C.N.N News
24/05/2023
கொழும்பில் வீட்டுரிமையாளர்கள் தமது சொந்த வீடுகளை வாடகைக்கு விடும் போது மிக அவதானமாக இருத்தல் வேண்டும். ...உங்களது வீட்டில் வாடகைக்கு குடியமர்த்தப்பட்டவர்கள் அந்த வீட்டில் என்ன செய்கின்றார்கள்,? அவர் குடியிருக்கின்றார்களா ?அல்லது வேறு கெட்ட செயல்கள்,. குற்றங்களுக்கு வீட்டினை பாவிக்கின்றார்களா என்பதனை அவதானியுங்கள்.....
கடந்த வாரம் நான் வசிக்கும் வீதியில் நடைபெற்ற சம்பவம் ........போர முஸ்லிம் பென் ஒருவர் தான் குடியிருந்த வீட்டினை வாடகைக்கு விடப்படும் என இக்காம் டொட் எல்.கே யில் விளம்பரப்படுத்தியிருந்தார் அதனை வீட்டு புரோக்கர்கள கூடுதல் வாடகை பெற்றுத் தருகின்றேன் என கூறி மாதம் 60 ஆயிரம் ருபாவுக்கு வாடகை கொடுத்து விட்டார். அந்த போரா பெண் யாழ்ப்பாணத்தில் ஒரு வீட்டை வாடகை எடுத்துக் கொண்டு அங்கு சென்று விட்டார். ஆனால் அந்த வீட்டில் வாடகை குடியிருப்பாளர்கள் பெரும்பான்மையினர் ஒருவரே எடுத்துள்ளார். அந்த வீட்டில் மாஜாஜ் சென்டர் வேறு விடயங்கள் நடைபெறுவதாக அக்கம் பக்கம் குடியிருந்த பெரும்பான்மையினர் இரகசியமாக பொலிஸூக்கு அறிவித்துவிட்டார்கள். .....உடன் பொலிஸார் அவ் வீட்டினை சோதனை செய்தார்கள் அங்கு இளம் பெண்கள், ஒரு இளைஞன் நிற்பதனைக் கண்டார்கள் ஆனால் நாங்கள் ஆயுல்வேத வைத்தியம் என்ற சான்றிதழ் உள்ளது என பதிவுச் சான்றிதழைக் காட்டியதும் பொலிஸார் எங்களால் ஒன்றும் செய்ய முடியாது ஆனால் அயல் வீட்டார்கள் வந்து ஒ.ஜ.சி.யிடம் முறைப்பாடு ஒன்றினைச் பதிவு செய்தால் வீட்டு உரிமையாளரை அழைத்து நாங்கள் இதனை தடுக்க முடியும் என்றார் அங்கு பொலிஸ் அதிகாரி.
நான் உடன் மற்றும் ஒரு போர வீடு எங்களது வீட்டு அருகில் இருந்தது. அவரின் கதவைத் தட்டி வீட்டு உரிமையளாரின் உரிய தொலைபேசியை எடுத்து வீட்டுச் சொந்தக்காரர் யாழ்பாணத்தில் இருந்து மீள அழைத்து சம்பவத்தினைத் தெரிவித்து அவர்களது முற்பணத்தினை கொடுத்து வீட்டினை மீளப் பெருங்கள் எனக் கூறி அதனை தடுத்து நிறுத்தினோம். ..ஆகவே தான் வீடுகளை கூடுதல் வாடகைக்கு கொடுக்கும்போது ஒர் சட்டத்தரனி ஊடாக 1 வருடம் 2 வருடம் எழுத்து மூலம் குடியிருப்புக்கு மட்டும் என எழுதி அந்த ஒப்பந்தத்தினை கச்சேரியில் பதிந்து கொடுங்கள் .......
சில வீடுகளில் குற்றச் செல்கள்,நடைபெறுகின்றன.
இதே போன்று தான் எனக்கு தெரிந்த ஒரு வீடு வாடகைக்கு 2 மாடி வீடு வழங்கப்பட்டது. அந்த வீட்டினைப் பயன்படுத்தி வாடகையாளர் வெளிநாட்டு முகவர் ஏஜென்சியை அவ் வாடகை வீட்டின் முகவரியில் பதிந்துள்ளார் அதன் பின் கனடா அனுப்பவது எனச் சொல்லி அந்த வாடகை வீட்டில் வைத்து நிறையப் பேரிடம் பணங்களை வாங்கிவிட்டு குடும்பத்துடன் ஏஜென்சி நடத்தியவர் வெளிநாட்டுக்கு ஓடிவிட்டார்கள்.
பணம் கொடுத்த இளைஞர் யுவதிகள் இந்த வீட்டில் வைத்தே நாங்கள் பணம் கொடுத்தோம். எனச் சொல்லி பொலிஸில் முறையிட்டு அந்த வீட்டினை சீல் பன்னி வைக்கப்பட்டுள்ளது. நீதிமன்றில் வழக்கு ஒன்றும் பதியப்பட்டு உள்ளது வீட்டு உரிமையாளர் வீட்டினை மீளப் பெற்றுக் கொள்வதற்காக சட்டத்தரனி ஊடாக நீதிமன்றில் வழக்காடி வருகின்றார்
https://www.facebook.com/profile.php?id=100092498982687&mibextid=ZbWKwL
C.N.N News
C.N.N News CEYLON NATIONAL NETWORK NEWS
21/05/2023
Chennai High Court former judge Akbar Ali - meeting Sri Lanka Muslim Media Forum Chairperson and members 20.05.2023 at Marina Beach Colombo 3
இந்தியா சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதியரசர் ஜி.எம். அக்பல் அலி குடும்பத்துடன் இலங்கை வருகை தந்திருந்தார் அவரை ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவி புர்ஹான் பீபி இப்திக்கார் தலைமையில் இன்று 20.05.2023, கொள்ளுப்பிட்டி மெரைன் பீச் ஹோட்டலில் வைத்து சந்தித்தனர்.
இச் சந்திப்பில் சிரேஸ்ட ஊடகவிலாளர் எம்.ஏ.எம் நிலாம், ஊடகவியலாளர்கள். சாதிக் சிகான், ஜெம்சித் உட்பட நானும் கலந்துகொண்டோம். அத்துடன் இநிதிய மற்றும் அவரது நீதித்துறை தீர்ப்புகள், அவரது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
அத்துடன் நீதிபதியின் புதல்வர் அக்கீல் அஹமட் சென்னை உயர் நீதிமன்ற சட்டத்தரணியும் சந்திக்க கிடைத்தது.
Click here to claim your Sponsored Listing.
Contact the business
Telephone
Website
Address
Colombo