தைச் சுவீகரித்துப் பாடசாலைக்குப் பெருமை சேர்த்துள்ளார்.
இவர்களுக்கான பயிற்சியைக் குத்துச்சண்டை பயிற்சியாளர் ஆசிரியர் செபஸ்டியன் வழங்கியுள்ளார். இப்போட்டியில் மத்திய மாகாணத்தில் உள்ள சுமார் 52 பிரபலமான பாடசாலைகள் பங்குபற்றிமை குறிப்பிடத்தக்கது.
Click here to claim your Sponsored Listing.