Mathemurasu
08/12/2025
சத்துருக்கொண்டான் மக்களுக்கு நிவாரணம் வழங்கிவைப்பு!
கிழக்கு மாகாணத்தில் அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உரிய நிவாரண நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதே வேலை மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சத்துருக்கொண்டான் பொது மக்களுக்கான நிவாரணம் வழங்கும் நிகழ்வு சர்வோதயத்தில் அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்றது
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 96 குடும்பங்களுக்கு நிவாரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன
08/12/2025
சம்மாந்துறை கல்வி வலயத்தினர் நிவாரணப்பொருள்கள் சேகரிப்பு
தித்வா புயலின் தாக்கத்தினால் நாட்டில் ஏற்பட்ட பேரழிவில் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு உதவிக்கரம் நீட்டும் நோக்கில் கிழக்குமாகாணக் கல்வித்திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கமைய நிவாரணணப் பொருள்கள் சேகரிக்கப்படுகின்றன.
சம்மாந்துறை கல்விவலயத்தின் ஏற்பாட்டில் வலயக்கல்விப்பணிப்பாளர் எஸ்.மகேந்திரகுமார் வழிகாட்டலில் பாடசாலைகளில் சேகரிக்கப்பட்ட பொருள்கள் ; அதிபர்களால் 8 ஆம் திகதி திங்கட்கிழமை வலயக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டன.
Click here to claim your Sponsored Listing.