All Ceylon Sufi Spiritual Association
20/03/2026
20/03/2026
ஜனாஸா அறிவித்தல்.
திக்குவல்லையை பிறப்பிடமாகவும், கொழும்பு புதுக்கடையை வசிப்பிடமாகவும் கொண்ட,
அகில இலங்கை ஸூபிஸ ஆன்மீகப் பேரவையின் புதுக்கடை கிளை தலைவரும் மஸ்ஜிதுல் முஜாஹிதீன் பள்ளிவாசலின் நிறுவனருமான மௌலவி ரிஸ்மி (பாரி) அவர்கள் இறைவனடி சேர்ந்தார்கள். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அவர்கள் மல்வானை வடுவேகமயைச் சேர்ந்த மர்ஹும் ரீஸா மற்றும் திக்குவல்லையை சேர்ந்த மர்ஹூமா நூருல்ழுஹா அவர்களின் அன்பு மகனும், பாத்திமா அஸீமா அவர்களின் அன்பு கணவரும், உமாமா, உக்காஷா, ஹாஜரா ஆகியோரின் அன்புத் தந்தையும் இப்ராஹிம் அவர்களின் மாமனாரும் ஆவார்கள்.
அவர்களின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் அஸர் தொழுகைக்குப் பின்னால் மாளிகாவத்தை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். என்பதையும் அறியத் தருகின்றோம்.
அவரின் ஒரு குறிப்பிட்ட சேவைகளை நினைவுபடுத்துகின்றோம்.
கொழும்பு பகுதியில் அதிகமான மாணவர்களுக்கு புனித குர்ஆனை கற்றுக் கொடுத்தவர்.
20 வருடங்களுக்கு மேலாக ஊதியத்தை எதிர்பார்க்காமல் ஜனாஸாக்களை குளிப்பாட்டி அவற்றை நல்லடக்கம் செய்யும் வரை உள்ள கடமைகளை சேவையாய் செய்தவர்.
வீடுகளிலே குர்ஆனை கற்றுக் கொடுத்தவர். மௌலூது மஜ்லிஸ்களை சிறப்பித்தவர்.
இவருடைய சேவைகளை இறைவன் பொருந்திக் கொண்டு அவர்களுக்கு இறை பொருத்தத்தையும் ஈடேற்றத்தையும் உயர் பதவிகளையும் வழங்குவானாக.
Click here to claim your Sponsored Listing.
Website
Address
Colombo