MR Media Vision
29/01/2026
வலுவூட்டல் வேலைத்திட்டம் 2025
================================
சமூர்த்தி திணைக்களத்தினால் இனங்காணப்பட்ட சாய்ந்தமருது பிரதேச செயலகத்திற்குட்பட்ட 2025 ஆம் ஆண்டுக்கான சமூர்த்தி பயனாளிகளுக்கு வாழ்வாதார உபகரணங்கள் இன்றைய தினம் 29.01.2026 அம்பாரை மாவட்ட கரையோர பிரதேச அபிவிருத்தி குழுத் தலைவரும் அரசியலமைப்பு பேரவை உறுப்பினரும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர், சமூர்த்தி உத்தியோகத்தர்கள், பிராஜாசக்தி தவிசாளார்கள், பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
07/12/2025
சீரற்ற காலநிலை காரணமாக பாதிப்புக்குள்ளான மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கத்துடன், மியான்மர் அரசின் தூதரக குழுவொன்றுடன் உதவி பொருட்கள் கொண்ட அந்த நாட்டின் வான்படை (Y–8) விமானம் நேற்று (06) இரவு கட்டுநாயக்க விமானப்படை தளத்துக்கு வந்துள்ளது.
இந்த நிவாரணப் பொதியில் சுகாதாரப் பொருட்கள், மருத்துவ உதவி பொருட்கள் மற்றும் பல்வேறு அத்தியாவசிய பொருட்களும் அடங்கியுள்ளன. இதனைத் தொடர்ந்து, எதிர்வரும் நாட்களில் 500 மெட்ரிக் தொன் அரிசி மற்றும் அமெரிக்க டொலர் 1 மில்லியன் (10 லட்சம்) மதிப்பிலான நிதி உதவியையும் இலங்கைக்கு வழங்க மியான்மர் அரசு சம்மதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
MR Media Vision
Click here to claim your Sponsored Listing.