Venkatesan
27/05/2026
ஜடா ஸ்கடர் அவர்களின் 66வது நினைவுநாள் 24.05.2026 அன்று
மகளிருக்கான முதல் மருத்துவமனை!
ஒரு மருத்துவச்சுடரின் மகத்தான சரிதம்:
அவள் பெயர் ஐடா ஸ்கேடர், அமெரிக்க பெண்மணி. அவளின் அப்பாவும் அம்மாவும் மிஷனரி மருத்துவர்கள்.
அக்காலத்தில் இந்தியர்களின் அடித்தட்டு மக்களுக்கு சேவை செய்வதற்காக வந்தவர்கள். அவர்களோடு 14 வயது நிரம்பிய ஐடாவும் இந்தியா வந்தாள். வந்த இரு மாதங்களில் அவள் அன்னை அமெரிக்கா திரும்பிவிட்டார்.
தந்தையுடன் வேலூரில் விடுமுறையைக் கழித்துகொண்டிருந்தாள் அந்த சிறுமி. அச்சமயத்தில் நடந்த இரண்டு சம்பவங்கள் அவளைப் புரட்டிப் போட்டன.
என்ன சம்பவங்கள் ?
ஒரு நள்ளிரவில் அவரகள் வீட்டுக் கதவைத் தட்டுகின்றான் ஒரு பிராமணன். அவன் கண்கள் டாக்டரம்மாவைத் தேடுகின்றன. ஐடாவின் தகப்பனார் "என்ன" என்கின்றார்? "என் மனைவிக்குப் பிரசவம். டாக்டரம்மாவை அனுப்ப முடியுமா?"
"இல்லை ..அவள் அமெரிக்கா சென்றுவிட்டாள. நான் வரட்டுமா ?" என்கின்றார் அவர்.
"இல்லை அய்யா, எங்கள் சமூகத்தில் பெண்தான் பிரசவம் பார்க்க வேண்டும் . கட்டுப்பாடு அது. என்னால் மீற முடியாது "என கண்களைத் துடைத்துகொண்டே செல்கின்றார்.
மறுநாள் அந்த கர்ப்பிணியின் இறந்த உடலை ஐடாவின் வீட்டின் முன்னால் எடுத்துச் செல்கின்றார்கள். குற்ற உணர்வினால் அத் தந்தை அழ, தன்னையும் அறியாமல் ஐடாவும் அழுகின்றாள்.
இரு நாட்கள் கழித்து ஓர் இஸ்லாமியருக்கு அதே தேவை. ஆனால் அதே கட்டுப்பாடு. டாக்டரம்மா இல்லாததால் கண்களைத் துடைத்துக் கொண்டு வெளியேறுகி்றார் அந்த இஸ்லாமியக் கணவர்.
மறுநாள் அதே ஊர்வலம்.
மனதால் வெடித்து அழுதாள் ஐடா, 'என்ன தேசமிது? பெண்களைப் படிக்க வைக்கவும் மாட்டார்களாம், ஆனால் பெண்ணுக்குப் பெண்தான் பிரசவம் பார்க்க வேண்டுமாம் . கொடுமை ! '.
இதற்கு ஒரு தீர்வு கண்டாக வேண்டுமென்று அவளுக்குத் தோன்றியது.
நிச்சயம் இங்கு மகளிரைப் படிக்க வைக்க முடியாது, நாமே டாக்டராகி இவர்களோடு தங்கிவிட்டால்?
அந்த வைராக்கியம் அன்றே வந்தது, அமெரிக்கா சென்று படித்து டாக்டரனாள், பெரும் வேலைவாய்ப்பு வந்தாலும் அவள் கண்களில் அந்த இரு ஊர்வலங்களும் வந்து அவள் வைராக்கியத்தை அதிகரித்துகொண்டே இருந்தன.
திரும்பி அதே வேலூருக்கு வந்தாள். இனி ஒரு கர்ப்பிணியினை சாக விடமாட்டேன் என்று சொல்லி ஒரு மருத்துவனையைத் தொடங்கினாள்.
இந்தியாவில் மகளிருக்கான முதல் மருத்துமனையாக அதுதான் உதித்தது.
பெண்கள் தயக்கமின்றி அவளிடம் சிகிச்சைக்கு வந்தனர். எந்த மதக் கட்டுப்பாடுகளும் அதற்குத் தடையாக இல்லை.
இந்நாட்டுப் பெண்களைப் படிக்கவிடவில்லை என்றால் என்ன, நான் படித்து வந்து இப்பெண்களைக் காப்பாற்றுவேன் என சூளுரைத்து அதை செய்தும் காட்டினாள் .
அவள் பெண்ணுரிமை பேசவில்லை, கொடி பிடிக்கவில்லை, புரட்சி செய்யவில்லை மாறாக தன்னால் அந்தக்கால யதார்த்த வாழ்விற்கு எதைச் செய்ய முடியுமோ அதை செய்தாள்
அதற்கு அவள் கொடுத்த விலை அவளின் சொகுசான வாழ்வு.
நிச்சயம் தனி ஆளாகத்தான் போராடினாள், பின்பே பல சேவை மருத்துவர்கள் அவரோடு இணைந்தனர்.
அவள் தனியே ஏற்றிய மெழுகுவர்த்திதான் இன்று மிகப் பிரகாசமாக ஒளி வீசிக் கொண்டிருக்கிறது -
வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியாக !
உலகின் மிகத் தரமான மருத்துவமனை என அதற்கு இன்றும் பெயர் !
ஏராளமான மருத்துவ மனைகள் இன்று வந்துவிட்ட போதிலும் , இப்போதும் மிகப் பெரியதும், சேவை மனப்பான்மையோடு மிகத் தரமான சிகிச்சை கொடுப்பதும் வேலூர் சிஎம்சி மருத்துவமனையே !
ஐடா யார்? அவருக்கும் இம் மக்களுக்கும் என்ன சம்பந்தம்?
நம் மக்களுக்காக அழுதிருக்கிறார், நம் மக்களின் சாவினைத் தடுக்க டாக்டராகி வந்து இங்கு தன் வாழ்வினை அர்ப்பணித்திருக்கிறார்.
அந்த வணங்கத் தக்க பெண்மணியின் உழைப்பில் உருவான அந்த மருத்துவமனைதான் இன்று 100 ஆம் ஆண்டு விழாவினைக் கொண்டாடுகின்றது !
இந்த நல்ல தருணத்தில் ஐடா என்ற அந்த மகத்தான மருத்துவச் சுடருக்கு நாமும் நமது இதய பூர்வமான அஞ்சலிகளைச் செலுத்துவோம்
Source
திருநெல்வேலி கிறிஸ்தவ வரலாற்று சங்கம்
#ஒரு_கிறிஸ்தவர் ........ முடியல சார் உங்க கற்பனை... என்னங்க சார் உங்க பிரச்சனை.... இப்படி புலம்பரீங்க ...
மதச்சார்பற்ற இந்தியாவில் ‘மதவெறி ஊசி’ போடுவதை நிறுத்துங்கள்!
முடியல சார் உங்கள் கற்பனை! எதை எதையோ கோர்த்து ஒரு பொய்யான பிம்பத்தை உருவாக்க எவ்வளவு மெனக்கெடுகிறீர்கள்? மக்கள் உங்கள் பேச்சைக் கேட்டால் மதவெறி ஆதங்கத்தில் புலம்புகிறீர்கள் என்பதை புரிந்துகொள்வார்கள்.
1. ஜெகன்மோகன் ரெட்டி குறித்த பொய்.
ஜெகன்மோகன் ரெட்டி அவர்கள் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குப் பட்டு வஸ்திரம் சமர்ப்பித்ததும், சாரதா பீட சங்கராச்சாரியாரைச் சந்தித்து ஆசி பெற்றதும் வீடியோ ஆதாரங்களுடன் செய்திகளில் வந்தவை.
அவர் காலத்தில் 53 லட்சம்பேர் மதம் மாற்றிக் கொண்டதாக நீங்கள் சொல்வது அப்பட்டமான பொய்.
கிறிஸ்தவர் என்றால் யார்?
"கிறிஸ்துவை உடையவன்" என்று அர்த்தம். சரிதான். தமிழ்நாட்டில் நீங்கள் குறிப்பிடும் தலைவர்கள் (விஜய் அல்லது உதயநிதி) தங்களை ஒரு மதத்திற்குள் மட்டும் சுருக்கிக் கொள்ளவில்லை. ஒருவர் "எல்லாமே சாமி" என்கிறார், மற்றொருவர் "சாமியே இல்லை" (பகுத்தறிவு) என்கிறார். இதில் எங்கே வந்தது 'கிறிஸ்தவ ஈக்கோ சிஸ்டம்'? உங்கள் அரசியலுக்காக அவர்களைக் கட்டாயப்படுத்தி ஒரு மத முத்திரை குத்துவது ஏன்?
உயர் பதவிகள் யாருக்குச் சொந்தம்?
ஒரு கிறிஸ்தவர் அல்லது பிற மதத்தவர் உயர் பதவிக்கு வருவது உங்களுக்கு ஏன் இவ்வளவு எரிச்சலைத் தருகிறது? இது மதச்சார்பற்ற இந்தியா. அரசியலமைப்புச் சட்டத்தின்படி எந்த ஒரு குடிமகனும், எந்தச் சமயத்தைச் சார்ந்தவராக இருந்தாலும், மக்கள் ஆதரவு இருந்தால் உயர் பதவியை அடையலாம். அதைத் தடுப்பதற்கு அல்லது விமர்சிப்பதற்கு நீங்கள் யார்?
மக்களை ஏமாற்றாதீர்கள்:
சிறுபான்மையினர் அரசியலுக்கு வருவதையே ஏதோ சதித் திட்டம் போலச் சித்தரித்து, மக்களிடையே மதவெறி ஊசி போடப் பார்க்கிறீர்கள். இந்திய ஜனநாயகத்தில் மக்கள் யாரைத் தேர்ந்தெடுக்கிறார்களோ, அவர்களே தலைவர்கள்.
மதத்தை வைத்து அரசியல் செய்யாமல், மக்கள் நலனைப் பேசி அரசியல் செய்யுங்கள் சார்!
07/05/2026
திராவிட மொழியியலின் தந்தை என்று அழைக்கப்படும் இராபர்ட்டு கால்டுவெல் அவர்களின 212வது பிறந்த நாள் 07.05.2026
இளமைக் காலம்
இவர் 1814 ஆம் ஆண்டு மே மாதம் அயர்லாந்தில் பிறந்தார். இளமையிலேயே சமயப்பற்று மிக்கவராகக் காணப்பட்டார். தொடக்கத்தில் தானாகவே கல்வி பயின்ற இவர், பின்னர் கிளாசுக்கோ பல்கலைக்கழகத்தில்இணைந்து கல்வி பயின்றார். அங்கே அவருக்கு ஒப்பியல் மொழி ஆய்வில் ஆர்வம் ஏற்பட்டது. 24 வயதாக இருந்தபோது இலண்டன் மிசனரி சைட்டி என்னும் கிறித்தவ மதக் குழுவினருடன் சேர்ந்து, மதத்தைப் பரப்புவதற்கென்று 1838, சனவரி 8 ஆம் தேதி சென்னைக்கு வந்து தமது மதப்பணியைத் தொடங்கினார். அவர் சென்னைக்கு அன்னை மேரி என்னும் கப்பலில் பயணித்த போது கடலில் ஏற்பட்ட சூறைக்காற்றுக் காரணமாக இன்னொரு பிரெஞ்சு கப்பலுடன் மோதி ழூழ்கியதில் ஆறு பேர் மட்டுமே உயிர் பிழைத்தனர். அதில் இராபர்ட்டு கால்டுவெல்லும் ஒருவராவார். பின்னர் இவர் நற்செய்தி பரப்புவதற்கான சபை (Propagation of the Gospel Mission)எனும் குழுவினருடன் இணைந்து கொண்டார். தனது பணிக்குத் தமிழ் மொழி அறிவு முக்கியம் என்பதை உணர்ந்த கால்டுவெல், தமிழை முறைப்படி பயிலத் தொடங்கினார்.
மொழியியல் ஆய்வுகள்
1841ல் குரு பட்டம் பெற்றுத் திருநெல்வேலி சென்று அங்கே இடையன்குடி என்னும் ஊரில் தங்கி 50 ஆண்டுகள் தமது மதப்பணியுடன் சேர்த்து தமிழ்ப்பணியும் செய்தார். இவர் ஆங்கில மொழியில் ஆக்கிய திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் நூல் உலகெங்கும் இவருக்கு மிகுந்த புகழ் ஈட்டித்தந்தது. தமிழ்மொழி உலகின் முதல் மொழி என்றும் .மலையாளம் ,தெலுகு ,கன்னடம் எல்லாம் தமிழ் மற்றும் பிற மொழி கலப்பில் வந்தது என்றும் கண்டுபிடித்தார் .அதனால் இம்மொழிகளை எல்லாம் ஓரினத்தைச் சேர்ந்தவை என்பதை இந் நூல் மூலம் உலகம் ஒப்ப விளக்கிச் சொன்னார். தமிழ் மொழிக் குடும்பம் ஒன்று இருப்பது பற்றிக் கண்டு பிடித்தது இவரல்லர் எனினும், அதற்கான சான்றுகளை ஒருங்கிணைத்து உறுதிப்படுத்தியவர் இவரே குமரி முனைக்குத் தென்பால் உள்ள பெருநாட்டில் முதன் முதல் தோன்றி வாழ்ந்த நன்மக்களே ஒரு காலத்தில் இந்திய நாடெங்கும் பரவிய தமிழர் ஆவர். தமிழரை வடமொழியாளர் திராவிடர் என்று அழைத்தனர். குமரிக் கண்டத்தைக் கடல் கொண்ட பொழுது இவருள் சில பகுதியினர் கடல் வழியாகவும், நில வழியாகவும் பெலுசித்தான், மெசபடோமியா முதலிய வடமேற்கு ஆசிய நாடுகளில் சென்று வாழ்ந்தனர். – அறிஞர் கால்டுவெல்
வரலாற்று ஆய்வுகள்
திருநெல்வேலியில் பணியாற்றிய காலத்தில் அதன் வரலாறு பற்றி ஆய்வுகள் செய்துள்ளார். தகவல் சேகரிப்புக்காகச் சங்க இலக்கியங்களின் ஏட்டுப் பிரதிகளைப் படித்தது மட்டுமன்றி, அகழ்வாய்வுகளில் ஈடுபட்டுப் பல பண்டைய கட்டிடங்களின் அடிப்படைகளையும், ஈமத் தாழிகள், நாணயங்கள்முதலானவற்றையும் வெளிக் கொணர்ந்துள்ளார். மீன் சின்னம் பொறிக்கப்பட்ட பாண்டிய நாட்டுக் காசுகள் பல இவ்வாய்வுகளில் கிடைத்துள்ளன. இந்த ஆய்வுகளின் பெரும் பேறாக "திருநெல்வேலி மாவட்டத்தின் அரசியல் மற்றும் பொது வரலாறு (A Political and General History of the District of Tinnevely) என்னும் நூலை எழுதினார். இது 1881 ஆம் ஆண்டில் மதராசு அரசினால் வெளியிடப்பட்டது. இது பற்றிக் குறிப்பிட்ட இராபர்ட்டு எரிக்கு ஃபிரிக்கென்பர்க்கு (Robert Eric Frykenberg) என்பார், தொல்லியல், கல்வெட்டியல், இலக்கியம் ஆகிய மூலங்களிலிருந்தான தகவல்களைக் கொண்டு எழுதப்பட்ட இந்நூல் தனி நூல்களுள் முழுமைத் தன்மையில் முதன்மையானது என்றார்.
கால்டுவெல் இயற்றிய தமிழ் நூல்கள்
• நற்கருணை தியான மாலை (1853)
• தாமரைத் தடாகம் (1871)
• ஞான ஸ்நானம் (கட்டுரை)
• நற்கருணை (கட்டுரை)
• பரதகண்ட புராதனம்
கால்டுவெல் இயற்றிய ஆங்கில நூல்கள்
• திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் (A Comparative Grammar of the Dravidian or South Indian Family Languages, 1856)
• திருநெல்வேலியின் அரசியல் பொது வரலாறு (A Political and General History of Tinnevely, 1881)
Click here to claim your Sponsored Listing.